tag:blogger.com,1999:blog-62952475418520547742023-11-15T23:20:39.968-08:00சு.செந்தில்குமரன்இதயம் சொல்லும்
எழுத்துக்கள் இவை.
எனவே உங்கள் இதயத்துக்கும் பிடிக்கும்.
காரணம் இவை
என் இதயத்தின்
ரத்தமும் வியர்வையும்!சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comBlogger98125tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-12201098033011185412012-05-30T01:18:00.000-07:002012-05-30T01:18:08.844-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
நியாயமா கோபிநாத் ?
*********************************
நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர் (பவர் ஸ்டார் ) சீனிவாசனிடம் கோபி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து பலரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள் .
இந்த நிலையில் எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது .
பத்து வருடங்களுக்கு முன்பு தேவி வார இதழில் 'ஜீவ குமாரனின் சின்னத்திரைக் குறிப்புகள்' என்ற பெயரில் டிவி நிகழ்ச்சிகளைப் பற்றி நானா வாரவாரம் எழுதுவேன் .
அப்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் விவாதம் ஒன்றில் ஒரு கபடி வீரரும் சின்னத்திரை நபர் பாஸ்கியும் எதிர் எதிர் நிலையில் வாதம் செய்தார்கள் .கபடி கிரிக்கெட் இரண்டில் எந்த விளையாட்டு உசத்தி என்பதுதான் டாபிக் .
நிகழ்ச்சி நடத்துனராக இதே கோபிநாத் ,
கபடி வீரர் மிகவும் கண்ணியமாக தனது கருத்துக்களை எடுத்து வைக்க, பாஸ்கியோ கிரிக்கெட்டுக்கு ஆதரவாகப் பேசுவதை விட்டு விட்டு கபடியையும் கருப்பாக உள்ள அந்த கபடி வீரரையும் கிண்டல் செய்தே பேசிக் கொண்டிருந்தார் . கோபிநாத் அதைக் கண்டிக்கவே இல்லை .
நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அதீத கோபம் . மறுவாரம் தேவி வார இதழ் சின்னத்திரைக் குறிப்புகள் நிகழ்ச்சியில் என் நியாயமான கோபத்தை கட்டுரையாக வடித்தேன் . இதில் பாஸ்கியைக் கண்டிப்பதை விட , இதை அனுமதித்த கோபிநாத் தான் பெரிய குற்றவாளி என்று எழுதினேன் . காரணம் , நியாயம் இல்லை என்றாலும் பாஸ்கி ஒரு தரப்புக்கு பேசுகிறார் . கோபிநாத்தோ நிகழ்ச்சியை நடத்துபவர் . எப்படி ஒரு பத்திரிக்கையில் நிருபர் எழுதும் கருத்துக்களுக்கு ஆசிரியரே பொறுப்பாக ஆகிறாரோ , அது போல பாஸ்கி பேசிய விசயங்களுக்கு கோபியே பொறுப்பு என்று எழுதினேன் .
பிறகு ஒருமுறை முதன் முதலாக கோபியை சந்திக்கும் வாய்ப்பு வந்தபோது நான் யாரென்று தெரிந்ததும் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்காக கோபி என்னிடம் மன்னிப்பு தெரிவிக்கும் விதத்தில் பேசினார் .
ஒரு நிகழ்ச்சி நடத்துனராக என்னை செழுமைப் படுத்தியதில் ஜீவ குமாரனின் சின்னத்திரைக் குறிப்புகளுக்கு பெரும் பங்கு உண்டு என்று பின்னாளில் அவர் குறிப்பிட்டதாக எல்லாம் எனக்கு செய்திகள் வந்தன
அது வளரும் கோபிநாத் .
ஆனால் இன்று இருப்பவர் வளர்ந்த கோபிநாத் .
வேறு என்ன சொல்ல?<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinr9q3WExRIuE4Xuy-8ohjFDMO3Xm8c0AuRafCeKjF_rgLXVqqA26nC7t607XmWGE3Mj_D3MNol8GKhLTUUFgOF3KbQxZSCFm03jBprkKDhLrMWN5tF-xN6LFmPq3eglA5v_DFcza9xliD/s1600/gopi.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="240" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinr9q3WExRIuE4Xuy-8ohjFDMO3Xm8c0AuRafCeKjF_rgLXVqqA26nC7t607XmWGE3Mj_D3MNol8GKhLTUUFgOF3KbQxZSCFm03jBprkKDhLrMWN5tF-xN6LFmPq3eglA5v_DFcza9xliD/s400/gopi.jpg" /></a></div>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-809072934984308092012-05-23T00:24:00.001-07:002012-05-23T00:25:43.698-07:00<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE5KEDsP21jlp8xhbTmnM-XQrucP5v6Wo2whCRceV269huu4RMQFaLeAFRJnoaInR-rWYmJWrJjHIKZaCssv-DQHU-tNKZmjuvgy1_nWDJ300tLTvTQBb1j1GM3uU_1kp-9k2qJcbUlgot/s1600/threes.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="225" width="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE5KEDsP21jlp8xhbTmnM-XQrucP5v6Wo2whCRceV269huu4RMQFaLeAFRJnoaInR-rWYmJWrJjHIKZaCssv-DQHU-tNKZmjuvgy1_nWDJ300tLTvTQBb1j1GM3uU_1kp-9k2qJcbUlgot/s400/threes.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8_wZymZ7RVxgTmjaQ_K88c-vIEZyWbsjSqY6oHfD91dIl3hySxpfL47fbWlteR8GkUr9Ojq2R1qXI5SDtCZ4HmKttjrhCyG8cSbynhfG9m5aSEKY70IUU2h2RK6pG_RnL45DvhPUtONsk/s1600/both.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="400" width="274" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8_wZymZ7RVxgTmjaQ_K88c-vIEZyWbsjSqY6oHfD91dIl3hySxpfL47fbWlteR8GkUr9Ojq2R1qXI5SDtCZ4HmKttjrhCyG8cSbynhfG9m5aSEKY70IUU2h2RK6pG_RnL45DvhPUtONsk/s400/both.jpg" /></a></div>
<b>ராஜ்ய சபாவில் ஒரு சக்களத்தி சண்டை
****************************************
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு பாராளுமன்றத்துக்குப போகிறவர்கள் மட்டுமல்லாது , தேர்தல் மற்றும் ஆரவார அரசியல் இவற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் , நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் , திறமை, ஆர்வம் இருக்கலாம் . அவர்களையும் ஆட்சிக் கட்டிலில் பயன்படுத்தி , அதன் மூலம் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மாநிலங்களில் மேலவையும் மத்தியில் ராஜ்ய சபையும் உருவாக்கப் பட்டது.
ஒரு நிலையில் அந்த நோக்கமே பலகீனமாகி , கீழ் சபை செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவாவது இந்த ராஜ்யசபா பயன்பட்டது .
பின்னர் இன்னும் சீரழிந்து... ஆள்வோருக்கு வேண்டியவர்களை கவுரவப் படுத்த் , அவர்களின் சமூக அக்கறை பற்றியெல்லாம் கவலைப் படாமல் ராஜ்யசபையில் இடம் கொடுக்கப் பட்டது . அவர்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் . ஆள்வோருக்கு வேண்டியவர்களாக இருக்க வேண்டும் . அவ்வளவுதான் .
அதனால் இப்போது இன்னும் நிலைமை மோசம் .!
கீழ் சபையில் மேசை நாற்காலிகளை உடைக்கும் எம். பிக்களே பரவாயில்லை என்று ஆகிவிட்டது ராஜ்யசபையில் நடக்கும் ஒரு கூத்தினைப் பார்க்கும்போது . . குற்றப் பின்னணி உள்ளவர்கள் எம் பிக்களாக இருப்பதே அவமானம் என்ற நிலையில், ராஜ்ய சபாவிலோ ஒரு படி மேலே போய், இப்போது சக்களத்தி சண்டையே நடந்து கொண்டி இருக்கிறது .
ராஜ்யசபைக்கு இப்படி ஒரு சிறப்பைக் கொடுத்திருப்பவர் ஜெயாபச்சன் . அமிதாப் பச்சனின் மனைவி .
இந்த சக்களத்தி சண்டைக்குப் ;பின்னால் ஒரு காதல் , ஒரு திருமணம் , ஒரு ரகசியக் காதல் , ஒரு பிரிவு , அதன் பின் எழுந்த பகை எல்லாம் இருக்கிறது .
1970 களில் அமிதாப் பச்சன் இந்திப் பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆகக் கொடிகட்டிப் பறந்த போது (அப்போதைய) இந்தி நடிகை ஜெயா பாதுரியோடு காதல் ஏற்பட்டது . இருவரும் இணைந்து நடித்த சஞ்சீர் , அபிமான் . ஷோலே போன்ற படங்கள் பெருவெற்றி பெற , இந்த ராசியான ஜோடிக்குள் காதல் வந்தது . இவர்கள் வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்து , 1973 ஜூன் மாதம் மூன்றாம் தேதி (கலைஞர் வாழ்த்து அனுப்பினாரா?) திருமணம் செய்து கொண்டனர் .
ஜெயா பாதுரி ஜெயா பச்சன் ஆனார் .
மிக உயரமான அமிதாப்புக்கும் மிகக் குளமான ஜெயா பச்சனுக்கும் வந்த காதல் , உடல் பொருத்தங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீகக் காதல் என்று அப்போது இந்தியா முழுக்க சிலாகிக்கப் பட்டது . தூங்காதே தம்பி தூங்காதே என்ற தமிழ் படத்தில் கூட, நடிகை சுலக்ஷனாவிடம் கமல்ஹாசன் "நீ ரொம்ப குள்ளம் எனக்கு பொருத்தமாக இல்லை" என்று சொல்ல , அதற்கு பதிலாக சுலக்ஷ்னா சொல்லும் " அமிதாப் ரொம்ப உயரம் . ஜெயா பாதுரி ரொம்ப குள்ளம் . அவங்க கல்யாணம் கட்டிக் கொண்டு ஊரு மெச்ச வாழலியா?" என்ற வசனம் தமிழகத்தில் கூட கைதட்டலோடு ரசிககப் பட்டது .
ஆனாலும் அமிதாப்பும் ஜெயாபச்சனும் ஒரேயடியாக ஊரு மெச்ச வாழவில்லை . காரணம் இந்தி நடிகை . ரேகா . நம்ம காதில் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் .
1976 ஆம் ஆண்டு தோ அஞ்சனே என்ற படத்தில் அமிதாப்புடன் முதன் முதலில் ஜோடியாக நடித்தார் ரேகா. அதே வருடத்தில் இருவரும் இணைந்து நடித்த முக்குவாதா சிக்கந்தர் என்ற படம் பெரும் வெற்றி பெற்றது . அமிதாப் --ரேகா ராசியான ஜோடி ஆனார்கள் .
அதோடு போயிருந்தால் கூட நம்ம ராஜ்யசபா அசிங்கப் பட்டிருக்காது .
இருவருக்கும் இடையே காதல் வந்தது ; (ரேகா சுமாரான உயரம்). அமிதாப் பலநாட்கள் ரேகா வீட்டிலேயே தங்கினார் . பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின ."அமிதாப்தான் என் கணவர்" என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார் ரேகா .ஜெயா பச்சன் கொதித்து எழுந்து மோதினார் .. ஒரு படப் பிடிப்பில் ரேகாவின் மேகப் அறைக்குள் நுழைந்து ஜெய பச்சன் சண்டை போட , இருவரும் கைகலந்ததாகவும் அப்போது மும்பை (சரி .. பம்பாய் ) ப் பத்திரிக்கைகள் கிசுகிசுத்தன .
1981 யாஷ் சோப்ராவின் சில் சிலா என்ற படத்தில் ஜெயா பச்சன் அமிதாப்பின் மனைவியாகவும் ரேகா அமிதாப் பின் காதளியாகவுமே நடித்தனர் .. அதுதான் ரேகா அமிதாப் இணையின் கடைசி படம் . (இது யாஷ் சோப்ராவின் குசும்பு )
அதன் பின்னரும் மோதல் நிற்கவில்லை .
"இனி ரேகா என் கண்ணெதிரில் வந்தால் செருப்பால் அடிப்பேன் "என்று ஜெயா பச்சனும் , "ஜெயாவை பார்த்தால் கடித்துக் குதறுவேன் "என்று ரேகாவும் 'மிக கண்ணியமாக ' பேட்டி கொடுத்த நாட்களும் உண்டு .
அதன் பின்னர் சுமார் 20 வருடம் ௦ அடங்கிப் போயிருந்த சண்டையை மீண்டும் தூண்டிய பெருமை, நம்ம ராஜ்யசபவையே சேரும் .
முன்பே சொன்னது போல , யாரை வேண்டுமானாலும் ராஜ்ய சபா எம்பியாக ஆக்கலாம் என்ற புதிய சித்தாந்தத்தின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சி மூலம் ஜெயா பச்சன் ராஜ்ய சபா எம்பியானார் . . அதற்கு எதிர்கட்சியாக இருந்த காரணத்தாலோ என்னவோ , காங்கிரஸ் அந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் . ஜெயாபச்சனின் 'குடும்ப எதிர்க்கட்சியான' ரேகாவை ராஜ்யசபா எம்பியாக்கியது காங்கிரஸ் . (நல்ல அரசியல்)
ஐயோ... பத்திகிச்சு !
"அவையில் ஜெயா பச்சனின் இருக்கை எண் 91 . ரேகாவின் இருக்கை எண் 99 ..இதற்கே "ரேகாவுக்குப் பக்கத்துப் பக்கத்தில் உட்கார முடியாது "என்றார் ஜெயா பச்சன் (ஒரு வேளை அடுத்தடுத்த இருக்கை வந்திருந்தால் சொன்ன படியே அடித்தும் கடித்தும் கொண்டிருப்பார்களோ என்னவோ ?). மாற்று இருக்கை வேண்டும் என்று 143 எண் இருக்கையைகே கேட்டு வாங்கிக் கொண்டார் ஜெயா பச்சன் . .ராஜ்யசபா எத்தனை ஏக்கரில் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார் என்பதை அவர் சொல்லவே இல்லை
இதோடு முடிந்திருநதால் கூட .பரவாயில்லை . சரி விட்ட குறை ....(அமிதாப் ) தொட்ட குறையாக கோபம் இருக்கும் என்று நினைத்து விடலாம் . ஆனால் அடுத்து நடந்ததுதான் கோளாறு .
ரேகா ராஜ்யசபாவில் எம் பியாகப் பதவி ஏற்றுக் கொண்டது வழக்கப் படி ராஜ்யசபா டிவியில் ஒளிபரப்பப்பட்டது அப்போது அவையில் அமர்ந்திருந்த ஜெயா பச்சனையும் டிவியில் காட்டினார்களாம் .
இதற்குப் போய் ஆத்திரமடைந்த ஜெயாபச்சன் , ராஜ்ய சபா டிவி ஒளிபரப்புச் செயலாளர் மீது '"என்னை தேவை இல்லாமல் காட்டினார்கள் " என்று குற்றம் சாட்டிப் புகார் கொடுத்துள்ளார் .
தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் அந்த டிவி ஒளிபரப்பாளர்கள்;
ஒரு நடிகையாக இருந்தவர் தன் முகத்தைக் காட்டியதற்காக கோபப் படும் அதிசயம் எல்லாம் நம்ம ராஜ்யசபாவில்தான் நடக்கும்
ஜெயலிதா தலைமை ஏற்கும் விழாவுக்கு (ஒருவேளை ) கலைஞர் வந்து அமர்ந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு பாராட்டு வாசிக்கப் படும்போது கலைஞரின் முக பாவனை எப்படி இருக்கும் என்று காட்டுவதும், ஒரு விழாவில் விஜய்க்கு விருது வழங்கினால் அப்போது அங்கு இருக்கும் அஜீத்தின் முகபாவனை எப்படி இருக்கும் என்று காட்டுவதும் ஊடகப் பணியின் ஓர் அங்கம் . ஒரு வேளை இவர்கள் எல்லாம் அப்படி ஒரு விழாவுக்கு வருவதையே கண்ணியமாக தவிர்ப்பர்களே தவிர , "என்னை ஏன் காட்டினாய்?' என்று நேரடியாக புகாரெல்லாம் செய்ய மாட்டார்கள் .
ஆனால் ஜெயா பச்சனோ ராஜ்யசபாவை சக்களத்தி சண்டைக் களமாக மாற்றுகிறார் . அங்கு பணியாற்றுபவர்களையும் உள்ளே இழுத்து விடுகிறார் ."இந்த பக்குவம் கூட இல்லாத இவர்களை குறை சொல்வதா ? அல்லது இவர்களை எல்லாம் உறுப்பினராக்கிய அரசியல் கட்சிகளைச் சொல்வதா" என்று வேதனைப் படுகிறார்கள் நியாயமான உறுப்பினர்கள் .
பேசாமல் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மேலவையைக் கலைத்தது போல , ராஜ்ய சபாவையும் கலைத்து விடலாம் தப்பே இல்லை .
</b>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-33662061857817255052012-04-01T21:55:00.003-07:002012-04-01T22:01:09.086-07:00மல்லிகை மகள் இதழுக்காக ராமராஜனுடன் ஒரு சந்திப்பு ....<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF9wFcS6Ba1IJtIsOpihAmmxjHXibM2ZDbKt_eNiHtnOeWLjwspq5S7PcxaDztDc_n20z2jD-H4Xo2CDWdcZ4zW6ZpJP_fm3od-c2n_6fXvypBnzkaIo9p40tCkR5-cfXBax-ABCM5tEpC/s1600/ramarajan.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF9wFcS6Ba1IJtIsOpihAmmxjHXibM2ZDbKt_eNiHtnOeWLjwspq5S7PcxaDztDc_n20z2jD-H4Xo2CDWdcZ4zW6ZpJP_fm3od-c2n_6fXvypBnzkaIo9p40tCkR5-cfXBax-ABCM5tEpC/s400/ramarajan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5726663612404557330" /></a><br /><span style="font-style:italic;">அண்மையில் மல்லிகை மகள் இதழுக்காக ராமராஜனுடன் ஒரு சந்திப்பு ....<br />*******************************************<br /></span><br /><span style="font-weight:bold;"> வாழ்க்கை என்பது ...<br />*************************** மனம் திறக்கும் (கி)ராமராஜன் </span><br /><br /><br /><span style="font-weight:bold;"><br />நடிகர் ராமராஜன் .....<br />தமிழ் சினிமாவில் வானத்தில் இருந்து குதித்ததாக கருதிக் கொண்ட பெரிய மனிதர்களையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, பாமரத்தனமும் மண் வாசனையும் கொண்ட ஓர் எளிய மனிதன்,வெள்ளித் திரையில் விஸ்வரூபம் எடுத்த வரலாற்றின் முகவரி ....<br /><br />இயல்பான நடையுடை பாவனைகளால் சூப்பர் ஸ்டார்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவு வெற்றி அடைந்த அதிசயத்துக்கு சொந்தக்காரர் , <br /><br />நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஏற்றத்தை மட்டும் அல்ல.... அதே வேகத்தில் யோசிக்கக் கூட முடியாத சரிவுகளையும் சந்தித்த நவீன தியாகராஜ பாகவதர் . <br /><br />ஆனாலும் ஒரு அட ....!<br /><br />பதினொரு வருடங்களுக்கு பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடித்த மேதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அன்று அந்தக் காட்சி ! . இன்று மார்க்கெட்டில் உள்ள பல நடிகர்களுக்கு கூட காண முடியாத காட்சி அது . ஊர்ப்புறங்களில் இருந்து எல்லாம் வேனை எடுத்துக் கொண்டு கொடிகட்டிக் கொண்டு கரகாட்டக்காரன் போன்ற படங்களின் பாடல்களை உரத்து ஒலித்துக் கொண்டு சென்னை வந்து , விழா நடந்த அரங்கினை கலக்கிய மாறாத ஒரு ரசிகர் கூட்டத்தை அங்கு பார்க்க முடிந்தது .<br /><br />ராமராஜனின் இன்றைய பொருளாதார சூழலில் காசு கொடுத்து அவர்களை திரட்டி இருக்க அவரால் முடியாது . அது தானாக வந்த ரசிகர் கூட்டம் என்பதால் எழுந்த ஆச்சர்யம் அது . <br /><br />மேதை படமும் வெளியாகி விட்டது . அது ஒரு புறம் இருக்க ராமராஜனோடு பேசுவது இன்னும் கூட சுவையான விசயமாகவே இருக்கிறது . <br /><br /><span style="font-style:italic;">நீங்கள் கிராமிய நாயகனாவே நடித்து பேர் வாங்கியது திட்டமிட்டதா ? அதுவாகவே அமைந்ததா?</span><br /><br />நான் எந்த திட்டமும் இடவில்லை . சுமார் நாற்பது படங்களில் உதவி , இணை இயக்குனர் .. அப்புறம் ஐந்து படங்களின் இயக்குனர் என்று வாழ்க்கை போய்க்கொண்டு இருந்த போது , என்னை கதாநாயகனாக வைத்து படம் இயக்கலாம் என்று மறைந்த இயக்குனர் அழகப்பனுக்கு தோன்றியிருக்கிறது . கதை சொல்ல எஸ் என் ரவி என்பவரை அனுப்பி வைத்தார். மெரீனா கடற்கரையில் உட்கார்ந்துதான் கதை கேட்டேன் . அவர் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் முழு படத்தையும் சொல்லி முடித்த விதம் அற்புதம் . அது கிராமமா நகரமா என்று நான் பார்க்கவில்லை . அதில் நடிக்க வேண்டும் என்று தோன்றியது . அது ஒரு கிராமத்துக் கதை .அது நம்ம ஊரு நல்ல ஊரு என்ற பெயரில் படமாகி வெற்றி பெற்றது . அடுத்து கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் .அது பெரும் வெற்றி பெற்றது .அதுவும் கிராமியப் படம் . <br /><br />அது மட்டும் இல்லாம , நம் நடிப்பில் என்ன தனித்தன்மை கொண்டு வரலாம் என்றுநான் யோசித்த போது புரட்சித் தலைவர் . நடிகர் திலகம் , ரஜினி சார , கமல் சார் இவர்களைப் போல எனக்கு பெரிதாக ஒன்றும் தனித் தன்மையாக அமையவில்லை . சரி ....ஊரில் நாம் இருந்த மாதிரி அதே குமரேசனின் (ராமராஜனின் இயற்பெயர் ) நடையுடை பாவனைகளையே நடிப்பில் காட்டலாம் என்று தீர்மானித்தேன் . அது கிராமியப் படங்களுக்குதானே செட் ஆகும் . அதனால் அப்படியே நான் கிராமத்து நாயகனாக ஆனேன் . <br />நான் நகர்ப் பின்னணியில் நடித்தது ரெண்டே படங்கள்தான் . <br /><br /><span style="font-style:italic;">உங்கள் சொந்த ஊரான மேலூரில் ஒரு டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழிப்பவராக வாழ்ந்த போது வாழ்க்கையில் என்ன ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டீர்கள்?</span><br /><br />பெரிதாக ஒன்றும் இல்லை .ஆனால் சினிமா மீது ஆசை . தலைவரின் எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் சினிமா ஷூட்டிங் நடப்பதை காட்சியில் காட்டுவார்கள் . அதில் ட்ராலி தள்ளுபவர்களை எல்லாம் பார்க்கும் போது 'இது மாதிரி ஒரு வேலையை சினிமாவில் செய்து பிழைத்தால்கூட போதும்' என்று தோன்றியது . செத்துப் போன பின்னும் நம் முகம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் . அது போட்டோவாக மட்டும் இருக்க கூடாது .அவ்வளவுதான் சார் என் லட்சியம் . சினிமா கொட்டாயில் வேலை பார்த்தால் சினிமா பார்க்க காசு தரத் தேவை இல்லை . திரும்ப திரும்ப ஒரே படத்தை கூட பல தடவை பார்க்கலாம் . அதனால்தான் அந்த வேலை . <br /><br /><span style="font-style:italic;">சென்னைக்கு கிளம்பிய முதல் அனுபவம் எப்படி இருந்தது ?</span><br />ஒரு நிலையில் மெட்ராஸ் கிளம்பும் ஆசை அதிகம் ஆனது . என்னால் தாங்க முடியவில்லை . சினிமாவில் நடிக்க சென்னை போகிறேன் எனறால் வீட்டில் விடமாட்டார்கள் . கொட்டகையில் வேலை பார்க்க அனுமதி பெற்றதே பெரிய விஷயம் .அப்போது என் சின்னம்மா மகன் கோபால் டெல்லியில் இருந்தார் . அவருடன் இருந்து வேலை பார்க்க டெல்லி போவதாக அனுமதி பெற்று , அவரோடு டெல்லி போய் மூணு மாசம் அங்கே இருந்தேன் . அவருக்கு மெல்ல என் ஆசையை புரிய வைத்து டெல்லியில் இருந்து சென்னை வந்தேன் . <br /> முதன் முதலில் இயக்குனர் காரைக்குடி நாராயணன் , அடுத்து காஜா பின்னர் ராஜசேகர் பின்றோரிடம் பணியாற்றி பிறகு எங்கள் இயக்குனர் ராம நாராயணிடம் பணியில் சேர்ந்து பிறகு அவர் சொந்தப் படத்தையே இயக்கும் அளவுக்கு வந்தேன் . அப்புறம்தான் கதாநாயகன் ஆனேன் .<br /><br /><span style="font-style:italic;">மிகுந்த உயரத்தில் வசதியாக இருக்கும் போது கூட ஒரு பத்திரிக்கை உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று கேட்டபோது பழைய சோறும் வெங்காயமும் என்று சொன்ன உங்கள் பதிலில் எந்த போலித்தனமும் இல்லை . எப்படி வந்தது எந்த எளிமை ?</span><br /><br />சார் .....என்னால் பந்தா பண்ண முடியாது .எனக்கு அது தெரியாது . எனக்கு கடைசிவரை அது வரவில்லை . நான் விரும்பவும் இல்லை . எளிமையாக இருப்பது கஷ்டம் இல்லாமல் சுகமாக இருந்தது . அதுதான் எனக்கு முடியும் . இன்னிக்கும் கூட அதான் சார் . <br /><br /><span style="font-style:italic;">நீங்கள் புகழின் உச்சத்தில் இருந்த போது பெரிய பெரிய பட நிறுவனங்கள் எல்லாம் உங்களை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க முன்வந்தபோது அதை மறுத்து பல படங்களை இழந்தீர்கள் . புதியவர்களை தயாரிப்பளார் ஆக்கி விட்டீர்கள் . விளைவாக உங்களுக்கு என்று ஒரு பின்புலம் இல்லாமல் போய்விட்டது .உங்கள் கருத்து தவறு என்று அன்று ரஜினிகாந்தே கூறியதாக கூட ஒரு தகவல் உண்டு . பெரிய நிறுவனங்களை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இப்படி வீழ்ந்திருக்க மாட்டீர்கள் அல்லவா ?</span><br /><br />சார் .. என்ன தான் எண்ணைய தேச்சுகிட்டு மண்ணுல விடிய விடிய பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் . <br /><br />அப்புறம் ,,,, அப்ப நான் அப்படி செய்ததுக்கு காரணம் உண்டு . பெரிய தயாரிப்பாளர்களிடம் பணம் முன்பே நிறைய இருக்கு .நாம இல்லாட்டியும் அவங்க கெட்டுப் போயிட மாட்டாங்க . அதுக்கு பதிலா , புதுசா தயாரிப்பளார் ஆக ஆசைப் படறவங்களை நாம கைதூக்கி விட்டா , நாலு புது தயாரிப்பாளர் வருவாங்க . சினிமா நல்லா இருக்கும் . இது ஒரு காரணம் . <br /><br />ரெண்டாவது ..நான் படத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் சிகரெட் குடிக்கிறது தண்ணி அடிக்கறது போல நடிக்க கூடாதுன்னு தீர்மானமா இருந்தேன் . ஒரே ஒரு படத்துல மட்டும் ஆரம்பத்துல தண்ணி அடிக்கிற மாதிரி நடிச்சுட்டு நான் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும் . பெரிய தயாரிப்பாளர் இயக்குனர் படங்கள்ல நடிக்க போகும்போது அவங்க அப்படி நடிக்க சொன்னா மறுக்க முடியுமா? புரட்சித் தலைவருக்கு அந்த தைரியம் இருந்தது . நமக்கு அது இல்லை . <br />மணிரத்னம் சார் டைரக்ஷன்ல நானும் ஸ்ரீதேவியும் ஜோடியா நடிக்கற வாய்ப்பு கூட எனக்கு அப்ப வந்தது . ஏவி எம் மேனா திரையரங்க மேலாளர் என்கிட்ட அந்த படத்தை ஒத்துக்க சொன்னார் . மணிரத்னம் சார் குடிக்கிற மாதிரி ஒரு சீன் வச்சார்னா அவர்கிட்ட கிட்ட போய் குடிக்கிற மாதிரி நடிக்க முடியாது னு சொல்ல முடியுமா ? பெரு கெட்டுப் போயிடும் .அதான் மறுத்துட்டேன் . <br /><br />நான் பண்ணினது சரியானு தெரியல . ஆனா தப்புன்னு எனக்கு இப்பவும் தோணல . என்ன பண்ணினாலும் நல்ல நேரம் இருந்தா நல்லது நடக்கும் . கெட்ட நேரம் வந்தா அதையும் அனுபவிச்சுதான் ஆகணும் . <br /><br /><span style="font-style:italic;">எம் ஜிஆரின் முகத்தை திரையரங்கில் அண்ணாந்து பார்தது பரவசப் பட்ட வாழ்க்கை உங்கள் ஆரம்ப வாழ்க்கை . ஆனால் உங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ஒரு அமைச்சர் வீட்டு திருமணத்தை விட்டு விட்டு அவர் வந்தார் . அன்று உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது ?</span><br /><br />(உணர்ச்சிவசப்படுகிறார் ) நெனைச்சுப் பாத்தாலே சிலிர்க்குது ... நளினியை நான் திருமணம் செய்தபோது எங்களுக்கு பல மிரட்டல்கள் வந்தன . உண்மையில் எங்களால் சமாளிக்க முடியவில்லை . தாலி கட்டியதும் நேராக எம்ஜிஆர் காலில் விழுந்து விட முடிவு செய்தேன் . அன்று அவர் ஓசூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் இருந்தார் . நாங்கள் கிளம்பிப் போவதற்குள் அவர் மீட்டிங்கை முடித்து விட்டுக் கிளம்பிவிட்டார் . நாங்களும் சென்னை வந்தோம் . ராமாவரம் தோட்டத்துக்கு போனோம் . அது ஒரு மாலை நேரம், சந்திக்க அனுமதி கிடைத்தது . <br /><br />நான் திரையில் பார்த்தே சிலிர்த்த உருவத்தின் முன்னாள் நான் .! அருகில் அவரது துணைவியார் ஜானகி அம்மையார் . சமோசா டீ வரவழைத்துக் கொடுத்தார் தலைவர் சோபாவை விட்டு இறங்கி அவர் காலடியில் உட்கார்ந்து விட்டேன் . அவர் சொல்லியும் எழ மனம் வரவில்லை . அவரைப் பற்றி நான் மெய் சிலிர்த்து பேசியதை அன்போடு சிரித்தபடியே கேட்டார் . எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி கொடுத்தார் . <br /><br />'நீங்கள் வருவதாக இருந்தால் ரிசப்ஷன் வைப்பேன்' என்றேன் .அவர் ஒரு தேதி கொடுத்தார் .சந்தோஷமாக வந்து ஏற்பாடுகள் செய்தோம்..ஆனால் அதே தேதியில் அன்றைய அமைச்சர் கே ஏ கிருஷ்ணசாமி இல்லத் திருமணம இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது . வரமாட்டார் என்றே நினைத்தோம் .<br /><br />திடீர் என வந்தார் . அசந்து போனேன். இதில் ஆச்சர்யம் என்னன்னா , முதல்வர் அமைச்சர் வீட்டு திருமணத்துக்குதான் வருவார்னு போலீஸ் பந்தோபஸ்து எல்லாம் அங்கதான் இருந்தது . ஆனா அவர் எளிமையா என் திருமண வரவேற்புக்கு வந்து ஒரு உறவினர் போல அங்கு இருந்ததை மறக்கவே முடியாது . (மவுனம்)<br /><br /><span style="font-style:italic;">ஒரு கிராமியப் பின்னணியில் உறவுகளோடு பிறந்து வளர்ந்தவர் நீங்கள் . ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை படு தோல்வியில் முடிந்தது. உங்கள் மகள் திருமணம் கூட நீங்கள் இல்லாமலே நடந்தது . எப்படி சமாளித்தீர்கள் ? சமாளிக்கிறீர்கள் ?</span><br /><br />ஒத்து போகல சார் . நானும் நளினியும் பிரியா வேண்டி வந்தது . குழந்தைகளும் அவங்களோடதான் இருக்கணும்னு கோர்ட் தீர்ப்பாயிருச்சு . ஒரு வேளை தீர்ப்பு எனக்கு சாதகமா வந்து 'உங்கள் குழந்தைகளை நீங்க அம்மாவிடம் அனுப்ப வேண்டியது இல்லை'ன்னு சொல்லி இருந்தா கூட , வாரம் ரெண்டு நாள் அவங்க வீட்டுக்கு நானே என் பிள்ளைகளை கண்டிப்பா அனுப்பி இருப்பேன் சார் . ஏன்னா, நம்ம ஈகோ அப்புறம் .ஆனா குழந்தைகளுக்கு அம்மாவும் வேணுமே ... (கண் கலங்குகிறார் ..) ஆனா அவங்க அனுப்பல ... எனக்கு தாங்கவே முடியல . பழகிக்கிட்டேன் . திடீர்னு மகள் அருணாவுக்கு கல்யாணம் முடிவு ஆனப்ப, ஒரு தடவை வந்தாங்க . நல்லாத்தான் எல்லாரும் பேசினாங்க . மறுபடியும் நான் பாக்க முயன்றப்ப முடியல . அப்புறம் வரவும் இல்ல . அதையும் தாங்கிக்கிட்டேன் . <br /><br />என் வாழ்க்கையே சினிமாவுக்குன்னு ஆயிப் போச்சு .... டிக்கெட் கிழிச்ச காலத்துல இருந்து இன்னிவரைக்கும் அதான் . அது என்னை இன்னும் இயக்குது . அதனால தப்பிச்சுக் கிடக்குது என் தனி மனுஷ வாழ்க்கை .<br /><br /><span style="font-style:italic;">ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தது அரசியல் லாபத்துக்க்காகத்தானே ...?<br /></span><br />சத்தியமா இல்ல சார். இன்னைய விசயங்களை விடுங்க .அத நம்ப மாட்டீங்க .. ஆனா... நான் இயக்கிய முதல் படம் மண்ணுக்கேத்த பொண்ணு .அன்னிக்கு அம்மாவும் அரசியல்ல இல்ல . நானும் பிழைப்புக்காக போராடுற ஒரு புதுமுக இயக்குனர்தான் . ஆனா .அன்னிக்கே படத்துல பல இடங்கள்ல தலைவரும் அம்மாவும் இருக்கற போஸ்டர்களைதான் பயன்படுத்தினேன் .அப்பவே என்னை பொறுத்தவரை தலைவரின் வாரிசு அம்மாதான் .<br /><br />அவ்வளவு ஏன்.... தலைவர் மரணத்துக்கு பிறகு அதிமுக ரெண்டா ஒடஞ்ச போது, என்னை ஜானகி அம்மா அணிக்கு வரச் சொல்லி வற்புறுத்தினாங்க . ஆனா மறுத்துட்டேன் . அம்மா பின்னாடிதான் நின்னேன் . <br /><br />என் மேல அவங்க காட்டின அன்பு கொஞ்சமா சார் . எனக்கு அருண் --அருணா ரெட்டைக் குழநதைகள் பிறந்தப்ப மருத்துவமனைக்கு வந்து ரெண்டு குழந்தைகளுக்கும் தங்க செயின் போட்டு வாழ்த்தினாங்க .நான் விபத்துல சிக்கி கைல காசும் இல்லாம உயிருக்கு போராடினப்ப , அவங்கதான் எல்லா செலவையும் பாத்து என்ன காப்பாத்தி விட்டாங்க . <br /><br />கடந்த பதினேழாம் தேதி தலைவரோட பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக தலைமைக் கழகம் போயிருந்தேன் .. என்னை பார்த்த உடனே 'உடம்பு நல்லா இருக்கா'ன்னுதான் கேட்டாங்க ..அவங்க என்னை பொறுத்தவரை மனித தெய்வம் ,,, (பேச முடியாமல் அமைதியாகிறார் )<br /><br /><span style="font-style:italic;">ஒரு சாதாரண டூரிங் டாக்கீஸ் டிக்கெட் கிழிப்பவராக வாழ்க்கையை ஆரம்பித்த நீங்கள் ஒரு நிலையில் மதுரையின் மிகப்பெரிய தியேட்டர் காம்ப்ளக்சான நடனா நாட்டியா நர்த்தனா வை விலைக்கு வாங்கினீர்கள் . ஒரு நிலையில் அதை விற்கவும் செய்தீர்கள் ... எப்படி சார் தாங்கிக் கொள்ள முடிந்தது ?</span><br /><br />(சில நொடிகள் கனத்த மவுனம் .....) எனக்கு ஒரு ஆசை இருந்தது சார் ...நடிகனாகி பணம் சம்பாதிக்க ஆரம்பித்த போது .... ஒரு சுமாரான திஎட்டருக்காவது ஓனர் ஆகணும்னு . ஆசை ... அதுக்குத்தான் நான் நிஜமா ஆசைப் பட்டேன் . ஆனா அவ்வளவு பெரிய தியேட்டர் காம்ப்ளக்சை வாங்க முடிஞ்சது .... பின்னாடி என்னால படங்கள் வாங்கி போட முடியல . தியேட்டர் வாடகைக்கு கூட சம்பாதிக்க முடியாத நெலமை ... அதான் .....(முற்றுப் பெறாத பதிலாகவே முடிகிறது )<br /><br /><span style="font-style:italic;">பாராளுமன்ற எம்பியாகவே நீங்கள் போனது உங்கள் வாழ்கையின் உச்சம் என்று சொல்லலாமா ?</span><br /><br />அது அம்மாவின் அருள் சார் . 1978 இல் என் சின்னம்மா மகனோடு பிழைப்பு தேடி டெல்லிக்கு போனவன் 98 இல் திருச்செந்தூர் எம்பியாகப் போனேன் . மிகக் குறைந்த வயதில் எம்பியான சிலரில் நானும் ஒருவன் .பாராளுமன்றத்தில் பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் நேரில் பார்த்தேன் .ஆனால் நான் எம்பியாக இருந்த அமைச்சரவையின் காலம் சில மாதங்கள் மட்டுமே .அதனால் என்னால் தொகுதிக்கு பெருசா ஒண்ணும் பண்ண முடியல .எனக்கு அந்த வருத்தம் உண்டு . <br /><br /><span style="font-style:italic;">உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிக சரியான காரியம் எது? பெரிய தவறு எது ?</span><br />சினிமாவில் மது குடிக்கிற ---சிகரெட் குடிக்கிற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தது மிக சரியான முடிவு . . இன்றும் அதற்காக பெருமைப் படுகிறேன் . . தவறு எனறால் என் சினிமா வாழ்வில் நிறைய சொல்லலாம் . ஆனால் அது தவறு என்று அப்போது தெரியாது . இனி பேசி பயன் இல்லை . ஆனால் செய்தபோது எல்லாம் அதையும் நல்ல நோக்கத்தோடுதான் செய்தேன் . இப்போது வந்திருக்கிற மேதை படத்தின் தயாரிப்பாளர்கள் டெக்னீசியன்கள் எல்லோரும் கூட புதியக்வர்கள் தான் . பிரபலமான பெரிய ஆட்கள் இல்லை . எனக்கு அதுதான் சார் அமையுது . <br /><br /><span style="font-style:italic;">இன்றும் உங்களை பார்க்க கிளம்பி வருகிற ரசிகர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள் ?</span><br />(சுறுசுறுப்பாகிறார் ) நான் கடைசியா நடிச்ச படம் வெளிவந்து பதினொரு வருஷம் ஆகுது .ஆனாஇப்ப மேதை படத்த்கோட பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த கூட்டம் என்னை வியக்க வச்சது . அது மட்டும் அல்ல . விழாவுக்கு அன்னிக்கு வந்த ஒரு ரசிகன் , என் பிறந்த நாளுக்கு என்னை நேரில் வந்து வாழ்த்த ஆசைப் பட்டு இருக்கான் .மறுபடியும் சென்னை வரஅவங்க வீட்டுல அனுமதி தரல. விஷம் குடிச்சு செத்தே போய்ட்டான் சார் . , தகவல் தெரிஞ்சு நான் துடிச்சிட்டேன் . ஓடிப் போய்ப் பார்தது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிட்டு., முடிஞ்ச பண உதவிட செஞ்சிட்டு வந்தேன் . <br />இதோ என் படத்தை இப்பவும் நண்பன் வேட்டைன்னு பெரிய படங்களோட தான் ரிலீஸ் பண்ணி இருக்கேன் .<br /> தில்லான மோகனாம்பாள் படத்துல ஒரு காட்சி வரும் . மனோரமா கிட்ட ஒருத்தன் வந்து "இன்னிக்கு மோகனாம்பாள் னு ஒரு பெரிய ஆட்டக்காரி ஆடப் போறா .. அதனால உன் ஆட்டத்துக்கு மவுசு இருக்காது "ன்னு சொல்லுவான் . அதுக்கு மனோரமா .."இருக்கட்டும் .. அதனால் என்ன ... அவங்க பெரிய மேடையில ஆடட்டும் .... எனக்குன்னு ஒரு மூலையில கெடைக்கற எடத்துல நான் ஆடிட்டுப் போறேன்" னு சொல்லுவாங்க . அதுமாதிரி எனக்கு உள்ள கூட்டத்துக்கு என் படத்தை காட்டுவோம்னு தான் சார் , நான் பெரிய படங்க கூட என் படத்தை ரிலீஸ் பண்ணினேன் . எனக்கு இந்த தைரியம் இருக்க காரணம் என் ரசிகர்கள் ... <br /><br />இதுவரை என் எந்தப் படமும் பூஸ்ட் பண்ணி ஓட்டப்பட்டது இல்ல . தானாதான் ஓடுச்சு . அதுக்கு காரணம் என் ரசிகர்கள் . நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாருக்கு பிறகு, ஒரே நாளில் ஒரு கதாநாயகனாக நடித்த ரெண்டு படங்கள் வெளியாகி ரெண்டுமே நூறுநாள் ஓடின வரலாறு எனக்கு மட்டும்தான் இன்னிக்கு வரை இருக்கு . அதுக்கு காரணம் என் ரசிகர்கள் ......<br /><br /><span style="font-style:italic;">....அந்த மாதிரி இருக்கற ரசிகர்களுக்கு நீங்க பதிலுக்கு என்ன பண்ணப் போறீங்க?</span><br /><br />(துள்ளலோடு ) பண்ணனும் சார் .. ஏதாவது நல்லது பண்ணனும் ... இன்னிக்குவரை எந்த தூண்டுதலும் இல்லாம அவங்களாவே புதுசு புதுசா எனக்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பிச்சுட்டு எனக்கு தகவல் கொடுத்துட்டு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்காங்க ..(ஆதாரங்களைக் காட்டுகிறார் ) செய்வேன் சார். அத பத்தின யோசனையில்தான் இருக்கேன் ....<br /><br /><span style="font-style:italic;">திரைத்துறையில் அடுத்து ...?</span><br /><br />என்கிட்ட இப்ப முப்பது படங்களுக்கான கதைகள் ரெடியா இருக்கு . சுமார் 250 படப் பெயர்களை செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன் . என்னைப் பொறுத்தவரை படத்துக்கு பேருதான் முக்கியம். அதே மாதிரி நான் எப்பவும் ஹீரோவாதான் நடிப்பேன் . அத மாத்திக்க முடியாது . <br /><br />திருக்குறள்னா அது ரெண்டு அடிதான் இருக்கும் . அது ஏன் நாலடியா இல்லைன்னு கேட்கக் கூடாது . நாலடியார்னா அது நாலடியாதான் இருக்கும் . அது ஏன் ரெண்டு அடியா இல்லைன்னு கேட்பீங்களா? . ராமராஜன்னா ஹீரோதான் . அவன்கிட்ட போய் நீங்க ஏன் மத்த கேரக்டர்ல நடிக்க கூடாதுன்னு கேட்கக் கூடாது . <br /><br /><span style="font-style:italic;">நீங்க பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழித்த காலமும் உண்டு . 'ஐநூறு ரூபா கூட கையில் இல்லை 'என்று கலங்கி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்ததும் உண்டு . வாழ்க்கை எனும் ரங்க ராட்டினத்தில் சரேலென மேலே ஏறி அதே வேகத்தில் சரிந்தவர் நீங்கள் .. உங்க பார்வையில வாழ்க்கைன்னா என்ன சார்?</span><br /><br />சரேலென மேலே ஏறினது உண்மைதான் . ஆன மெதுவாதான் இறங்கினேன் . அதனாலேயே வலி ஜாஸ்தி . <br /><br />ஒண்ணே ஒண்ணு சொல்றேன் .. எனக்கு கார்ல பயணம் பண்றதே புடிக்காது . பொதுவா பஸ் , ரயில் இல்லன்னா விமானம் இப்படிதான் பயணம் செய்வேன் . ஆனா ஒருதடவை வேற வழியில்லாம கார்ல போனேன் . என்ன ஆச்சு ? கொடுமையான விபத்த்துல சிக்கி உயிர் பிழைக்கவே கஷ்டம்னு ஆகி, கடைசியில ஒரு வழியா மறுஜென்மம் எடுத்தேன் . நான் என்ன விரும்பியா கார்ல போனேன் . ஆனா போக வேண்டி வந்தது இல்லையா ?<br /><br />அதே மாதிரித்தான் .... வாழ்க்கையில நாம விரும்பினாலும் விரும்பாட்டியும் கஷ்டம் வரணும்னு இருந்தா வரத்தான் செய்யும் . அதை யாரும் மாத்த முடியாது . ஆனா அதை தைரியமா எதிர்கொண்டு ஜெயிக்கணும் ... இதுதான் வாழ்க்கை . </span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-48986405738627312442012-01-27T21:16:00.000-08:002012-01-27T21:20:04.099-08:00இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா? --சு. செந்தில் குமரன்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG4-kO19fdHRBAJ53psezwV7mBtRiuOj71_GsZ2mR7n6gDWDdp8hFTT18u6uuFOCiSahFH418ymOTm6aJ3OWJikBVO0Y0JLsnIIJ018j__AcmJfT6WaMfJoPfc8NqOsM76hu9o7ypJONou/s1600/cover+-1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 338px; height: 198px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG4-kO19fdHRBAJ53psezwV7mBtRiuOj71_GsZ2mR7n6gDWDdp8hFTT18u6uuFOCiSahFH418ymOTm6aJ3OWJikBVO0Y0JLsnIIJ018j__AcmJfT6WaMfJoPfc8NqOsM76hu9o7ypJONou/s400/cover+-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702547813494779906" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7HFlvkWNHZTx8GEjAjJsMm1hOyOtIezL2QOpOrpBmAIxqUFzV4DelK5A-Pn8polUTR1NzxkTS_wMMTHdqSeoW1RoaTM_f9df-GmEW-DFXpENFBMYukocv8dOeTyfhGcUpDoNSZGFT2Tz9/s1600/cover+-1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 338px; height: 198px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7HFlvkWNHZTx8GEjAjJsMm1hOyOtIezL2QOpOrpBmAIxqUFzV4DelK5A-Pn8polUTR1NzxkTS_wMMTHdqSeoW1RoaTM_f9df-GmEW-DFXpENFBMYukocv8dOeTyfhGcUpDoNSZGFT2Tz9/s400/cover+-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702547807250873090" /></a><br /><br /><blockquote><span style="font-style:italic;"><span style="font-weight:bold;">இந்த வாரம் புதிய தலைமுறை வார இதழில் நான் எழுதி அட்டைப் படக் கட்டுரையாக வந்திருக்கும் "இழந்தது தேவிகுளம் பீர்மேடு மட்டும்தானா " என்ற கட்டுரையைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் . நன்றி</span></span><br /></blockquote><br /><br /><br /><span style="font-style:italic;"><span style="font-weight:bold;">இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?<br />*******************************************<br /><br />சு. செந்தில் குமரன்</span></span><br /><br /><span style="font-weight:bold;">நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது<br /><br />'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.<br /><br />ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.<br /><br />அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.<br /><br />நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.<br /><br />முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.<br /><br />அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.<br /><br />வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.<br /><br />மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.<br /><br />அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.<br /><br />மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.<br /><br />அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.<br /><br />தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).<br /><br />ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.<br /><br />தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.<br /><br />தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.<br /><br />பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).<br /><br />அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.<br /><br />இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.<br /><br />இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...<br /><br />இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.<br /><br />பவானி நதிப் பிரச்சினை கிடையாது.<br /><br />தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.<br /><br />சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.<br /><br />எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.<br /><br />கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.<br /><br />சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.<br /><br />1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.<br /><br />மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.<br /><br />இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.<br />மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.<br /><br />ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?<br /><br />வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.<br /><br />வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.<br /><br />1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.<br /><br />சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.<br /><br />இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.<br /><br />காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.<br /><br />அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.<br /><br />கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.<br /><br />பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-<br /><br />பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.<br /><br />தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.<br /><br />இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.<br /><br />மேலும் முழுமையான தகவல்களுக்கு www.puthiyathalaimurai.com பாருங்கள் . <br /></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-52533015190447215192011-06-05T23:44:00.000-07:002011-06-05T23:52:08.783-07:00# எஸ் ஜானகிக்கு வாய்ப்பு கொடுத்த பி லீலா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqBzW4YzbG56waNOWL0Vgqw94y4-K9Gcbzm8VeqpGIUMqp9oXvjWBSZig-YRPE4sJKlUiRal6-tI6fyXht2wzUXSsPfzjw3ctoHz14aiMJSuTg1IclQ0Z1yzIqjAB-eCftatP2jZ6FzaMt/s1600/S._Janaki_300.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 360px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqBzW4YzbG56waNOWL0Vgqw94y4-K9Gcbzm8VeqpGIUMqp9oXvjWBSZig-YRPE4sJKlUiRal6-tI6fyXht2wzUXSsPfzjw3ctoHz14aiMJSuTg1IclQ0Z1yzIqjAB-eCftatP2jZ6FzaMt/s400/S._Janaki_300.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614994147575553842" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKQm4_G6lnNnbcRF7Q7Ssa-vm4WxDR58rpGBBta4hZeVoknOimDaKTeBwfnanbTeOzcVXJcjEVTFOakTgLCNcaTjAFYgjEvk3HWQzjT3Efebhsz_L7JpGGRTWdL-8JCcsO1eJ_7jBhKyPL/s1600/Leela1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKQm4_G6lnNnbcRF7Q7Ssa-vm4WxDR58rpGBBta4hZeVoknOimDaKTeBwfnanbTeOzcVXJcjEVTFOakTgLCNcaTjAFYgjEvk3HWQzjT3Efebhsz_L7JpGGRTWdL-8JCcsO1eJ_7jBhKyPL/s400/Leela1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614994141712888530" /></a><br /><br /><span style="font-weight:bold;">இன்று (06-06-2011)காலை ஜெயா தொலைக்காட்சியில் சிறப்புத் தேன்கிண்ணம் பகுதியில் தோன்றிய கவிஞர் பிறைசூடன் அவர்கள், 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம் பெற்ற "சிங்கார வேலனே தேவா" பாடல் பற்றி குறிப்பிடும்போது <br /><br /><blockquote>"பொதுவாக நாதஸ்வரமும் குரலும் இணைந்து இழையாது என்பதால் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களை வைத்து நாதஸ்வர இசைப் பகுதிகளை வாசிக்கச் செய்து ஒலிப்பதிவு செய்தனர் பின்னர் இசை படிக்காவிட்டாலும் இசையாகவே வாழ்கிற எஸ் ஜானகியை பாட வைத்தனர் "</blockquote> என்றார் . <span style="font-style:italic;"><br />உண்மை .</span><br /><br />ஆனால் இதில் மற்றோர் நெகிழ்ச்சியான விஷயமும் உண்டு .<br /><br /><span style="font-style:italic;">முதலில் இந்தப் பாடலைப் பாடுவதற்கு அணுகப்பட்ட பாடகி பி லீலா அம்மையார்தான்</span> . ஆனால் லீலா அம்மையார் <blockquote>"இந்த உயரத்துக்கு என் குரல் போகாது" எ</blockquote>ன்று திறந்த மனதோடு கூறியதோடு மட்டும் அல்லாமல் <blockquote>" இன்றைய நிலையில் இந்த நாதஸ்வர இசைக்கு இணையாக ஒலிக்கும் குரல் ஜானகியிடம்தான் உள்ளது அவரையே பாடச் சொல்லுங்கள் " </blockquote>என்று பெருந்தன்மையோடு சிபாரிசும் செய்தார் . <br /><br /><span style="font-style:italic;">அதனால் பாட்டு ஜானகிக்குப் போனது .</span><br /><br /><blockquote>"என்னால் பாட முடியாது' என்று கூறியதோடு லீலா அம்மா விட்டிருக்கலாம் . ஆனால் ஜானகியால்தான் முடியும்ணு சொல்லி என்னைப் பாட வச்சார் . இந்த பெருந்தன்மை வேறு யாருக்கு வரும் " </blockquote>என்று பத்திரிக்கையாளனாகவும் உதவி இயக்குனராகவும் இருந்த என்னிடம் ஒருமுறை சொல்லும்போதே ஜானகியின் கண்ணில் இருந்து கரகரவென கண்ணீர் வந்ததை என்னால் மறக்கவே முடியாது<br /><br /><span style="font-weight:bold;">நன்றிக் கண்ணீர் !<br /></span><br />by the by <span style="font-style:italic;">இப்ப அதெல்லாம் எங்கயாவது ஊறுதா ?</span></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-18369821779580358062011-05-30T00:53:00.000-07:002011-05-30T23:54:46.378-07:00# ஐ பி எல் விதிகள் மாறுமா?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGAAORrVSms2rLJrZtY6OC403uooX0T_s4-YCqbvzfOUJ5ZABt-_vYLdlL7ZLF5T1dZex_MdYqCDjjoBAJSvL8IXjtQcGJEDwNEeAyRtRxji12vbpC3CiRLilYkVKDTxixP1LoFVw1-52s/s1600/shakshi.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 306px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGAAORrVSms2rLJrZtY6OC403uooX0T_s4-YCqbvzfOUJ5ZABt-_vYLdlL7ZLF5T1dZex_MdYqCDjjoBAJSvL8IXjtQcGJEDwNEeAyRtRxji12vbpC3CiRLilYkVKDTxixP1LoFVw1-52s/s400/shakshi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612770098265870098" /></a><br /><span style="font-weight:bold;">ஐ பி எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது . மகிழ்ச்சி . ஆனால் ஐ பி எல் போட்டி விதிகளை மட்டுமல்ல உலகக் கோப்பை உட்பட இரண்டு அணிகளுக்கு மேல் மோதும் எல்லா ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் இன்னும் கூர்மையாக விதிகளை திருத்த வேண்டும் என்பதையே இந்த ஐபி எல் போட்டி நடத்தப் பட்ட விதம் காட்டுகிறது.<br /><br />பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் லீக் ஆட்டங்களில் பெற்ற வெற்றிகள் ரன்களின் அடிப்படையில் பெற்ற புள்ளிகள் இவற்றின் அடிப்படையில் முதல் வரிசைப் பட்டியல் தேர்ந்தேடுக்கப் படும் . இந்த ஐ பி எல் போட்டியிலும் அதே போல ஒன்றரை மாதமாக எல்லா அணிகளும் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டதன் அடிப்படையில் முதல் நான்கு இடங்களில் முறையே பெங்களூர் அணி . சென்னை அணி மும்பை அணி கல்கத்தா அணிகள் வந்தன .<br /><br />முன்பெல்லாம் உலகக் கோப்பை போட்டிகளில் இப்படி நான்கு அணிகள் வரை வடிகட்டப் பட்டதும் முதலிடம் பெற்ற அணியும் நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரை இறுதியில் மோத இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற அணிகள் இன்னொரு அரை இறுதியில் மோதி வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் . இதில்தான் ஒரு அநியாயம் நடக்கும் சூழல் வந்தது.<br /><br />பல்வேறு போட்டிகளில் வென்று முதலிடம் பெற்ற அணி ஒரு ஆட்டத்தில் கொஞ்சம் தவறினால் கூட நாலாவது இடம் பெற்ற அணியிடம் தோற்று ஆட்டத்தில் இருந்தே வெளியேற வேண்டிய நிலை . பல ஆட்டங்களில் கொஞ்சம் சுமாராகவே விளையாடி நாலாவது இடம் பெற்ற அணி ஒரு ஆட்டத்தில் நன்றாக விளையாடிய காரணத்தால் , இதற்கு முன்பு பல ஆட்டங்களில் நன்றாக விளையாடிய அணியை வெளியேற்றும் விந்தை நடந்தது . அதே போலத்தான் (வித்தியாசம் குறைவு என்றாலும் )இரண்டாவது மூன்றாவது இடத்தில் வந்த அணிகளுக்கு இடையே நடக்கும் ஆட்டங்களிலும் இதே விந்தை .<br /><br />இதை மாற்ற செய்யப்பட புதிய ஏற்பாட்டின் படிதான் நடந்து முடிந்த ஐ பி எல் போட்டிகளில் ப்ளேஆப் மற்றும் அரை இறுதிப் போட்டிக நடந்தன .<br /><br /><blockquote>அதன்படி ....முதலாவது இடம் பெற்ற அணியும் இரண்டாவது இடம் பெற்ற அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ஆனால் அதில் தோற்கும் அணி (முந்தைய வழக்கம் போல) வெளியேற்றப் படவில்லை . மாறாக அரை இறுதிக்கு இருத்தி வைக்கப் பட்டது .<br /><br />அதே போல மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த அணிகள் ஆடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற அணி வெளியேற வேண்டும் என்றும் வென்ற அணி முன்பு இருத்தி வைக்கப் பட்ட அணியோடு விளையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது .</blockquote><br /><br />புரியாதவர்களுக்கு இந்த பத்தியில் புரிந்து விடும் ....ப்ளே ஆப் ஆட்டத்துக்கு முன்னால் புள்ளிகள் அடிப்படையில் வந்த தர வரிசைப் பட்டியல் படி பெங்களூர் அணி முதல் இடம் . சென்னை அணி இரண்டாவது இடம் மும்பை அணி மூன்றாவது இடம் , கல்கத்தா அணி நான்காவது இடம் என்று வந்தது அல்லவா?<br /><br />பெங்களூர் அணியும் சென்னை அணியும் மோதிய ஆட்டத்தில் சென்னை வென்றது . ப்ளே ஆப் பெற்றது .(ஆனால் தர வரிசைப் படி சென்னை இரண்டாவது இடத்தில்தான் இருந்தது )மும்பை கல்கத்தா அணி ஆடிய ஆட்டத்தில் (நல்ல வேளையாக ) நான்காவது இடம் பெற்ற கல்கத்தா அணியே தோற்று வெளியேறியது .<br /><br /> பிறகு மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணியும்... முதல் இடம் பெற்று இருந்தும் ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற பெங்களூர் அணியும் விளையாடி, அதில் பெங்களூர் அணியே வென்றது .<br /><br />இறுதிப் போட்டியில் பெங்களூர் சென்னை அணிகள் விளையாட அதில் நமது சென்னை அணி வென்று நம்ம சந்தோஷப் படுத்தியது .<br /><br />இப்போது புரிகிறதா ?<br /><span style="font-style:italic;"><br />இங்கே என் கேள்வி என்னவென்றால் மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணியும் நான்காவது இடம் பெற்ற கல்கத்தா அணியும் ஆடிய ஆட்டத்தில் மும்பை அணி தோற்று இருந்தால் .. நான்காவது இட பெற்ற கல்கத்தா அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கும் . மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணி வெளியேறி இருக்கும் . அப்போது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் மும்பை அணி கல்கத்தா அணியை விட ஒருபடி மேலே இருந்ததற்கு என்ன பலன்?<br /><br />அப்படித்தானே சென்னை அணியும் பெங்களூர் அணியும் விளையாடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் நடந்தது ? முதல் இடம் பெற்ற பெங்களூர் அணியை ப்ளே ஆப் ஆட்டம் என்ற ஒரு ஆட்டத்தில் வீழ்த்தியதன் மூலமே சென்னை அணி ப்ளே ஆப் தகுதி பெற்றது . அப்படியானால் அதுவரை பெங்களூர் அணி முதல் இடம் பெற்று இருந்ததற்கு என்ன பலன்? ஒன்றும் இல்லையே .<br /><br />ஆக இது எப்படி முறையான தகுதி ஆகும் ?</span><br /><br />"அதற்கு என்ன செய்வது ? தர வரிசை என்பது தனிப்பட்ட அணி பெறுவது . ஆனால் இரண்டு அணிகள் சேர்ந்துதானே ஆட முடியும்?" என்று நீங்கள் கொந்தளிப்பது காதில் கேட்கிறது .<br />அப்படியானால் முன்பு இருந்தது போல முதலிடம் பெற்ற அணியும் நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரை இறுதியில் மோத இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற அணிகள் இன்னொரு அரை இறுதியில் மோதி வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் பழக்கத்தையே பயன்படுத்தலாமே .<br /><br />அது முறையல்ல என்பதால்தானே ...முதலாவது இடம் பெற்ற அணியும் இரண்டாவது இடம் பெற்ற அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ....ஆனால் அதில் தோற்கும் அணி (முந்தைய வழக்கம் போல) வெளியேற்றப் படவில்லை . மாறாக அரை இறுதிக்கு இருத்தி வைக்கப் பட்டது..... .<br /><br />அதே போல மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த அணிகள் ஆடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற அணி வெளியேற வேண்டும் என்றும் வென்ற அணி முன்பு இருத்தி வைக்கப் பட்ட அணியோடு விளையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப் படுகிறது . .<br /><br />ஆக நியாயம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அது முழுமையாக இருக்க வேண்டும் அல்லவா?<br /><br />என்ன செய்யலாம் ?<br /><br />நான் ஒரு திட்டம் சொல்லவா? இதை கிரிக்கெட் உலக மேதைகள் ஏற்பார்களா?<br />இப்போது தர வரிசைப் படி முதல் நான்கு அணிகளை அப்படியே எடுப்போம் .<br />1 )பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி<br />2 )சென்னை சூப்பர் கிங்ஸ் அணி<br />3 ) மும்பை இந்தியன்ஸ் அணி<br />4 )கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி<br /><br />முதல் ப்ளே ஆப் ஆட்டம் பெங்களூர் அணி க்கும் சென்னை அணிக்கும் நடந்தது அல்லவா?<br />அதன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கும் முன்பு ஒரு காரிய செய்ய வேண்டும் .<br /><br />பெங்களூர் அணி எந்த லீக் ஆட்டத்தில்(எதிர் அணி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) மொத்தத்தில் அதிக ரன் எடுத்தது ? தவிர சென்னையோடு ஆடிய எந்த ஆட்டத்தில் குறைவான ரன்கள் எடுத்தது ?இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும் . இது முதகுள் விடை (ரெண்டு ஒரே ஆட்டமாக கூட இருக்கலாம் தப்பில்லை )<br />அதே போல இரண்டாவது இடம் பெற்ற சென்னை அணி எந்த லீக் ஆட்டத்தில்(எதிர் அணி எதுவாக இருந்தாலும் ஓகே ) மிக குறைவான ரன் எடுத்தது பெங்களூர் அணியோடு ஆடிய எந்த ஆட்டத்தில் அதிக ரன் எடுத்தது ?(முதல் இடம் பெற்ற அணிக்கும் இரண்டாவது இடம் பெற்ற அணிக்கும் இடையே தேர்ந்தெடுக்கப் படும் ஆட்டங்களில் சின்ன வித்தியாசம் இருக்கிறது ... கவனியுங்கள் . முதல் இடத்துக்கும் இரண்டாவது இடத்துக்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?)இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும் . இது இரண்டாவது விடை .<br />(ஓராண்டு கணக்கீட்டிலுமே டை ஆட்டங்கள் சேர்ப்பு இல்லை . டாக் வொர்த் லீவிஸ் விதியில் முடிவு காணப்பட்ட ஆட்டங்கள் சேர்க்கக் கூடாது )<br /><br />பெரிய விடையில் இருந்து சின்ன விடையை கழிக்க வரும் புது விடையை புள்ளிகள் அடிப்படையில் ரன்களாக மாற்றம் செய்ய வேண்டும் . அப்படி செய்யும்போதுஏழு ரன்கள் என்று ஒரு விடை வருகிறது என்று வைத்துக் கொள்வோம் .<br />இப்போது பாருங்கள் ....<br />ப்ளே ஆப் ஆட்டத்தில் சென்னையும் பெங்களூர் அணியும் மோதியது . தரவரிசைப் படி முதல் இடத்தில் உள்ள அணி பெங்களூர் அணி . எனவே டாஸ் போட்டு ஆட்டம் நடந்து பெங்களூர் அணி சேஸ் செய்கிறது எனறால் சென்னை அணி எடுத்திருக்கும் ரன்களை விட ஏழு ரன்கள் குறைவாக எடுத்தாலே பெங்களூர் அணி வென்றதாக பொருள் .<br />அதே நேரம் சென்னை அணி சேஸ் செய்தால் பெங்களூர் அணியை விட ஏழு ரன்கள் கூட ஒரு ரன் ஆக எட்டு ரன் எடுத்தால்தான் வென்றதாகப் பொருள் .<br />இப்படி முடிவுகளை அறிவிக்க வேண்டும் .<br /><br />இது இறுதிப் போட்டி வரை போகவேண்டும் . இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் இப்படி கணக்கீடு செய்யவேண்டும்.<br /><blockquote>அப்படி செய்தால்தான் ஆரம்பம் முதலே ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு அணி வெல்வது அல்லது தோற்பதன் பலன் கடைசிவரை பயனாகும் . எல்லா ஆட்டத்திலும் ஒழுங்காக விளையாடுவார்கள் . எந்த ஆட்டமும் போர் அடிக்காமல் இருக்கும் . தேர்வு மிக அறிவுப் பூர்வமானது என்றும் பொருள் .<br /><br />இதுதான் உண்மையான தேர்வும் கூட .</blockquote><br /><br />கிரிக்கெட் அறிவாளிகள் சிந்திப்பார்களா?</span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-71271981860179453002011-05-20T05:13:00.000-07:002011-05-20T05:16:45.604-07:00# திகார் முன்னேற்ற கழகம் !<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuT0rECT-RhkEO7DwKMwub5XmzE3yyKK7tw5l4FkH1bIKpGhZn2fCNSGNUzTFC55E7WyEUV0OKYu6ytKpGtdIOuBBenlVsYNFZeyGKdNpWgb35vNqarOfloGEFeWvtqiCnG2WhUOlKpjfi/s1600/Kanimozhi380a2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 285px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuT0rECT-RhkEO7DwKMwub5XmzE3yyKK7tw5l4FkH1bIKpGhZn2fCNSGNUzTFC55E7WyEUV0OKYu6ytKpGtdIOuBBenlVsYNFZeyGKdNpWgb35vNqarOfloGEFeWvtqiCnG2WhUOlKpjfi/s400/Kanimozhi380a2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608771144233292130" /></a><br /><br /><br /><span style="font-style:italic;"><span style="font-weight:bold;">*அல்லற்பட்டாற்றாது அழுத கண்ணீர் ஒன்றே<br />செல்வத்தை தோய்க்கும் படை .<br /> ----வள்ளுவத் தாத்தன் .</span><br />செல்வத்தை மட்டுமல்ல .. அது சுயநலமான பாசத்தையும் தோய்க்கும்<br /><br />* <span style="font-style:italic;">தி மு க .. புதிய விளக்கம் என்ன தெரியுமா....? திகார் முன்னேற்ற கழகம் !</span><br /><br /><blockquote>* கவலைப் பட வேண்டாம் கலைஞரே ....<br />உங்கள் 'ஆதரவுடன் ' உருவான<br /> முள்வேலிக் கம்பிகளை விட ,<br />திகார் ஜெயில் ஒன்றும்<br />மோசமானதில்லை !</blockquote><br /><br />* யாரங்கே !<br />கலைஞர் கையில்<br />ஒரு பேனாவும்<br />கொஞ்சம் பேப்பரும் கொடுங்கள் ..<br />மகளின் விடுதலைக்காக<br />பிரதமருக்கும்<br />சோனியாவுக்கும்<br />நிறைய<br />கடிதம் எழுத வேண்டியுள்ளது .<br /><br />கொஞ்சம்<br />தந்தி விண்ணப்பங்கள்<br />கொடுங்கள் .<br />மகளின் விசுதலையை<br />வலியுறுத்தி ...<br />மத்திய அரசுக்கு<br />தந்தி அடிக்க வேண்டியுள்ளது .<br /><br /><span style="font-style:italic;">* இப்போதுதான்<br />தூறல்<br />துவங்கியுள்ளது ..<br />இனிமேல் பெருமழை ....<br />அப்புறம்தான்<br />நீங்கள் சொன்னது போல<br />தூவானம் வரும்<br />வரிசை<br />சரிதானே ...</span><br />ஐந்தமிழ் அறிஞரே<br /></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-45084184533376023012011-05-16T00:26:00.000-07:002011-05-16T00:41:58.303-07:00# நானும் மக்களும் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8ZmMlc3kJYaXiFC0QydYZzgL800nTufiEC3crd0QnQ-2Ly8DuKzJ3wAPSD-O0gdpKVkQO1LkWjDGL8XVgI4Elk79y1GqSClWLy4_Kkf0WghDdqY47_-kIF_XpyMjBsMCq-XQlFmbRuofI/s1600/ballot+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 370px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8ZmMlc3kJYaXiFC0QydYZzgL800nTufiEC3crd0QnQ-2Ly8DuKzJ3wAPSD-O0gdpKVkQO1LkWjDGL8XVgI4Elk79y1GqSClWLy4_Kkf0WghDdqY47_-kIF_XpyMjBsMCq-XQlFmbRuofI/s400/ballot+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607215947402544546" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLbSAS4kyt2-SnRj_S28Vt09g62Q3cU8BmSa0OLwQRoREPS6OuYgWAXgpGS3FQi26yDPDCQnI5WficL-qqpCqEI46SFCJug56N2Z5xasHaKVFFMUMOdfk6-DSJsrexUNfa50Fhhbr8xvVe/s1600/ballot+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 361px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLbSAS4kyt2-SnRj_S28Vt09g62Q3cU8BmSa0OLwQRoREPS6OuYgWAXgpGS3FQi26yDPDCQnI5WficL-qqpCqEI46SFCJug56N2Z5xasHaKVFFMUMOdfk6-DSJsrexUNfa50Fhhbr8xvVe/s400/ballot+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607215944027579522" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfK1TttV-6mYNYXNSlrrj2ma0BViGLjOaiuyKOK-fa0bmkt1RI7pwXKOLiwqAzmLkYMInocpzfgP4R0VW8rrL-oN8a8yrcNu97bnK80tUgOHzTgHq3s-APL_mNSUz2tuBDaJJsfYZhAvFb/s1600/ballot.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 323px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfK1TttV-6mYNYXNSlrrj2ma0BViGLjOaiuyKOK-fa0bmkt1RI7pwXKOLiwqAzmLkYMInocpzfgP4R0VW8rrL-oN8a8yrcNu97bnK80tUgOHzTgHq3s-APL_mNSUz2tuBDaJJsfYZhAvFb/s400/ballot.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607215943211647842" /></a><br /><span style="font-weight:bold;">நானும் மக்களும் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள்<br />**********************************************************************************************<br /><br />வணக்கம்<br /><br />தமிழகத்தைச் சேர்ந்த 234 தொகுதிகளுக்கும் மக்கள் ஒட்டுப் போட வேண்டிய வேட்பாளர்கள் என்ற ஒரு பட்டியலை நான் தேர்தலுக்கு முன்பு கொடுத்திருந்ததை நீங்கள் அறிவீர்கள் .<br /><br /><span style="font-style:italic;"><br />"எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .<br /><br />சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .<br /><br />வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை .</span>"என்றும் முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தேன் .<br /><br /><span style="font-style:italic;">"எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )<br /><br />யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)<br /><br />ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!<br /><br />யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .</span>"என்றும் குறிப்பிட்டு இருந்தேன் .<br /><br /><br /><blockquote>இதோ தேர்தல் முடிவுகள் வந்து விட்டன . நான் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் எத்தனை பேர் மக்கள் மனதிலும் இடம் பிடித்தது வெற்றி பெற்று உள்ளனர் . எத்தனை தொகுதிகளின் கணிப்பில் நான் (மக்களும் ) மண்ணைக் கவியது என்று தொகுதி வாரியாக பார்க்கலாம் வாருங்கள் (பட்டியலில் வரும் அவரே என்ற வார்த்தை எனது தெரிவும் மக்களின் முடிவும் ஒன்றாக உள்ளதைக் குறிக்கிறது )</blockquote><br /><br />பாராளுமன்றத் தொகுதி<br />******************************<br /><br />ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்-- மக்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்<br /><br />திருவள்ளூர் பா ம தொகுதி<br />*****************************************<br />1 . பொன்னேரி -----------------------------------பொன்ராஜா(அதிமுக )-----அவரே<br /><br />2 . திருவள்ளூர்---------------------------------------------- பிவி ரமணா (அதிமுக) -----அவரே<br /><br />3 பூந்தமல்லி ------------------------------------------ ----------- மணிமாறன் (அதிமுக)-----அவரே<br /><br /><br />4 ஆவடி ----------------------------------------------- -------- அப்துல் ரஹீம் (அதிமுக)-----அவரே<br /><br /><br />5 .மாதவரம்---- --------------------------------------------------------மூர்த்தி (அதிமுக)-----அவரே<br /><br /><br />6 .கும்மிடிப்பூண்டி ------------------------------------------------- ---- 49 ஒ----- அசோக் (தே மு தி க)<br /><br />வடசென்னை<br /><br />********************<br /><br />7 திருவொற்றியூர் ------------------------------------------------------- குப்பன்(அதிமுக)-----அவரே<br /><br /><br /><br />8 டாக்டர்ராதாகிருஷ்ணன் நகர் -----------------------வெற்றிவேல் (அதிமுக)-----அவரே<br /><br />9 .பெரம்பூர் ------- ---------------------------------------------------சவுந்திரராஜன் (சிபிஎம்)-----அவரே<br /><br />10 கொளத்தூர்<br /><br />----------------------------------- முக ஸ்டாலின் (திமுக (அல்லது) . சைதை துரைசாமி (அதிமுக)<br /><br />(இருவருமே தகுதியானவர்கள்தான் )----- மு க ஸ்டாலின் (தி மு க)<br /><br /><br /><br />11 திருவிக நகர் --------------------------------------- நீலகண்டன் (அதிமுக)-----அவரே<br /><br /><br /><br />12 .ராயபுரம்------------------------------------------------------ -ஜெயக்குமார் (அதிமுக)-----அவரே<br /><br /><br /><br />தென்சென்னை<br /><br />******************<br /><br /><br />13 .விருகம்பாக்கம்-------------------------------------------------------------- 49 ஓ----பார்த்தசாரதி (தே மு தி க )<br /><br /><br /><br />14சைதாப்பேட்டை- ------------------------ செந்தமிழன்(அதிமுக) -----அவரே<br /><br /><br />15 தி . நகர் -------------------------------------------------------------கலைராஜன் (அதிமுக)-----அவரே<br /><br />16 .மைலாப்பூர் -----------------------------------------------------அசோக் (மக்கள் சக்தி ) --ராஜ லட்சுமி (அ தி மு க)<br /><br /><br />17 .வேளச்சேரி------------------------------------ தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக )---- அசோக் (அதி முக )<br /><br /><br /><br />18 .சோழிங்க நல்லூர்-----------------------------------------------------கந்தன் (அதிமுக)-----அவரே<br /><br />மத்திய சென்னை<br /><br />******************<br /><br /><br />19 .வில்லிவாக்கம் -------------------அன்பழகன் (திமுக)---------------------------பிரபாகர் (அ தி மு க )<br /><br /><br /><br />20 எழும்பூர்----------------------------------------------------பரிதிஇளம்வழுதி(திமுக)--நல்ல தம்பி (தே மு தி க )<br /><br /><br />21துறைமுகம்------------------------------------------------பழகருப்பையா(அதிமுக) -----அவரே<br /><br /><br />22 சேப்பாக்கம் -----------------தமிமுன்அன்சாரி (மனிதநேய மக்கள் கடசி )----- அன்பழகன் (திமுக)<br /><br /><br />23 ஆயிரம் விளக்கு--------- 49 ஓ------------------------------------- வளர்மதி ( அ தி மு க)<br /><br /><br />24அண்ணாநகர்------------------------------------------ கோகுல இந்திரா (அதிமுக) -----அவரே<br /><br /><br />ஸ்ரீ பெரும்புதூர்<br /><br />*****************<br /><br />25 .மதுரவாயல்--------------------செல்வம் (பாமக)----------------பீமாராவ் ( கம்யூ. மா )<br /><br />26 .அம்பத்தூர்--------------------ரங்கநாதன் (திமுக)---- வேதாச்சலம் (அ திமுக)<br /><br /><br />27ஆலந்தூர்----------------------------------------பண்ருட்டி ராமசந்திரன் (தேமுதிக)-----அவரே<br /><br /><br />28 . ஸ்ரீபெரும்புதூர் ----------------------------------------- பெருமாள் (அதிமுக )-----அவரே<br /><br /><br /><br />29 பல்லாவரம-------------------------------------------------------------- தனசிங் (அதிமுக)-----அவரே<br /><br />30 தாம்பரம்----------------------------------------------------- எஸ் ஆர் ராஜா (திமுக) ---சின்னையா (அதி முக )<br /><br />காஞ்சீபுரம்<br /><br />*****************<br /><br />31 .செங்கல்பட்டு -----------------------ரங்கசாமி (பாமக )--- அனகை முருகேசன் (தே மு தி க )<br /><br />32 திருப்போரூர்---------------------------------------------------கே.மனோகர்(அதிமுக)-----அவரே<br /><br />33 செய்யூர் ----------------------------------------------------------வி எஸ் ராஜி (அதிமுக)-----அவரே<br /><br /><br />34 .மதுராந்தகம் ---------------------கணிதா சம்பத் (அதிமுக)-----அவரே<br /><br /><br /><br />35உத்திர மேரூர்-------------------------கணேசன்(அதிமுக) -----அவரே<br /><br /><br /><br />36 .காஞ்சீபுரம்------------------------------சோமசுந்தரம்(அதிமுக)-----அவரே<br /><br /><br /><br />அரக்கோணம்<br /><br />*********************<br /><br />37 .திருத்தணி ------------------------------------அருண் சுப்பிரமணியம்(தேமுதிக) -----அவரே<br /><br />38 . அரக்கோணம் -------------------------------------------------ரவி (அதிமுக)-----அவரே<br /><br />39 .சோளிங்கர்----------------------------------பி ஆர் மனோகர் (தேமுதிக)-----அவரே<br /><br />40 காட்பாடி ----------------- அப்பு ராதா கிருஷ்ணன் (அதிமுக)---துரைமுருகன் (திமுக)<br /><br />41 ராணிபேட்டை ---------------------------------------------ஜான் (அதிமுக)-----அவரே<br /><br />42 .ஆற்காடு ----------------------------------------------------சீனிவாசன் (அதிமுக)-----அவரே<br /><br /><br />வேலூர்<br />************<br /><br />43 . வேலூர்-------------------------------------------------------------விஜய் (அதிமுக)-----அவரே<br /><br />44 அணைக்கட்டு ----கலையரசு (பா ம க )--------- கலையரசு (பாமக )-----அவரே<br /><br /><br />45 .கே வி குப்பம் -----------செ கு தமிழரசன் (இந்தியா குடியரசு கடசி)-----அவரே<br /><br />46 .குடியாத்தம்-----------------லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்டு கடசி)-----அவரே<br /><br />47 .ஆம்பூர்------அஸ்லம் பாட்ஷா (மனித நேய மக்கள் கடசி)-----அவரே<br /><br /><br />48 . வாணியம்பாடி ----------------------------------சம்பத் குமார் (அதிமுக)-----அவரே<br /><br /><br />கிருஷ்ணகிரி<br />*******************<br />49 ஊத்தங்கரை--------------------------------------மனோரஞ்சிதம் (அதிமுக)-----அவரே<br /><br /><br />50 பர்கூர் -------------------------------------- கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)-----அவரே<br /><br /><br />51 கிருஷ்ணகிரி ----------------------------------------கேபி.முனுசாமி(அதிமுக)-----அவரே<br /><br /><br /><br /><br />52 வேப்பனஹள்ளி----------------------49 ஓ-----செங்குட்டுவன் (தி மு க)<br /><br /><br />53 .ஓசூர்--------------------------சத்யா (சுயேச்சை)----கோபிநாத் (காங்)<br /><br /><br /><br />54 ..தளி ----------------------------------------------------டி.ராமசந்திரன் (இ கம்யூ )-----அவரே<br /><br /><br />தருமபுரி<br />************<br />55 பாலக்கோடு ---------------------------------------------------------அன்பழகன் (அதிமுக)-----அவரே<br /><br /><br />56 .பென்னாகரம்---------------------------------------------------- நஞ்சப்பன் (இ கம்யூ )-----அவரே<br /><br /><br />57 . தருமபுரி -------------------சாந்தமூர்த்தி (பாமக)------பாஸ்கர் (தே மு தி க)<br /><br /><br />58 .பாப்பிரெட்டி பட்டி ----------------- முல்லைவேந்தன் (திமுக)---பழனியப்பன் (அதி முக )<br /><br /><br />59 .அரூர் --------------------------------டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )-----அவரே<br /><br />60 . மேட்டூர் ---------------------------------------------------------பார்த்திபன்(தேமுதிக)-----அவரே<br /><br /><br />திருவண்ணாமலை<br />*********************************<br />61 ஜோலார் பேட்டை ------வீரமணி(அதிமுக)-----அவரே<br /><br />62 .திருப்பத்தூர் ---------------ரமேஷ் (அதிமுக)-----அவரே<br /><br />63 .செங்கம் --------------------------49 ஓ --------சுரேஷ் (தே மு தி க )<br /><br />64 திருவண்ணாமலை ---------------ராமசந்திரன் (அதிமுக)--- எ வ வேலு (திமுக)<br /><br />65கீழபெண்ணாத்தூர்அரங்கநாதன்(அதிமுக )---- அவரே<br /><br />66 கலசபாக்கம் ----அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)---- அவரே<br /><br />ஆரணி<br />***********<br />67 போளூர் -----ஜெயசுதா (அதிமுக)---- அவரே<br /><br />68 .ஆரணி -----சிவானந்தம் (தி முக )-- பாபு முருகவேல் (தே மு தி க)<br /><br />69 . செய்யாறு ---முக்கூர் சுப்பிரமணி (அதிமுக)---- அவரே<br /><br />70 .வந்தவாசி ----குணசீலன் (அதிமுக)---- அவரே<br /><br />71 . செஞ்சி ----கணேஷ்குமார் (பா ம க )---- அவரே<br /><br />72 மைலம் ---கே பி நாகராஜ் (அதிமுக).---- அவரே<br /><br /><br />விழுப்புரம்<br />****************<br />73 . திண்டிவனம் ---ஹரிதாஸ் (அதிமுக )---- அவரே<br /><br />74 . வானூர் -- ஜானகி ராமன் (அதிமுக)---- அவரே<br /><br />75 . விழுப்புரம் --- சி வி சண்முகம் (அதிமுக)---- அவரே<br /><br />76 .விக்கிரவாண்டி -- ராம மூர்த்தி (மா கம்யூ)---- அவரே<br /><br />77 . திருக் கோவிலூர்-- ---- தங்கம் (திமுக)--- வெங்கடேசன் (தே மு திக)<br /><br />78 . உளுந்தூர்பேட்டை -- குமரகுரு (அதிமுக)---- அவரே<br /><br />கள்ளக் குறிச்சி<br />**********************<br />79 .ரிஷிவந்தியம் ------------49 ஓ----விஜயகாந்த் (தே தி மு க)<br /><br />80 . சங்கராபுரம் ---ப .மோகன் (அதிமுக)---- அவரே<br /><br />81 .கள்ளக்குறிச்சி -அழகுவேல் பாபு (அதிமுக)---- அவரே<br /><br />82 .கெங்கவல்லி--சிவகாமி (மக்கள் சக்தி )------சுபா (தே மு தி க)<br /><br />83 .ஆத்தூர் --- மாதேஸ்வரன் (அதிமுக)---- அவரே<br /><br />84 ஏற்காடு ----பெருமாள் (அதிமுக)---- அவரே<br /><br />சேலம்<br />**********<br /><br />85 . ஓமலூர் -- பல்பாக்கி கிருஷ்ணன் (அதிமுக)---- அவரே<br /><br />86 எடப்பாடி--- எடப்பாடி பழனிசாமி (அதிமுக)---- அவரே<br /><br />87 சேலம் மேற்கு --- ராஜேந்திரன் (திமுக)---வெங்கடாச்சலம் (அதி மு க)<br /><br />88 .சேலம் வடக்கு -- மோகன்ராஜ் (தேமுதிக)---- அவரே<br /><br />89 . சேலம் தெற்கு ----செல்வராஜ் (அதிமுக)---- அவரே<br /><br />90 . வீரபாண்டி ----எஸ் கே செல்வம் (அதிமுக)---- அவரே<br /><br />நாமக்கல்<br />***************<br />91 .சங்ககிரி ----விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)---- அவரே<br /><br />92 .ராசிபுரம் ---விபி துரைசாமி (திமுக)----தனபால் (அதிமுக)<br /><br />93 . சேந்தமங்கலம் ---பொன்னுசாமி (திமுக)------சாந்தி (தே மு தி க)<br /><br />94 .நாமக்கல் -- பாஸ்கர் (அதிமுக)---- அவரே<br /><br />95 பரமத்தி வேலூர் --- தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை)---- அவரே<br /><br />96 .திருச்செங்கோடு ----49 ஓ---சம்பத் குமார் (தே மு தி க)<br /><br />ஈரோடு<br />***********<br />97 .குமாரபாளையம் ----தங்கமணி (அதிமுக)---- அவரே<br /><br />98 .ஈரோடு கிழக்கு ----முத்துசாமி (திமுக)---- சந்திரசேகர் (தே மு தி க)<br /><br />99 .ஈரோடு மேற்கு -- கே வி ராமலிங்கம் (அதிமுக)---- அவரே<br /><br />100 . மொடக் குறிச்சி ---- கிட்டுசாமி (அதிமுக)---- அவரே<br /><br />101 . தாராபுரம் --- ஜெயந்தி (திமுக)-----பொன்னுசாமி (அதி மு க)<br /><br />102 . காங்கேயம் ---- பொன்னுசாமி (பாஜக)--- நடராஜ் (அதி முக)<br /><br />திருப்பூர்<br />*************<br />103 .பெருந்துறை ---------தோப்பு வெங்கடாசலம் (அதிமுக)---- அவரே<br /><br />104 . பவானி ----------மகேந்திரன் (பாமக )--- பி ஜி நாராயணன் (அதிமுக)<br /><br />105 . அந்தியூர் -------ரமணீதரன் (அதிமுக)---- அவரே<br /><br />106 கோபிசெட்டிபாளையம் ----செங்கோட்டையன் (அதிமுக)---- அவரே<br /><br />107 . திருப்பூர் வடக்கு ----ஆனந்தன் (அதிமுக)---- அவரே (முரட்டட்ட்டு வெற்றி)<br /><br />108 .திருப்பூர் தெற்கு ----தங்கவேல் (மா கம்யூ)---- அவரே<br /><br /><br />நீலகிரி<br />***********<br />109 .பவானிசாகர் --சுந்தரம் (இ கம்யூ)---- அவரே<br /><br />110 .ஊட்டி ----புத்தி சந்திரன் (அதிமுக)---- அவரே<br /><br />111 .கூடலூர் ----செல்வராஜ் (தேமுதிக)-----திராவிட மணி (தி மு க)<br /><br />112 . குன்னூர் ----- பெள்ளி(இ கம்யூ )-----ராமச்சந்திரன் (திமுக)<br /><br />113 மேட்டுப் பாளையம் -- அருண்குமார் (திமுக)----சின்னராஜ் (அதிமுக)<br /><br />114 .அவினாசி ---- கருப்பு சாமி (அதிமுக)---- அவரே<br /><br />கோயம்புத்தூர்<br />*********************<br /><br />115 .பல்லடம் -----------பரமசிவம் (அதிமுக)---- அவரே<br /><br />116 .சூலூர் ----ஈஸ்வரன் (கொங்கு முன்னேற்றக் கழகம்)----தினகரன் (தே மு தி க)<br /><br />117 .கவுண்டம்பாளையம் ---ஆறுக் குட்டி (அதிமுக)---- அவரே<br /><br />118 . கோவை வடக்கு ----வீரகோபால் (திமுக)---மலரவன் (அதிமுக)<br /><br />119 கோவை தெற்கு ---பொங்கலூர் பழனிசாமி (திமுக)----சேலஞ்சர் துரை (அதிமுக)<br /><br />120 . சிங்கா நல்லூர் -----49 ஓ------சின்னசாமி (அதிமுக)<br /><br />பொள்ளாச்சி<br />******************<br />121 தொண்டாமுத்தூர் ------------------ வேலுமணி (அதிமுக)---- அவரே<br /><br />122 கிணத்துக் கடவு -------------------- பாலாஜி இளங்கோ (மக்கள் சக்தி)---தாமோதரன் (அதிமுக)<br /><br />123 .பொள்ளாச்சி ---------கருப்பசாமி (அதிமுக)---- அவரே<br /><br />124 .வால்பாறை -----ஆறுமுகம் (இ கம்யூ )---- அவரே<br /><br />125 .உடுமலைப் பேட்டை ---பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)---- அவரே<br /><br />126 .மடத்துக்குளம் --- சண்முகவேலு (அதிமுக)---- அவரே<br /><br /><br />திண்டுக்கல்<br />*******************<br />127 .பழனி ----------------வேணுகோபால் (அதிமுக)---- அவரே<br /><br />128 ஒட்டன் சத்திரம் ் --- பாலசுப்ரமணி (அதிமுக)----சக்கரபாணி (தி மு க)<br /><br />129 . ஆத்தூர் -------- ஐ . பெரியசாமி (திமுக)---- அவரே<br /><br />130 .நிலகோட்டை----- 49 ஓ---- ராமசாமி (புதிய தமிழகம்)<br /><br />131 . நத்தம் -------- விஸ்வநாதன் (அதிமுக)---- அவரே<br /><br />132 . திண்டுக்கல் ------பாலபாரதி (மா கம்யூ )---- அவரே<br /><br />கரூர்<br />*******<br />133 .வேடசந்தூர் ---- பழனிசாமி (அதிமுக)---- அவரே<br /><br />134 . அரவாக்குறிச்சி -----கே சி பழனிசாமி (திமுக)---- அவரே<br /><br />135 .கரூர் --------------செந்தில் பாலாஜி (அதிமுக)---- அவரே<br />(கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி இந்திராவுக்கு . நான் தேவி வார இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது நீங்கள் இந்திரா என்ற புனைப் பெயரில் எழுதிய வீடு என்ற குறு நாவலை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தேன் . ஆனால் இப்போது மக்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தில் நீங்கள் இல்லை . காலக் கொடுமை !)<br /><br />136 கிருஷ்ணராயபுரம் ------எஸ் காமராஜ் (அதிமுக)---- அவரே<br /><br />137 .மணப்பாறை --------------சந்திரசேகர் (அதிமுக)---- அவரே<br /><br />138 .விராலிமலை -------- ரகுபதி (திமுக)-- விஜயபாஸ்கர் (அதிமுக)<br /><br />திருச்சி<br />***********<br />139 .ஸ்ரீரங்கம் ----------ஜெ. ஜெயலலிதா (அதிமுக)---- அவரே<br /><br />140 .திருச்சி மேற்கு ---மரிய பிச்சை (அதிமுக)---- அவரே<br /><br />141 .திருச்சி கிழக்கு ------மனோகரன் (அதிமுக)---- அவரே<br /><br />142 .திருவெறும்பூர் ----- 49 ஓ----- செந்தில் குமார் (தே மு தி க)<br /><br />143 .கந்தர்வகோட்டை -----சுப்பிரமணியன் (அதிமுக)---- அவரே<br /><br />144 புதுக்கோட்டை --- முத்துக்குமரன் (சி பி ஐ )---- அவரே<br /><br />பெரம்பலூர்<br />******************<br />145 .குளித்தலை ------- 49 ஓ--- பாபா சுந்தரம் (அதி முக)<br /><br />146 .லால்குடி -----பார்கவன் பச்சமுத்து (இந்திய ஜனநாயக கடசி)--சவுந்திர பாண்டியன் (திமுக)<br /><br />147 மண்ணச்ச நல்லூர் -----செல்வராஜ் (திமுக)--- பூனாட்சி (அதிமுக)<br /><br />148 .முசிறி -----------சிவபதி (அதிமுக)---- அவரே<br /><br />149 .துறையூர் -----இந்திரா காந்தி (அதிமுக)---- அவரே<br /><br />150 . பெரம்பலூர் ----இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக)---- அவரே<br /><br />கடலூர்<br />************<br />151 . திட்டக்குடி ---சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)---தமிழ் அழகன் (தே மு திக)<br /><br />152 விருத்தாச்சலம் --------------------49 ஓ--- முத்துக்குமார் (தே மு தி க)<br /><br />153 .நெய்வேலி ----பண்ருட்டி வேல்முருகன் (பா ம க )---- சிவ சுப்பிரமணியன் (அதி முக)<br /><br />154 பண்ருட்டி ------.சபா ராஜேந்திரன் (திமுக)-- சிவக் கொழுந்து (தே மு தி க)<br /><br />155 .கடலூர் --------- எம் சி சம்பத் (அதிமுக)---- அவரே<br /><br />156 .குறிஞ்சிப்பாடி -------எம் ஆர் கே பனீர் செல்வம் (திமுக)--சொரத்தூர் ராஜேந்திரன் (அதிமுக)<br /><br />சிதம்பரம்<br />***************<br />157 .குன்னம் ----- சிவ சங்கர் (திமுக)---- அவரே<br /><br />158 .அரியலூர் -----------துரை மணிவேல் (அதிமுக)---- அவரே<br /><br />159 .ஜெயங்கொண்டம் -----காடுவெட்டி குரு (பா ம க )---- அவரே<br /><br />160 .புவனகிரி -----------செல்வி ராமஜெயம்(அதிமுக)---- அவரே<br /><br />161 .சிதம்பரம் ----பாலகிருஷ்ணன் (மா கம்யூ)---- அவரே<br /><br />162 . காட்டுமன்னார்குடி --- ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்)-- முருகுமாறன் ் (அதிமுக)<br />(ரவிகுமார்.....! உங்களிடம் மக்கள் இன்ன்ன்னும் நிறைய்ய்ய்யய்ய்ய்ய எதிர்பார்க்கிறார்கள்கலைஞருக்கு சப்பை கட்டு கட்ட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினால் மட்டும் போதாது . கவனம் )<br /><br />மயிலாடுதுறை<br />***********************<br />163 . சீர்காழி ---------------------------சக்தி (அதிமுக)---- அவரே<br /><br />164 .மயிலாடுதுறை -------------49 ஓ---பால அருட்செல்வம் (தே மு தி க)<br /><br />165 பூம்புகார் -----பவுனுராஜ் (அதிமுக)---- அவரே<br /><br />166 .திருவிடைமருதூர் --- பாண்டியராஜன் (அதிமுக)---கோவி செழியன் (தி மு க)<br /><br />167 . கும்பகோணம் -------------- 49 ஓ---அன்பழகன் (திமுக)<br /><br />168 பாபநாசம் ---------------------49 ஓ -----துரைக்கண்ணு (அ தி முக)<br /><br />நாகபட்டினம்<br />********************<br />169 . நாகபட்டினம் ---------- ஜெயபால் (அதிமுக)---- அவரே<br /><br />170 .கீழ் வேளூர்----- நாகை மாலி (மா கம்யூ )---- அவரே<br /><br />171 . வேதாரண்யம் -------காமராஜ் (அதிமுக)---- அவரே<br /><br />172 . திருத்துறைப் பூண்டி ------உலகநாதன் (இ கம்யூ)---- அவரே<br /><br />173 .திருவாரூர் ------ மு. கருணாநிதி (திமுக)---- அவரே<br /><br />174 .நன்னிலம் --- காமராஜ் (அதிமுக)---- அவரே<br />(சபாஷ் நாகப்பட்டினம்)<br /><br />தஞ்சை<br />***********<br />175 மன்னார்குடி ----------49 ஓ----- ராஜா (திமுக)<br /><br />176 .திருவையாறு ------------ரத்னசாமி (அதிமுக)---- அவரே<br /><br />177 தஞ்சாவூர் ------------ரங்கசாமி (அதிமுக)---- அவரே<br /><br />178 ஒரத்தநாடு -------------49 ஓ-- வைத்தியலிங்கம் (அதிமுக)<br /><br />179 பட்டுக் கோட்டை ---- யோகநாதன் (சுயேச்சை)----ரங்கராஜன் (காங்)<br /><br />180 பேராவூரணி ------ --------------- 49 ஓ-- அருண் பாண்டியன் (தே மு தி க)<br /><br />சிவகங்கை<br />****************<br />181 . திருமயம் ----------------வைரமுத்து (அதிமுக)---- அவரே<br /><br />182 .ஆலங்குடி -----------ராஜபாண்டியன் (சுயேச்சை)-- கு ப கிருஷ்ணன் (அதிமுக)<br /><br />183 .காரைக்குடி -----------------------------------49 -- பழனிச்சாமி (அதிமுக)<br /><br />184 .திருப்பத்தூர் -------------------49 ஓ---- பெரிய கருப்பன் (திமுக)<br /><br />185 .சிவகங்கை --------------------49 ஓ----- குணசேகரன்( கம்யூ இ )<br /><br />186 . மானாமதுரை --------------49 ஓ----குணசேகரன் (அதிமுக)<br /><br />மதுரை<br />***********<br />187 . மேலூர் -------------ஆர் . சாமி (அதிமுக)---- அவரே<br /><br />188 . மதுரை கிழக்கு ----தமிழரசன் (அதிமுக)---- அவரே<br /><br />189 .மதுரை வடக்கு ----- 49 ஓ--- போஸ் (அதிமுக)<br /><br />190 . மதுரை தெற்கு ---- அண்ணாதுரை (மா கம்யூ )---- அவரே<br /><br />191 .மதுரை நடுவண் ---- கவுஸ் பாஷா (திமுக)----சுந்தர்ராஜன் (தே மு தி க)<br /><br />192 .மதுரை மேற்கு ----செல்லூர் ராஜு (அதிமுக)---- அவரே<br /><br /><br />தேனி<br />**********<br />193 சோழவந்தான் -----கருப்பையா (அதிமுக)---- அவரே<br /><br />194 உசிலம்பட்டி ------கதிரவன் (பார்வார்டு பிளாக் )---- அவரே<br /><br />195 .ஆண்டிப்பட்டி --------------------- 49 ஓ---தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக)<br /><br />196 .பெரியகுளம் ----லாசர் (மா கம்யூ )---- அவரே<br /><br />197 . போடிநாயக்கனூர் ---- லட்சுமணன் (திமுக)----- ஓ பன்னீர் செல்வம் ( அதிமுக)<br /><br />198 .கம்பம் -------------ராமகிருஷ்ணன் (திமுக)---- அவரே<br /><br />விருதுநகர்<br />****************<br /><br />199 .திருப்பரங்குன்றம் ------- ஏ கே டி ராஜா (தேமுதிக)---- அவரே<br /><br />200 திருமங்கலம் ---------முத்துராமலிங்கம் (அதிமுக)---- அவரே<br /><br />201 . சாத்தூர் --------கடற்கரை ராஜு (திமுக)-----உதயகுமார் (அதிமுக)<br /><br />202 . சிவகாசி ----------ராஜேந்திர பாலாஜி (அதிமுக)---- அவரே<br /><br />203 . விருதுநகர் -------மாபா பாண்டியராஜன் (மதிமுக )---- அவரே<br /><br />204 . அருப்புக்கோட்டை -------வைகை செல்வன் (அதிமுக)---- அவரே<br /><br /><br />ராமநாதபுரம்<br />*********************<br />205 அறந்தாங்கி --------ராஜ நாயகம் (அதிமுக)---- அவரே<br /><br />206 திருச்சுழி -----------.தங்கம் தென்னரசு (திமுக)---- அவரே<br /><br />207 .பரமக்குடி ----சுந்தர்ராஜன் (அதிமுக)---- அவரே<br /><br />208 . திருவாடானை ------ சிவமகாலிங்கம் (பாஜக)----சுப தங்கவேலன் (திமுக)<br /><br />209 .ராமநாதபுரம் ---- ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கடசி )---- அவரே<br /><br />210 . முதுகுளத்தூர் ------முருகன் (அதிமுக)---- அவரே<br /><br />தூத்துக்குடி<br />*****************<br />211 .விளாத்திகுளம் --------------49 ஓ---மார்க்கண்டேயன் (அதிமுக)<br /><br />211 தூத்துக்குடி ---------------------செல்லப் பாண்டியன் (அதிமுக)---- அவரே<br /><br />212 .திருச்செந்தூர் ---------------மனோகரன் (அதிமுக)----அனிதா ராதா கிருஷ்ணன் (தி முக)<br /><br />213 ஸ்ரீவைகுண்டம் ---------------- 49 ஓ---சண்முகநாதன் (அதிமுக)<br /><br />214 .ஓட்டப்பிடாரம் ---------------------49 ஓ-----கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் )<br /><br />215 கோவில்பட்டி --------------------49 ஓ-----கடம்பூர் ராஜு (அதிமுக)<br /><br />தென்காசி<br />***************<br />217 ராஜபாளையம் -----------------கோபால் சாமி (அதிமுக)---- அவரே<br /><br />218 .ஸ்ரீவில்லிபுத்தூர் ------------ 49 ஓ--- பொ ன்னுபாண்டி (இ கம்யூ)<br /><br />219 .சங்கரன்கோவில்------49 ஓ---- கருப்பசாமி (அதிமுக)<br /><br /><br />220 . வாசுதேவநல்லூர் ------துரையப்பா (அதிமுக)---- அவரே<br /><br />221 . கடையநல்லூர் --------490 ----- செந்தூர் பாணியன் (அதிமுக)<br /><br />222 தென்காசி ------------ 49 ஓ-- சரத் குமார் (ச ம க )<br /><br /><br />திருநெல்வேலி<br />***********************<br /><br />223 .ஆலங்குளம் -----------பி ஜி ராஜேந்திரன் (அதிமுக)---- அவரே<br /><br />224 .திருநெல்வேலி --------ஏ எல் எஸ் லட்சுமணன் (திமுக)----நைனார் நாகேந்திரன் (அதிமுக)<br /><br />225 அம்பாசமுத்திரம் -------சுப்பையா (அதிமுக)---- அவரே<br /><br />226 .பாளையங்கோட்டை ------பழனி (மா கம்யூ)-- மைதீன் கான் (திமுக)<br /><br />227 . நாங்குநேரி -------------------மகா கண்ணன் (பாஜக)----நாராயணன் (ச ம க)<br /><br />228 .ராதாபுரம் ---------------49 ஓ-- மைக்கேல் ராயப்பன் (தே மு தி க)<br /><br /><br />கன்னியாகுமரி<br />************************<br />229 .கன்யாகுமரி ----பசசைமால் (அதிமுக)---- அவரே<br /><br />230 . நாகர்கோவில் ---------பொன் ராதா கிருஷ்ணன் (பாஜக)----நாஞ்சில் முருகேசன் (அதிமுக)<br /><br />231 .குளச்சல் -----------லாரன்ஸ் (அதிமுக)--- பிரின்ஸ் (காங்)<br /><br />232 .பத்மநாபபுரம் -------புஷ்பலீலா (திமுக)---- அவரே<br /><br />233 . விளவங்கோடு --------லீமா ரோஸ் (மா கம்யூ )---- விஜயதாரணி (காங்)<br /><br />234 .கிள்ளியூர் -------------------ஜார்ஜ் (அதிமுக )--- ஜான் ஜேக்கப் (காங்)<br /><br />முடிஞ்சு போச்ச்ச்ச் !<br /><br /><blockquote>காங்கிரசைக் கருவறுத்தாச்சு நேரு சீமான் உட்பட எல்லோரும் சந்தோஷப் பட்டாலும் ஐந்து தொகுதிகளில் தமிழகத்தில் காங்கிரஸ் வென்றதை என்னால் சீரணிக்க முடியவில்லை .<br /><br />இதில் கிள்ளியூர் , விளவங்கோடு , குளச்சல் போன்ற தொகுதிகளில் மலையாளிகள் அதிகம் . அதே போல ஓசூரில் தெலுங்கர்கள் கன்னடர்கள் அதிகம் . தமிழினத்தை காங்கிரஸ் அழிப்பதற்காகவே இவர்கள் ஒட்டுப் போட்டு இருப்பார்கள் .(தன்மானத் தமிழர்கள் நினைப்பதை தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை தமிழ் நாட்டில் பெருகி வருவதற்கு இதுவே சாட்சி )<br /><br />ஆனால் என் வேதனை என்னவென்றால் பட்டுக் கோட்டையில் காங்கிரஸ் ஜெயித்துள்ளதே .... என்ன கொடுமை ! கேட்டால் அது காங்கிரசின் பாரம்பரியத் தொகுதி என்று ஒரு பன்னாடைத் தனமான பதில் . என்ன புண்ணாக்கு பாரம்பரியம் ? முப்பது வருடம் நம் குடும்பப் பெண்களுக்கு ஒருவன் வளையல் விற்றவன் என்பதற்காக குளிக்கும்போது அவன் எட்டிப் பார்ப்பதை அனுமதிக்க முடியுமா?<br /><br />அடச்சே !<br /></blockquote><br />34 நான்கு தொகுதிகளில் நான் 49 ஓ வை சிபாரிசு செய்தேன் . (திமுகவின் வெற்றியை விட அதிகம்) "49 ஓ வை தேர்தல் ஊழியர்களே புறக்கணித்தபோது அதை உங்கள் தோல்வியாக கருத முடியாது " என்று எனக்கு சப்பை கட்டு கட்டினார் ஒரு அன்பு நண்பர் .<br /><br />ஆனால் நான் அதை ஏற்கவில்லை . ஏனெனில் அதையும் மீறி மக்கள் 49 ஓ வுக்கு வாக்களித்து உள்ளனரே ! ஆக அது என் சறுக்கல் (அல்லது மக்களின் சறுக்கல் )தான் .<br />ஆக கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ..... 87 தொகுதிகளில் அடியேனின் தேர்வுக்கு மாறாக மக்கள் தங்கள் சட்ட மன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்துள்ளனர் (வாழ்க வளர்க ! மக்களும் .....ஏன் அவர்களும் கூட )<br /><br /><blockquote><span style="font-style:italic;">147 தொகுதிகளில் மக்களின் தீர்ப்பும் எனது தெரிவும் ஒன்றாகவெ இருந்துள்ளது .</span><br /></blockquote><br />எனவே நானும் கூட அறுதிப் பெரும்பான்மையில் வென்றுள்ளேன் , அதிமுகவைப் போலவே ....<br />என்று சொல்லலாம் தானே ?</span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-4536763381440594772011-04-29T23:08:00.000-07:002011-04-29T23:12:19.462-07:00# தாதா( சாஹிப் பால்கே)வுக்கு எல்லாம் தாத்தா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjESAwyyzGEDvWi232KTGc7DA5Maprrm7YgHfVkIq7ddiFecBPxJVPvtUBwyf-LU-kbzlr92qNpfr8eTUO4q9f8Xh7GQTgZPUZp1a7zPzFkw5zjV5h7d5JottZ3XFH98T3DvFEpXTmpiMMe/s1600/400px-Samikannu_Vincent.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjESAwyyzGEDvWi232KTGc7DA5Maprrm7YgHfVkIq7ddiFecBPxJVPvtUBwyf-LU-kbzlr92qNpfr8eTUO4q9f8Xh7GQTgZPUZp1a7zPzFkw5zjV5h7d5JottZ3XFH98T3DvFEpXTmpiMMe/s400/400px-Samikannu_Vincent.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5601255309917561026" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMvBHj_7-71gJRzmvHa5EoMqLqXah9LYA_NubETqaeSRvX36rBtDUHBAhNMWZBenWiybZoWxC74fxBYf9CqsX3q8101OHl15PExwFZf_kRnDPFvEpffzYvD8ESc3UwwRDoGAq95M5INt2v/s1600/the+arrival+or+train+by+lumiere.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 277px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMvBHj_7-71gJRzmvHa5EoMqLqXah9LYA_NubETqaeSRvX36rBtDUHBAhNMWZBenWiybZoWxC74fxBYf9CqsX3q8101OHl15PExwFZf_kRnDPFvEpffzYvD8ESc3UwwRDoGAq95M5INt2v/s400/the+arrival+or+train+by+lumiere.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5601255302453276322" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM_6fsj5Srbqegq3kETwoamScenOUlI89nM2MiMaGCFXhHVZcNU9BtIyT-nCZ6a1a6ZpHDP_XmNTXpeuqVDUgc-dL1NWGm4ucRAQuuZ_WWpWRFHT1aP05sUCkPmV1D3Pkuzv-fQ4-e-5Bn/s1600/rayilin+varugai+padaththil+oru+kaaatsi.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 161px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM_6fsj5Srbqegq3kETwoamScenOUlI89nM2MiMaGCFXhHVZcNU9BtIyT-nCZ6a1a6ZpHDP_XmNTXpeuqVDUgc-dL1NWGm4ucRAQuuZ_WWpWRFHT1aP05sUCkPmV1D3Pkuzv-fQ4-e-5Bn/s400/rayilin+varugai+padaththil+oru+kaaatsi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5601255298435903826" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiigTzUUWGi7Mr7g4LKyEXULi1z_-0sOJG09_iNTia4tFb6XuI1ZCXq_GiSfvZs9EY1fY1yGhj5I5Wr7frqbO7KQC1BF0frM0mXu6P8_3rwSII4F481pHxEkZwennHycHcBsbrMdVC4LFVF/s1600/k-balachander.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 262px; height: 270px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiigTzUUWGi7Mr7g4LKyEXULi1z_-0sOJG09_iNTia4tFb6XuI1ZCXq_GiSfvZs9EY1fY1yGhj5I5Wr7frqbO7KQC1BF0frM0mXu6P8_3rwSII4F481pHxEkZwennHycHcBsbrMdVC4LFVF/s400/k-balachander.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5601255292712942258" /></a><br /> <span style="font-weight:bold;">இயக்குனர் பால சந்தருக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்ற செய்தி வந்ததும் .....<br /><br />இது ரொம்ப பொருத்தமான விருது . ஆனா இதுவே ரொம்ப லேட் . 'நூறாண்டுகளுக்கு ' முன்பே பாலச்சந்தருக்கு இந்த விருதை கொடுத்திருக்க வேண்டும் (அதாவது பால்கே பிறப்பதற்கு முன்பே?) என்று மாய்மாலம் பண்ணும் சில பல பத்திரிக்கைகள் ஒருபுறம் .<br /><br />"அந்த விருதுக்கு உண்மையிலேயே பாலச்சந்தர் தகுதியானவர்தானா? உலகப் படங்களைப் பார்தது காப்பியடித்து கதைச்சுருக்கம் எழுதித் தருவதையே அனந்துவுக்கு வேலையாக கொடுத்து அவற்றை சுட்டு படங்கள் எடுத்தவர் ... அதையும் படமாக எடுக்காமல் , சினிமா என்பது கேமரா மொழி என்பதையே மறந்து ரேடியோ நாடகங்களை பிலிமில் எடுத்து பீம்சிங் ஸ்ரீதர் போன்ற மாபெரும் இயக்குனர் மேதைகள் உயர்த்தி வைத்த தமிழ் சினிமா உத்திகளை பல அடிகள் பள்ளத்தில் தள்ளியவர் ,...... தனது அதிமிகைப் படங்களின் வெற்றியின் மூலம் மகேந்திரன் பாரதிராஜா போன்ற இயக்குனர் சிற்பிகளையும் பின்னால் இழுத்தவர் ... அப்படிப்பட்ட பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது தருவது நியாயமா ?" என்று கொந்தளிக்கும் 'அறிவுஜீவி'கள் மறுபுறம் .....<br /><br /><span style="font-style:italic;">இந்த இரண்டு கட்சிகளையும் ஒரே பக்கம் ஒதுக்கிவிட்டு .. உண்மையிலும் உண்மையான ஒரு விசயத்தைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது .</span><br /><br />அதாகப் பட்டது நண்பர்களே .....!<br /><span style="font-style:italic;"><br />ஆத்துத் தண்ணி கடைமடைப் பகுதிக்கு கடைசியாகத்தான் வரும் எனறால் அது யதார்த்தம் . ஆனால் சிறந்த சாதனைகளுக்காக தரப்படும் உயர்ந்த விருதுகளைக் கூட தகுதி . தரம் பார்க்காமல் வடக்கே இருந்து தெற்கே வரிசையாகக் கொடுத்து கடைசியில்தான் தமிழ்நாட்டுக் கலைஞனுக்கு தருவோம் என்றால் அப்படி செய்பவன் கூட மடையன்தான் . அதுவும் முதல் மடையன் அல்ல . அவன்தான் கடை(சி) மடையன் .<br /><br />தாதா சாஹிப் பால்கே விருதும் அப்படித்தான் யுகக் கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் வந்தது . "சிவாஜியைப் பார்த்துதான் நடிப்பு என்றால் என்ன என்றே அறிந்தேன் " என்றும் "புராணங்களில் திரேதா யுகம் , கலியுக என்று பல யுகங்கள் இருக்கலாம் . ஆனால் நடிப்பு எனறால் அது ஒரே யுகம்தான் . அதான் பெயர் சிவாஜி யுகம் " என்றும் கூறிய கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு எல்லாம் தாதா சாகிப் பால்கே விருதைக் கொடுத்து விட்டு கடைசியாக சிவாஜிக்கு தாதா சாகிப் பால்கே விருதை தூக்கிப் போட்டார்கள் </span>.<br /><br />சிவாஜிக்கு முன்பு ராஜ்குமாருக்கு கொடுத்தபோதே தாதா விருது , தாத்தா விருதாக வீரியம் இழந்தது .<br /><br />இப்போது போய் கஞ்சா கருப்பு , சிசர் மனோகர் , கிரேன் மனோகர் போன்ற வளரும் நடிகர்களிடம் கூட உங்களுக்கு தாதா சாகிப் விருது வேணுமா இல்ல மூவாயிரம் ரூபா பணம் வேணுமா என்று கேட்டுப் பாருங்கள் . ":அந்த மானம் கெட்ட விருது நமக்கு எதுக்குண்ணே.. காசு இருந்தா நாலு காஞ்ச வயித்துக்கு சோறாவது போடலாம் " என்பார்கள் . தாதா சாஹிப் பால்கே விருதின் லட்சணம் அவ்வளவுதான் . அந்த விருதுதான் இப்போது பாலச்சந்தருக்கு வழங்கப் பட்டுள்ளது .<br />இருக்கட்டும் .<br /><blockquote><br />ஆனால் இந்திய அளவில் வாழ் நாள் சாதனையாளருக்கான விருதை தாதா சாகிப் பால்கே பெயரில்தான் வழங்க வேண்டுமா? அவரை விட தகுதியானவர் யாரும் கிடையாதா? உண்டு . இருக்கிறார்ஒருவர் . அநியாயமாக மறைக்கப் பட்ட ஒரு சரித்திரம் அது .</blockquote><br /><br />ஒட்டுமொத்த இந்தியாவில் இந்தியர் அனைவரும் சமம் என்று வடக்கத்திவாலாக்கள் உண்மையிலேயே கருதி இருந்தால் இந்த தாதா சாகிப் பால்கே விருதை யார் பெயரில் வழங்கி இருக்கே வேண்டும் தெரியுமா? சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற தமிழனின் பெயரில்தான் வழங்கி இருக்க வேண்டும் . சாதனையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட் விருது என்ற பெயரில் .<br /><br />யார் இந்த சாமிக்கண்ணு வின்சென்ட்?<br /><br />இன்று சினிமாவில் கோடி கோடியாகக் குவித்து மஞ்சள் குளிக்கிற அனைவராலும் நினைவு கூறப் படவேண்டிய தமிழன், இந்தியன்தான் சாமிக்கண்ணு வின்சென்ட் . ஆம்! .இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் இந்த சாமிக்கண்ணுதான். கண்ணு....... !<br /><br />1883 ல் பிறந்த சாமிக்கண்ணு 1905 இல் தென்னக ரயில்வேயில் எழுத்தராக நம்ம திருச்சிராப் பள்ளி புகைவண்டி நிலையத்தில் பணியாற்றி வந்தார் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் செய்த பணி அவருக்கு திருப்தி தரவில்லை (ஆத்தாடி அன்னிக்கு அது எவ்வளவு பெரிய தொகை!)<br /><br />அப்போது அவர் திருச்சியில் ஒரு பிரெஞ்சுக்காரரைச் சந்தித்தார் . பெயர் டூபான். டூபானின் தொழில் சினிமாப் படம் காட்டுவது (பார்றா !) இந்தியா, இலங்கை என்று பிரயாணித்துப் போய் சினிமா படம் காட்டி பிழைத்தவர் அவர் . டூபான் காட்டிய சில திரைப்படங்களைப் பார்த்த சாமிக்கண்ணுக்கு அந்த புதிய தொழில்நுட்பம் மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது .... சில்க் சுமிதாவின் பார்வை மாதிரி !. பிடித்துப் போனது.... பத்மினியின் நவரசம் மாதிரி !<br /><br />ஆனால் டுபானுக்கு? நம்ம ஊர் பழக்கமில்லாத ஊர்.... புதிய சூழ்நிலை!<br /><br />எனவே தன் வியாபாரத்தை தொடர முடியாத டூபான் தனது படம் காட்டும் கருவிகளையும், படச்சுருள்களையும் விற்க முடிவு செய்தார். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார் சாமிக்கண்ணு . இப்படியாக சினிமா எனும் சொர்க்க பூமி (நன்றி 'புதிய பாதை' பார்த்திபன்) ஒரு பிரஞ்சுக்காரன் கையில் இருந்து ஒரு இந்தியன் கைக்கு முதன்முதலாக வந்தது அப்போதுதான் .<br /><br />டூபானிடம் இருந்து காசு போட்டு வாங்கிய படக் கருவிகளையும் படச்சுருளையும் கொண்டு சாமிக்கண்ணுவே ஒளிப் படங்களை காட்ட ஆரம்பித்தார்.<br /><br />1897 ஆம் ஆண்டு லூமியர் சகோக்கள் இயேசுவின் வாழ்க்கை (the life of jesus christ ) என்ற படத்தை நொடிக்கு பதினாறு பிரேம்கள் என்ற மேனிக்கு தயாரிக்கிறார்கள் . இந்தப் படம் 1896 ஜூலை ஏழாம் தேதி முதன்முதலாக இந்தியாவில் திரையிடப் பட்டது<br /><br />அந்தப் படத்தை சொந்தமாக ஒரு பிரதி வாங்கிய சாமிக்கண்ணு அந்தப் படத்தை இந்தியா முழுக்க போய் போட்டுக் காட்டினார் படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.(மதம் மாறிய கிறிஸ்தவர் அல்லவா? அவருக்கு பொருத்தமான படத்தைதான் காட்டி இருக்கிறார் . ஆமென்!)<br /><br />தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த படமான "ரயிலின் வருகை' (மலைப்பாங்கான பின்னணி ரயில் ஒன்று நிலையத்தில் வந்து ரயில் நிற்க ஆட்கள் ஏறி இறங்குவதுதான் 46 செகண்ட் ஓடும் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் நாடு முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டினார் சாமிக்கண்ணு வின்சென்ட்<br /><br />தவிர , அயல் நாடுகளிலிருந்து படச் சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார் சாமிக்கண்ணு . ( இவர் தயாரித்த படங்களுடன் சேர்த்து, மொத்தம் 136 வெளிநாட்டு மவுனப் படங்கள் தமிழகத்தில் காட்டப் பட்டுள்ளன ) தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவிஇருக்கிறார்<br /><br />ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த ஒரு படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். . மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தி ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்.. படம் பார்ப்பதற்குகட்டணமாக அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கியிருக்கிறார் .<br /><br />மவுனப் படம் என்பதால் அதன் கதையை விளக்குவதற்காக ஒவ்வொரு காட்சியிலும் கையில் குச்சியுடன் திரையருகே நிற்பாராம் சாமிக்கண்ணு .<br /><br /><span style="font-style:italic;">(கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் மருதமுத்து மூப்பனார் என்பவர் இங்கிலாந்து சென்று அன்றைய இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து தமிழகத்தில் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்தி )</span><br /><br />சும்மா குச்சியோடு நின்றதோடு நின்று விடவில்லை சாமிக்கண்ணு . படம் காட்டும் முறையில் பல புதுமைகளை அறிமுகப் படுத்தினார் அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) கொட்டகை சினிமா. ஒரு புது ஊருக்கு படம் காட்டச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிடுவார் . இப்படி டெண்ட் அடித்து படம் காட்டுவது இவர் செய்த பெரிய புதுமை<br /><br />அது மட்டுமல்ல . சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் சினிமா காட்ட என்றே முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார்சாமிக்கண்ணு . (பெயரைப் பார்த்தீர்களா? தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சமர்ப்பணம்!) மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, வட இந்தியா , மலேசியா ,சிங்கப்பூர் , பர்மா ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார்.<br /><br />மழைக்காலத்தில் டெண்டுக் கொட்டகை ஒழுகி படம் பார்க்க விடாமல் தொந்தரவு செய்வதைப் பார்த்த சாமிக் கண்ணு சினிமா காட்ட கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை முடிவு செய்து முதன்முதலில் (இந்தியாவில் என்று தாராளமாகச் சொல்லலாம்) 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (பின்னாளில் அதுதான் கோவை டிலைட் தியேட்டர் )இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்களாம் இந்தத் திரையரங்குக்கு .<br /><br />சாமிக்கண்ணுவைப் பின்பற்றி சென்னையில் வெங்கையா என்பவரால் கெயிட்டி திரையரங்கம் கட்டப் பட்டது , நீண்ட ஆயுள் பெற்ற திரையரங்கம் இது )இதையடுத்து சென்னையில் மேலும் சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.<br /><br />இங்கேதான் அந்த சம்பவம் பற்றி குறிபிட வேண்டியுள்ளது .<br /><br />வின்சென்ட் சாமிக்கண்ணு காட்டிய ஏசுவின் வாழ்க்கை படத்தை பார்க்கிறார் ஒருவர் ,<br /><br />மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள , டிம்பகேஷ்வர் என்ற ஊரில் பிறந்து மும்பையிலும் பரோடாவிலும் கல்வி கற்று கோத்ரா நகரில் ஒரு போட்டோ கிராபராக வாழ்க்கையைத் துவக்கி, இந்திய தொல்பொருள் துறையில் டிராப்ட்ஸ் மேனாக பணியாற்றி ஓவியர் ராஜா ரவி வர்மாவிடமும் பணியாற்றி .....லூமியர் சகோதரர்களின் கீழ் பணியாற்றிய நாற்பது மேஜிக் பணியாளர்களில் ஒருவரான கார்ல் ஹெட்ஸ் என்பவரையும் சந்திக்கும் வாய்பையும் பெற்றிருந்த ....(கொஞ்சம் மூச்சு விட்டுக்கவா?)அவரின் பெயர் தண்டி ராஜ் கோவிந்த பால்கே . உங்கள் எல்லோருக்கும் உடனே புரிய வேண்டும் எனறால் தாதா சாஹேப் பால்கே !<br /><br />நம்ம ஊரு வின்சென்ட் சாமிக்கண்ணு காட்டிய இயேசுவின் வாழ்க்கை படத்தைப் பார்தது கவரப் பட்டு சினிமா என்கிற தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்ட பால்கே, பிறகு படம் எடுக்கவே முடிவு செய்தார் . மும்பை காரனேஷன் அரங்கில் நடிக்கப் பட்ட புண்டளிக் என்ற மேடை நாடகத்தை முதன்முதலில் படம் பிடித்துப் பார்த்தார் பால்கே . (சத்தம் எதுவும் வராது . ஊமைப் படம்தான் )<br /><br /> 1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் படமான அதாகப் பட்டது முதல் மவுனப் படமான ராஜா ஹரிச் சந்திராவை தயாரித்து 1913 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள், புண்டளிக் மேடை நாடகத்தை படம் பிடிதத , அதே மும்பை காரனேஷன் அரங்கில் போட்டுக் காட்டினார் .<br /><br />இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் அந்த ஹரி சந்திரா .<br /><br /><blockquote>படம் எடுத்த பால்கே பெயரால் வருடா வருடம் கம்பீர திரை விருது<br /><br />அதில்தான் நம்ம சிவாஜிக்கு தர வேண்டிய சமயத்தில் தந்து கவுரவப் படுத்தாமல் தோலான் துருத்திகெல்லாம் கொடுத்து விட்டு கடைசியாக தூக்கிப் போட்டார்கள் .<br /><br />ஆனா அந்த பால்கே வுக்கே படம் எடுக்க தூண்டுதலாக இருந்த ... பால்கேவுக்கு சினிமா சொல்லிக் கொடுத்த முதல் இந்திய சினிமாக்காரர் வின்சென்ட் சாமிக்கண்ணு பேரால் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் விருதாவது உண்டா?<br /><br />ஒருவேளை வின்சென்ட் சாமிக்கண்ணு அந்தக் கால ராமேஸ்வரம் மீனவரோ என்னவோ?<br /><br />பால்கேவுக்கு படம் காட்டியதோடு நின்றிருந்தால் கூட சாமிக்கன்னுவைப் புறக்கணிப்பதற்கு ஒரு சொட்டை சொள்ளை காரணமாவது கிடைக்கும் .<br /><br />ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்த சாமிக்கண்ணுவின் சாதனைகளைச் சொல்லவா?<br /><br />தாங்குவீர்களா?</blockquote><br /><br /> கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே. . தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு தர அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமியின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப் பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.<br /><br />சினிமா துறைக்கும் சாமிக்கண்ணு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல<br /><br />ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்க்கேற்றபடி புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, 1933 இல் கல்கத்தா சென்று வள்ளி திருமணம் என்ற பேசும்படத்தை தயாரித்தார் . புகழ்பெற்ற நடிகை நடிகை டி பி ராஜ லட்சுமி , வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் அப்போதே தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது அந்தப் படம் . . அதன் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணு தனது வெரைட்டி ஹால் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் .<br /><br /> இதோடு போச்சா ?1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார்.(அப்படியும் புறக்கணிச்சுட்டாங்களே ) மொத்தம் பதினெட்டு திரையரங்குகள் வைத்திருந்தார் சாமிக்கண்ணு .<br /><br />பின்னாளில் பெறும் புகழ் பெற்று தமிழ் சினிமா நாயகர்கள் பலரை உருவாக்கிய சென்ட்ரல் ஸ்டுடியோஸ் 1937 இல் கோவையில்தொடங்கப் பட்டபோது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.சாமிக்கண்ணு 1942 இல் மரணமடைந்தார்.<br /><blockquote><br />இப்படிப் பட்ட ஒரு மாபெரும் சினிமாக்காரனை மறைத்து விட்டுதான் தாதா சாஹிப் பால்கேவை மட்டு தூக்கிப் பிடித்தார்கள் தாதாத்தனமாக !</blockquote><br /><br />இப்போது சொல்லுங்கள் தாதாசாஹிப் பால்கே விருது யார் பெயரால் வழங்கப் படவேண்டும் . இந்த உண்மையை உரக்கச் சொல்லிவிட்டு அப்புறம் நம்மவர்கள் விருது வாங்கப் போகட்டும் . </span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-31832376571859822172011-04-14T23:34:00.000-07:002011-04-14T23:51:23.828-07:00# 49ஓ வை பஞ்சராக்கிய தேர்தல் கமிஷன் அலுவலர்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU8p5fkvvJ6d-6b-HPPYIOQOTlYV9tEsTnF93K0QhDASXiyj95y-Hmxj6iut3m_8PIOp67__09qKZkjo_gb3_QyHotAea_IsAUQ0Ov35dsQLBNc40uXqdATS-MMT0jRXGeJ6CrecmnwRCo/s1600/horse.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU8p5fkvvJ6d-6b-HPPYIOQOTlYV9tEsTnF93K0QhDASXiyj95y-Hmxj6iut3m_8PIOp67__09qKZkjo_gb3_QyHotAea_IsAUQ0Ov35dsQLBNc40uXqdATS-MMT0jRXGeJ6CrecmnwRCo/s400/horse.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595698035752641746" /></a><br /><br /><span style="font-weight:bold;">இந்த தேர்தலின் முடிவுகள் மூலம் ஓரளாவது நன்மைகள் பெற , (அல்லது குறைந்த அளவில் தீமைகள் பெற ?) 234 தொகுதிகளிலும் மக்கள் ஒட்டுப் போடவேண்டிய வேட்பாளர்கள் யார் என்பது பற்றி முன்பு கொடுத்த பட்டியல் காரணமாகவும் ,<br /><br />அல்லது அதற்கு முன்பே சில தொகுதிகளில் மட்டுமாவது 49 ஓ வின் அவசியம் பற்றி அதிகம் தெரிந்தவர்களும் ,<br /><br /> பல்வேறு தொகுதிகளில் 49ஓ வில் வாக்களிக்க முயன்றிருக்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு கிடைத்த அவமானங்களும் புறக்கணிப்புகளும் கேவலமான பார்வைகளும்! அட ! அட ! அடடா....... !<br /><br /><blockquote>அந்த அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கேவலமான பார்வைகளையும் வழங்கியவர்கள் அங்கு இருந்த கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள்<br /><br />---- எனறால் அதில் வருத்தப் பட (பெரிதாய் ) ஒன்றும் இல்லை .<br /><br />ஆனால் அந்த 'சாதனைகளை' நிகழ்த்தியவர்கள் பூத்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள்தான் என்பதைப் பார்க்கும்போது இந்த தேர்தல் கமிஷனர்கள் , ஏராளமான டிவி மைக்குகள் சூழ வெற்றிப் புன்னகையோடு" மக்கள் பயமில்லாமல் வாக்களிக்கப் போகலாம்" என்று உறுமுவது எல்லாம் சும்மா ஊளை உதாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.</blockquote><br /><br /><span style="font-style:italic;">(அடப் பாவி ! எந்த அளவுக்கு இந்த முறை தேர்தல் கமிஷன் வன்முறை நடவாமல் பார்த்துக் கொண்டுள்ளது ... ! பணப் புழக்கத்தை எப்படி கொஞ்சூண்டாச்சும் குறைத்து உள்ளது.....! இது நல்ல விஷயமில்லையா என்று கருத்துக் கூறக் கை பரபரப்போரே! உங்கள் வீட்டுப் பெண்கள் சோறு மட்டும் குழையாமல் வடித்தால் போதுமா? குழம்பு அடிபிடித்து தொண்டை காந்தினால் பரவாயில்லையா ? நீங்கள் குழம்பு அடிபிடித்ததைக் குற்றம் சொல்லும்போது "அதான் சோறு குழையாம இருக்கு இல்ல... தின்னுடா வெண்ண .." எனறால் ஓகே வா ?)</span><br /><br /><blockquote>என் பேச்சை கேட்டு 49 ஓ போடப் போன தென் மாவட்டப் பெரியவர் ஒருவர் எனக்கு போன் செய்து . "ஏய் ..என்னப்பா இது... ?ஒம் பேச்சக் கேட்டு 49 ஓ போடப் போனா ... அந்தத் தாயளி மவன், என்ன பீத்தொடைகிற கல்லு அளவுக்கு கூட மதிக்கிலப்ப்பா " என்றார் . அவர் சொன்னது எந்தக் கட்சியின் பூத் எஜண்டையும் அல்ல . தேர்தல் நடத்திய அலுவலர் தொன்னைகளை </blockquote>!<br /><br />அதே போல சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கே கே நகர் தபால் அலுவலகத்துக்கு எதிர் சந்தில் உள்ள எம் ஏ கே கான்வென்ட் பள்ளியில் 49 ஓ போடப் போன ஒருவர்.......,<br /><br /><span style="font-style:italic;"> தன்னை கோர்ட் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்தது போல நிற்க வைத்ததையும் சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர் 49 ஓ போடவேண்டும் என்ற கோரிக்கையை காதில் வாங்கவே இல்லை என்பதையும் (செவிடன்களை எல்லாம் தேர்தல் பணிக்கு போடலாமா பிரவீன் குமார்?) எவ்வளவோ வற்புறுத்தியும் முடியாத நிலையில் வேறு வழி இல்லாமல் ஒரு கடசி வேட்பாளருக்கு போட்டு விட்டு வந்ததையும் விளக்கினார் , பரிதாபமாக .</span><br /><br /><blockquote>பொதுவாக 49 ஓ போடப் போனால் என்ன நடக்கும் ?<br /><br />49 ஓ என்று சொன்னதும் எல்லா கடசி ஏஜெண்டுகளும் முறைப்பார்கள் . ஐந்து வருடமாக தெரு நாய் சொறிநாய் கணக்காய் தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தவன் எல்லாம் அதிசயமாக , ஒன்று கூடி ஒன்றிணைந்து முறைப்பார்கள் . எல்லா பயலுக்கும் தான் எதிரி என்பதை அந்த வாக்காளன் சத்தம் போட்டு அறிவிக்கிறான் அல்லவா? அதுதான் காரணம் . ! ஆனால் அதற்கு பெரிதாக பயப்படத் தேவை இல்லை . திரும்பி முறைத்தோ அல்லது குறைந்த பட்சம் அந்த முறைப்புகளை கண்டு கொள்ளாமலோ வாக்காளன் 49 ஓ வில் பதிவு செய்துவிட்டு வரலாம் . (என்ன .. காசு வாங்கிக் கொண்டு 49 ஓ எனறால் , காசு கொடுத்த கட்சிக்காரன் செருப்பு பிய்ய பிய்ய அடிப்பான் ) மற்றபடி தேர்தல் அலுவலர்கள் 49 ஓ வில் பதிய உதவுவார்கள்</blockquote><br /><br />------ என்றுதான் அறியப் பட்டது .<br /><br />ஆனால் இந்த முறை பூத்களின் கடசி ஏஜெண்டுகள் வழக்கம் போல முறைத்துள்ளனர் . திரும்பி முறைத்த தைரியசாலிகளிடம் சில பூத் ஏஜெண்டுகள் " எதுக்குண்ணா உங்க ஓட்ட வேஸ்ட் பண்றீங்க ?" என்று தப்பான நியாயம் பேசி மனம் மாற்றவும் முயன்றுள்ளனர் . ஆனால் அதற்கு மேல் எந்தத் தொகுதியிலும் எந்த கட்சியின் பூத் ஏஜெண்டுகளும் 49 ஓ போட ஆசைப் படும் மக்கள் மீது பெரிதாக கோபப் பட்டதாக தெரியவில்லை . <span style="font-style:italic;">நன்றி அனைத்து கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுக்கு ! </span><br /><br />ஆனால் .. ஏதோ எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜி ஆர் கணக்காய் தேர்தல் கமிஷன் இந்த முறை சவுக்கெடுத்து விட்டதாக எல்லோரும் பீத்திக் 'கொல்லும்' வேளையில், 49 ஓவுக்கு எதிராக தேர்தல் கமிஷனின் பூத் அலுவலர்கள் என்னவெல்லாம் செய்துள்ளனர் தெரியுமா?<br /><blockquote><br />1 ) வாக்காளனின் 49 ஓ கோரிக்கையை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது<br /><br />2 ) வாக்காளரை தாமதிக்க வைத்து கட்சிக்காரகளின் கோபப் பார்வைக்கு ஆளாக்கி ஏதாவது கட்சிக்கு ஒட்டுப் போட்டுவிட்டும் வெளியேறும் மன நிலையை ஏற்படுத்துவது .<br /><br />3 ) வாக்காளரின் அடையாள அட்டையை உயரத் தூக்கிப் பிடித்து எல்லா கடசி ஏஜெண்டுகளுக்கும் அர்த்த புஷ்டியோடு காட்டுவது .<br /><br />4 ) வேட்பாளரின் பெயர் தந்தை பெயர் முகவரி ஆகியவற்றை மீண்டும் மீண்டும் சத்தம் போட்டு படித்து கட்சிக்காரர்கள் (அனைவருக்கும் ) இவன் உங்கள் அனைவருக்கும் எதிரானவன் என்று பிரகடனப் படுத்தி பயமுறுத்துவது .<br /><br />5 ) 49 ஓ வாக்காளரை கேவலமாகப் பார்ப்பது .<br /><br />6 ) கையெழுத்துப் போட பேனாவைத் தூக்கிப் போடுவது .</blockquote><br /><br />இதையெல்லாம் செய்வது எங்க வீட்டுப் பிள்ளை திரைப்பட எம்ஜி ஆரின் வாரிசுகளாக தங்களை இந்த முறை காட்டிக் கொண்ட தேர்தல் கமிஷன் தலைமையில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளே !<br /><br /><blockquote>சந்தேகங்கள் மூன்று<br /><br />தேர்தல் பணி அலுவலர்கள் பலரும்<br /><br />1 ) 49 ஓ வுக்கான பணியை செய்வதை எக்ஸ்ட்ரா வேலை என்று நினைக்கும் வாழைப்பழச் சோம்பேறிகளா ?<br /><br />2 ) இல்லை .. ஆளுங்கட்சி அல்லது அடுத்த ஆளுங்கட்சியாக நம்பப் படும் கட்சிகளுக்கு சொம்படிப்பவர்களா?<br /><br />3 ) அல்லது இரண்டுமா?</blockquote><br /><br /><span style="font-style:italic;"> (இதை ஏதாவது அரசுத் தேர்வில் தாராளமாக கேள்வியாக வைக்கலாம் )</span><br /><br /><br />பல இடங்களில் பல அலுவலர்கள் 49 ஓ வை அனுமதித்து உள்ளனர் . மறுக்கவில்லை .ஆனால் எப்படி நடந்துள்ளது? <br /><br />ஒன்று அந்த அலுவலர்கள் அத்தி பூத்தாற்போல நேர்மையாளர்களாக இருந்திருக்க வேண்டும் . அல்லது 49 ஓ போடப் போனவர்கள் ஏதாவது ஒரு பொதுப் பிரச்னையின் அடிப்படையில் கும்பலாக போயிருக்க வேண்டும் .<br /><br />ஆக , ஒரு தனி மனிதன் பொதுவில் பொது நல நோக்கில் 49 ஓ போடுவது இன்னும் சுலபமாகவில்லை .<br /><br />49 ஓ போடப் போவதில் உள்ள அடிப்படைப் பிரச்னை என்ன?<br /><br />நாம் முன்னரே குறிப்பிட்டது போல ,.<br /><br />49 ஓ என்று சொன்னதும் எல்லா கடசி ஏஜெண்டுகளும் நம்மை முறைப்பார்கள் . ஐந்து வருடமாக தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தவன் எல்லாம் அதிசயமாக , ஒன்று கூடி ஒன்றிணைந்து முறைப்பார்கள் . எல்லா பயலுக்கும், தான் எதிரி என்பதை அந்த வாக்காளன் சத்தம் போட்டு அறிவிக்கிறான் அல்லவா? அதுதான் காரணம் . !<br /><br />ஆனால் தேர்தல் கமிஷன் என்ன சொல்கிறது ? உங்கள் வாக்கு ரகசியமானது எனவே பயப்பாடாமல் வாக்களியுங்கள் என்கிறது . <blockquote>ஆனால் 49 ஓ போடுவதில் ரகசியம் எங்கே வாழ்கிறது ?</blockquote><br /><br />'பொதுவாக ஒட்டுப் போடுவபவனுக்குதான் ரகசியம் காக்கப் படும் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது...... . ஆனால் 49 ஓ என்பது யாருக்கும் ஓட்டு இல்லை என்று கூறுவது ...... அவனது ரகசியம் எதற்கு காக்கப் பட வேண்டும்?' என்று அநியாயமாக வாதாடத் தயாராகும் அறிவு ரவுடிகளுக்கு ஒரு வார்த்தை .<br /><blockquote><br />தேர்தல் நாளில் ஒட்டுப் போடும் இடத்துக்கு அரசால் அனுமதிக்கப் பட்டு, ஒட்டுப் போடுபவர்களின் அதே வரிசையில் வந்து, 49 ஓ போடுகிறவன் என்ன செய்ய வருகிறான்? எல்லா கட்சிகளும் தவறான வேட்பாளரை நியமித்துள்ளதைக் கண்டித்துதான் , தன் கருத்தை --- குரலை -- வாக்குரிமையை பயன்படுத்துகிறான் . ஆக அவனும் வாக்காளன்தான் . சொல்லப் போனால் அவன் , எல்லா கட்சிகளின் அயோக்கியத்தனததையும் கண்டிக்கிற கம்பீர வாக்காளன் . அவனுக்கு தனி வழி ஏற்படுத்திக் கொடுத்தால் கூடத் தப்பில்லை . ஆனால் அதுவும் அவனை அடையாளப் படுத்தும் என்பதால் சமுதாய நேர்மையின் பொருட்டு வாக்களிக்க வரும் கும்பலோடு கும்பலாக அவனும் நிற்கிறான் . அவன் உயர்ந்தவன் . ரகசியமான மானசீகமான மரியாதைக்குரியவன் ,</blockquote><br /><br /><span style="font-style:italic;">ஆனால் பிக்பாக்கெட் அடித்தவனை ஊரறிய முச்சந்தியில் நிறுத்துவது போல, அந்த கம்பீர வாக்காளனை நிற்க வைத்து அடையாள அட்டையை சுற்றிச் சுற்றி வளைத்து வளைத்துக் காட்டி, பெயர் , தந்தை பெயர் முகவரி இவற்றை ஏலம் போட்டு காட்டிக் கொடுத்து கயமை செய்வது என்ன நியாயம்?<br /><br />இப்படி செய்துவிட்டு உங்கள் வாக்குரிமை ரகசியமானது என்று சொல்வது என்ன நியாயம் ?</span><br /><br />என்ன செய்யவேண்டும்?<br /><br /> கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கான அடையாளங்கள் எப்படி வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிக்கப் படுகிறதோ அதே போல 49 ஓ வுக்கும் ஒரு பட்டன் வைக்கப் பட வேண்டும் .<br /><br />49 ஓ பதிவும் இரகசியமாக்கப் பட வேண்டும் .<br /><br /><blockquote>அதுவும் மாற்றுக் கருத்துக்கு மரியாதை தருவதுதான் உண்மையான ஜனநாயகம் எனறால் முதல் பட்டனை 49 ஓ வுக்கு அளிக்க வேண்டும் . . அதுதானே நியாயம் ?</blockquote><br /><br />சரி .... மற்ற வேட்பாளர்களை விட 49 ஓ அதிக வாக்குகளைப் பெற்றால் ?<br /><br />வேறென்ன ... மீண்டும் மறு தேர்தல்தான் .<br /><br />என்ன தப்பு?<br /><span style="font-style:italic;"><br />யாரோ ரவுடிகள் ஓட்டு இயந்திரத்தை உடைத்ததால் மறு தேர்தல் வைக்கிறோம் .<br /><br />ஏதோ ஒரு பொறுக்கி கும்பல் கள்ள ஒட்டுப் போட்டது நிரூபிக்கப் பட்டால் மறுதேர்தல் வைக்கிறோம் .<br /><br />இருபத்தி நாலு மணி நேர குடிகாரனை எம் எல் ஆ வாக்கி அந்த ஆள் சொல்லாமல் கொள்ளாமல் போதையில் புட்டுக் கொண்டால் மறுதேர்தல் வைக்கிறோம் .</span><br /><br /><blockquote>ஒரு நல்ல வேட்பாளரை கூட தர முடியாத எல்லா கட்சிகளையும் மக்கள் கண்டித்திருப்பதைக் கொண்டாட ஒரு மறுதேர்தல் வைத்தால் என்ன?</blockquote><br /><br />செலவுதான் பிரச்னை எனறால் அதற்கும் வழி உண்டு .<br /><br /><blockquote>ஒரு தொகுதியில் 49 ஓ வெற்றி பெற்றது என்று வைத்துக் கொள்வோம் . அங்கு வேட்பாளர்களை நிறுத்திய மற்ற கட்சிகள் மறு தேர்தலுக்கான செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும் . குறைந்த ஓட்டுக்களைப் பெற்ற கடசி அதிக செலவு . அதிக ஓட்டுகளைப் பெற்ற கடசி குறைந்த செலவு என சதவீத அடிப்படையில் பிரித்துக் கொள்ள வேண்டும்</blockquote><br /><blockquote><br />49 ஓ வை ஒட்டுப் பதிவு இயந்திரத்துக்குள் அமைத்து அதையும் ரகசிய வாக்காக மாற்றாதவரை 49 ஓ பற்றி மூச்சு முட்ட பேசுவதில் பயன் இல்லை .</blockquote><br /><br />இதுதான் இந்தத் தேர்தல் வாக்குப் பதிவு நமக்கு உணர்த்திய பாடம் .<br /><span style="font-style:italic;"><br />நடக்குமா?</span> </span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-36786002126241309832011-04-13T00:22:00.000-07:002011-04-13T00:26:07.970-07:00#காங்கிரசைக் கருவறுப்போம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-OMx_Qm1L5OSnBG0-ooAFDEqlbhX-wde5bRX_EoAK1qc9CEfYqjaiBvK1ucCQsA8YZViYEiFQN3amc1cE_kp_5w4M5vwjslIdiWK8kMyZd_e24jvW2fmZDHtepgRj2sA68rOvjVPW5teg/s1600/ballot.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 323px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-OMx_Qm1L5OSnBG0-ooAFDEqlbhX-wde5bRX_EoAK1qc9CEfYqjaiBvK1ucCQsA8YZViYEiFQN3amc1cE_kp_5w4M5vwjslIdiWK8kMyZd_e24jvW2fmZDHtepgRj2sA68rOvjVPW5teg/s400/ballot.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594965443107714322" /></a><br /><br /><span style="font-weight:bold;">பிரபாகரனின் குடும்பத்தாருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் அறிவரசன் . <br /><br />இந்திய ராணுவத்தின் உதவியோடு சிங்களக் காடையர்கள் ஈழத்தில் தமிழர்ககளை கொன்று குவித்த கோரப் புகைப் படங்களைக் காட்டி, அறிவரசன் அவர்கள் காங்கிரசாருக்கு ஓட்டளிக்கக் கூடாது என்று கடையநல்லூரில் பரப்புரை செய்திருக்கிறார் . <br /><br /><blockquote><span style="font-style:italic;">அவரை -----அந்த பெரியவரை ---முதியவர் என்றும் பாராமல் சில காங்கிரஸ் கம்மனாட்டிகள் அடித்து காயப் படுத்தியுள்ளனர் .<br /><br /> நூறடி தூரத்தில் பிரச்சாரம் செய்தும் அதைக் கண்டு கொள்ளவில்லை காங்கிரஸ் வேட்பாளரான பீட்டர் அல்போனஸ்.(<span style="font-weight:bold;"></span>நன்றி ஜூனியர் விகடன் )<br /></span></blockquote><br /> நமக்கு வந்த சில கடையநல்லூர் நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள் அடிக்க சொன்னதே இந்த பீட்டர் அல்(பை)போன்ஸ்தான் என்கின்றன .<br /><br /><span style="font-style:italic;">தமிழக மீனவனை தினம் சுட்டுக் கொல்லும் சிங்களவனையோ துணை போகும் மத்திய அரசு கபோதிகளையும் கண்டிக்க துப்பு இல்லாமல் ...</span>.<br /><br /> உண்மையை சொன்னதற்காக தமிழ் நாட்டைச் சேர்ந்த வயதில் மூத்த தமிழாசிரியர் அடிபடக் காரணமாக இருந்த பீட்டர் அல்போன்சை இனி கேண்டீன் கான்ட்ராகடராகக் கூட சட்ட மன்ற வளாகத்தில் நுழைய விடக் கூடாது .<br /><br /><blockquote>உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ராஜபக்செவைக் கொண்டு வந்து தாம்பூலம் மடித்து கொடுத்தது தாசித்தனம் செய்தது மத்திய அரசு . <br /><br /> ஆனால் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்காக நாலு தமிழக மீனவர்களை கொன்று உள்ளான் இலங்கை இராணுவத்தான் . <br /><br />இந்த அநியாயத்தை கண்டு கொள்ளாத காங்கிரஸ் காட்சியை சட்டமன்றத்தில் சதிராட விடடால் அப்புறம் நம் ஊரில் உப்பளங்கள் எதற்கு ?</blockquote><br /><br />காங்கிரசை கருவறுப்போம் . </span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-59786338437332403682011-04-12T23:25:00.000-07:002011-04-12T23:37:37.612-07:00# அவசியம் ஒட்டுப் போடுங்கள் ;<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWsqQ_lEXe4Jqgjn5Iv7tVpyLmh6JjnM7djJpXx5rhMP-5D0mQsJs-t49lskAxTTfJWMVK0akWR8wwwiHj-hcHqhFUnaw3cYjbgKxV3thsILq91OT8L0jpRD78gKzB7k_hwbp8GP1WbVom/s1600/ballot.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 323px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWsqQ_lEXe4Jqgjn5Iv7tVpyLmh6JjnM7djJpXx5rhMP-5D0mQsJs-t49lskAxTTfJWMVK0akWR8wwwiHj-hcHqhFUnaw3cYjbgKxV3thsILq91OT8L0jpRD78gKzB7k_hwbp8GP1WbVom/s400/ballot.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594953492170944514" /></a><br /><span style="font-weight:bold;"><blockquote></blockquote>வாக்குப் பதிவு அறையில் அவன் நுழைவதைப் பாருங்கள் . ஒடுக்கப் பட்ட பாட்டாளியின் முகபாவத்தோடு உள்ளே நுழைகிறான் . அவன் வெளியே வரும்போது மன்னனின் சாயலோடு திரும்புகிறான் " --- பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பிரபல எழுத்தாளர் விக்டர் ஹியூகோ பேசியது<blockquote></blockquote><br /> <br /> <span style="font-style:italic;"> --- நன்றி பத்திரிக்கை நண்பர் ப. திருமா வேலன் (17 --04 --11 ஜூனியர் விகடனில் )</span><br /><br />பாட்டாளிகளே! மன்னராக அவசியம் ஒட்டுப் போடுங்கள் !<br /><br /><span style="font-style:italic;">எல்லா கரைகளுமே களங்கங்கள் இல்லை</span> . ஆள் காட்டி விரலில் வைக்கப் படும் ஓட்டு அடையாள மைக் கறை புனிதமானது ! கம்பீரமானது ! ஆண்களே ! அவசியம் ஒட்டுப் போடுங்கள் !<br /><br /><blockquote>பெண்களே ! உங்கள் அழகான -- புனிதமான --- தெய்வீகமான --செல்லக் குழந்தையின் கன்னத்தில் வைக்கப் படும் திருஷ்டி மையை விட கோடி மடங்கு புனிதமானது இன்று நீங்கள் உங்கள் ஆள் காட்டி விரலில் வைத்துக் கொள்ளும் தேர்தல் மை . . அதுதானே உங்கள் செல்லக் குழந்தையின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது!</blockquote><br /><br /><span style="font-style:italic;"> எனவே , இந்தக் கறை நிஜமாலுமே நல்லது !</span><br /><br />எனவே அவசியம் ஒட்டுப் போடுங்கள் .<br /><br />வெயில் அதிகம்தான் . ஆனால் நீங்கள் போடும் ஓட்டு அடுத்த ஐந்து ஆண்டு உங்களை லஞ்ச ஊழல் இனத்துரோக வெம்மையில் இருந்து காக்க பயன்படட்டும் .<br /><br /><span style="font-style:italic;">மறவாமல் வாக்களியுங்கள்</span> . </span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-73961719829828846162011-04-11T23:16:00.000-07:002011-04-11T23:21:13.022-07:00# உங்கள் தொகுதியில் யாருக்கு உங்கள் ஓட்டு?முழுப் பட்டியல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRmQy2lmFRJAl2dmrcaunfgsEJHCjNfqj5pYrdsjA_tjF_dj5blwJF8mFPoi8zxiBsRUu64dGpCcDglqd2VWScfPIH_T9eU3-K59ZcR5THyWTLkYuPFM6_n9NiX8G2NXYMwpnleFT7MzaF/s1600/ballot+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 370px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRmQy2lmFRJAl2dmrcaunfgsEJHCjNfqj5pYrdsjA_tjF_dj5blwJF8mFPoi8zxiBsRUu64dGpCcDglqd2VWScfPIH_T9eU3-K59ZcR5THyWTLkYuPFM6_n9NiX8G2NXYMwpnleFT7MzaF/s400/ballot+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594578077619124946" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2rVqxcK4PpbIPEfZanx3Be8BiHdGnXSXdSbFZ147T9a5pNDgzOB65-GOkgrvTTBfG8N-YgbdcFY3uliFfusR_CPNsOQ0FhyjSnFgbmZMmjfjrIEM2v1-jzfMnCT_JFF-zq-s0ioFZOZin/s1600/ballot+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 361px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2rVqxcK4PpbIPEfZanx3Be8BiHdGnXSXdSbFZ147T9a5pNDgzOB65-GOkgrvTTBfG8N-YgbdcFY3uliFfusR_CPNsOQ0FhyjSnFgbmZMmjfjrIEM2v1-jzfMnCT_JFF-zq-s0ioFZOZin/s400/ballot+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594578077626644690" /></a><br /><br /><span style="font-weight:bold;">அன்பர்களுக்கு வணக்கம் .<br /><br />உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .<br /><br />எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .<br /><br />சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .<br /><br />வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)<br /><br />மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )<br /><br />யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)<br /><br />ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!<br /><br />யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .<br /><br />வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )<br /><br />மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்<br /><br />நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !<br /><br />ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .<br /><br />இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .<br /><br />இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .<br /><br />பாராளுமன்றத் தொகுதி<br />******************************<br />******<br />ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்<br /><br />திருவள்ளூர் பா ம தொகுதி<br />*****************************************<br />1 . பொன்னேரி -----------------------------------பொன்ராஜா(அதிமுக )<br /><br />2 . திருவள்ளூர்---------------------------------------------- பிவி ரமணா (அதிமுக)<br /> <br />3 பூந்தமல்லி ------------------------------------------ ----------- மணிமாறன் (அதிமுக)<br /> <br /><br />4 ஆவடி ----------------------------------------------- -------- அப்துல் ரஹீம் (அதிமுக)<br /> <br /><br />5 .மாதவரம்---- --------------------------------------------------------மூர்த்தி (அதிமுக)<br /> <br /><br />6 .கும்மிடிப்பூண்டி ------------------------------------------------- ---- 49 ஒ<br /> <br />வடசென்னை<br /><br />********************<br /><br />7 திருவொற்றியூர் ------------------------------------------------------- குப்பன்(அதிமுக)<br /><br /> <br /><br />8 டாக்டர்ராதாகிருஷ்ணன் நகர் -----------------------வெற்றிவேல் (அதிமுக)<br /><br />9 .பெரம்பூர் ------- ---------------------------------------------------சவுந்திரராஜன் (சிபிஎம்)<br /><br />10 கொளத்தூர்<br /><br /> ----------------------------------- முக ஸ்டாலின் (திமுக (அல்லது) . சைதை துரைசாமி (அதிமுக)<br /><br /> (இருவருமே தகுதியானவர்கள்தான் )<br /><br /><br /><br />11 திருவிக நகர் --------------------------------------- நீலகண்டன் (அதிமுக)<br /><br /> <br /><br />12 .ராயபுரம்------------------------------------------------------ -ஜெயக்குமார் (அதிமுக)<br /><br /> <br /><br /> தென்சென்னை<br /><br />******************<br /><br /><br />13 .விருகம்பாக்கம்-------------------------------------------------------------- 49 ஓ<br /><br /> <br /><br />14சைதாப்பேட்டை- ------------------------ செந்தமிழன்(அதிமுக) <br /><br /><br />15 தி . நகர் -------------------------------------------------------------கலைராஜன் (அதிமுக)<br /><br />16 .மைலாப்பூர் -----------------------------------------------------அசோக் (மக்கள் சக்தி ) <br /><br /><br />17 .வேளச்சேரி------------------------------------ தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக )<br /><br /> <br /><br />18 .சோழிங்க நல்லூர்-----------------------------------------------------கந்தன் (அதிமுக)<br /><br />மத்திய சென்னை<br /><br />******************<br /><br /><br />19 .வில்லிவாக்கம் --------------------------------------------------அன்பழகன் (திமுக)<br /><br /> <br /><br />20 எழும்பூர்----------------------------------------------------பரிதிஇளம்வழுதி(திமுக)-<br /><br /><br />21துறைமுகம்------------------------------------------------பழகருப்பையா(அதிமுக) <br /><br /><br />22 சேப்பாக்கம் -----------------தமிமுன்அன்சாரி (மனிதநேய மக்கள் கடசி )<br /><br /><br />23 ஆயிரம் விளக்கு------------------------------------------------------------------- 49 ஓ<br /><br /><br /> 24அண்ணாநகர்------------------------------------------ கோகுல இந்திரா (அதிமுக) <br /><br /><br />ஸ்ரீ பெரும்புதூர்<br /><br />*****************<br /><br />25 .மதுரவாயல்--------------------------------------------------------------செல்வம் (பாமக)<br /><br />26 .அம்பத்தூர்-------------------------------------------------------------ரங்கநாதன் (திமுக)<br /><br /> <br /><br /><br /><br />27ஆலந்தூர்----------------------------------------பண்ருட்டி ராமசந்திரன் (தேமுதிக)<br /><br /><br />28 . ஸ்ரீபெரும்புதூர் ----------------------------------------- பெருமாள் (அதிமுக )<br /><br /> <br /><br />29 பல்லாவரம-------------------------------------------------------------- தனசிங் (அதிமுக)<br /><br />30 தாம்பரம்----------------------------------------------------- எஸ் ஆர் ராஜா (திமுக) <br /><br />காஞ்சீபுரம்<br /><br />*****************<br /><br /><br />31 .செங்கல்பட்டு -----------------------------------------------------------ரங்கசாமி (பாமக )<br /><br />32 திருப்போரூர்---------------------------------------------------கே.மனோகர்(அதிமுக)<br /><br />33 செய்யூர் ----------------------------------------------------------வி எஸ் ராஜி (அதிமுக)<br /><br /><br />34 .மதுராந்தகம் ------------------------------------------------கணிதா சம்பத் (அதிமுக)<br /><br /><br /><br />35உத்திர மேரூர்-----------------------------------------------------கணேசன்(அதிமுக) <br /><br /> <br /><br />36 .காஞ்சீபுரம்-----------------------------------------------------சோமசுந்தரம்(அதிமுக)<br /><br /> <br /><br />அரக்கோணம்<br /><br />*********************<br /><br />37 .திருத்தணி ------------------------------------அருண் சுப்பிரமணியம்(தேமுதிக) <br /> <br />38 . அரக்கோணம் -------------------------------------------------ரவி (அதிமுக)<br /> <br />39 .சோளிங்கர்----------------------------------பி ஆர் மனோகர் (தேமுதிக)<br /> <br />40 காட்பாடி ----------------- அப்பு ராதா கிருஷ்ணன் (அதிமுக)<br /> <br />41 ராணிபேட்டை ---------------------------------------------ஜான் (அதிமுக)<br /> <br />42 .ஆற்காடு ----------------------------------------------------சீனிவாசன் (அதிமுக)<br /> <br /><br />வேலூர்<br />************<br /><br />43 . வேலூர்-------------------------------------------------------------விஜய் (அதிமுக)<br /> <br />44 அணைக்கட்டு ----கலையரசு (பா ம க )--------- கலையரசு (பாமக )<br /> <br /><br />45 .கே வி குப்பம் -----------செ கு தமிழரசன் (இந்தியா குடியரசு கடசி)<br /><br />46 .குடியாத்தம்-----------------லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்டு கடசி)<br /><br />47 .ஆம்பூர்------அஸ்லம் பாட்ஷா (மனித நேய மக்கள் கடசி)<br /><br /><br />48 . வாணியம்பாடி ----------------------------------சம்பத் குமார் (அதிமுக)<br /> <br /><br />கிருஷ்ணகிரி<br />*******************<br />49 ஊத்தங்கரை--------------------------------------மனோரஞ்சிதம் (அதிமுக)<br /> <br /><br />50 பர்கூர் -------------------------------------- கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)<br /> <br /><br />51 கிருஷ்ணகிரி ----------------------------------------கேபி.முனுசாமி(அதிமுக)<br /> <br /><br /><br /><br />52 வேப்பனஹள்ளி-----------------------------------------------------49 ஓ<br /><br /><br />53 .ஓசூர்--------------------------------------------------------------------------சத்யா (சுயேச்சை)<br /> <br /><br /><br />54 ..தளி ----------------------------------------------------டி.ராமசந்திரன் (இ கம்யூ )<br /> <br /><br />தருமபுரி<br />************<br />55 பாலக்கோடு ---------------------------------------------------------அன்பழகன் (அதிமுக)<br /> <br /><br />56 .பென்னாகரம்---------------------------------------------------- நஞ்சப்பன் (இ கம்யூ )<br /> <br /><br />57 . தருமபுரி -------------------------------------------------------------சாந்தமூர்த்தி (பாமக)<br /> <br /><br />58 .பாப்பிரெட்டி பட்டி ---------------------------- முல்லைவேந்தன் (திமுக)<br /> <br /><br />59 .அரூர் --------------------------------டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )<br /> <br />60 . மேட்டூர் ---------------------------------------------------------பார்த்திபன்(தேமுதிக)<br /> <br /><br />திருவண்ணாமலை<br />*********************************<br />61 ஜோலார் பேட்டை ------வீரமணி(அதிமுக)<br /><br />62 .திருப்பத்தூர் ---------------ரமேஷ் (அதிமுக)<br /><br />63 .செங்கம் --------------------------49 ஓ <br /><br />64 திருவண்ணாமலை ---------------ராமசந்திரன் (அதிமுக)<br /><br />65கீழபெண்ணாத்தூர்அரங்கநாதன்(அதிமுக ) <br /><br />66 கலசபாக்கம் ----அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)<br /><br />ஆரணி<br />***********<br />67 போளூர் -----ஜெயசுதா (அதிமுக)<br /><br />68 .ஆரணி -----சிவானந்தம் (தி முக )<br /><br />69 . செய்யாறு ---முக்கூர் சுப்பிரமணி (அதிமுக)<br /><br />70 .வந்தவாசி ----குணசீலன் (அதிமுக)<br /><br />71 . செஞ்சி ----கணேஷ்குமார் (பா ம க )<br /><br />72 மைலம் ---கே பி நாகராஜ் (அதிமுக).<br /><br /><br />விழுப்புரம்<br />****************<br />73 . திண்டிவனம் ---ஹரிதாஸ் (அதிமுக )<br /><br />74 . வானூர் -- ஜானகி ராமன் (அதிமுக)<br /><br />75 . விழுப்புரம் --- சி வி சண்முகம் (அதிமுக)<br /><br />76 .விக்கிரவாண்டி -- ராம மூர்த்தி (மா கம்யூ)<br /><br />77 . திருக் கோவிலூர்-- ---- தங்கம் (திமுக)<br /><br />78 . உளுந்தூர்பேட்டை -- குமரகுரு (அதிமுக)<br /><br />கள்ளக் குறிச்சி<br />**********************<br />79 .ரிஷிவந்தியம் ------------49 ஓ<br /><br />80 . சங்கராபுரம் ---ப .மோகன் (அதிமுக)<br /><br />81 .கள்ளக்குறிச்சி -அழகுவேல் பாபு (அதிமுக)<br /><br />82 .கெங்கவல்லி--சிவகாமி (மக்கள் சக்தி )<br /><br />83 .ஆத்தூர் --- மாதேஸ்வரன் (அதிமுக)<br /><br />84 ஏற்காடு ----பெருமாள் (அதிமுக)<br /><br />சேலம்<br />**********<br /><br />85 . ஓமலூர் -- பல்பாக்கி கிருஷ்ணன் (அதிமுக)<br /><br />86 எடப்பாடி--- எடப்பாடி பழனிசாமி (அதிமுக)<br /><br />87 சேலம் மேற்கு --- ராஜேந்திரன் (திமுக)<br /><br />88 .சேலம் வடக்கு -- மோகன்ராஜ் (தேமுதிக)<br /><br />89 . சேலம் தெற்கு ----செல்வராஜ் (அதிமுக)<br /><br />90 . வீரபாண்டி ----எஸ் கே செல்வம் (அதிமுக)<br /><br />நாமக்கல்<br />***************<br />91 .சங்ககிரி ----விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)<br /><br />92 .ராசிபுரம் ---விபி துரைசாமி (திமுக)<br /><br />93 . சேந்தமங்கலம் ---பொன்னுசாமி (திமுக)<br /><br />94 .நாமக்கல் -- பாஸ்கர் (அதிமுக)<br /><br />95 பரமத்தி வேலூர் --- தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை)<br /><br />96 .திருச்செங்கோடு ----49 ஓ<br /><br />ஈரோடு<br />***********<br />97 .குமாரபாளையம் ----தங்கமணி (அதிமுக)<br /><br />98 .ஈரோடு கிழக்கு ----முத்துசாமி (திமுக)<br /><br />99 .ஈரோடு மேற்கு -- கே வி ராமலிங்கம் (அதிமுக)<br /><br />100 . மொடக் குறிச்சி ---- கிட்டுசாமி (அதிமுக)<br /><br />101 . தாராபுரம் --- ஜெயந்தி (திமுக)<br /><br />102 . காங்கேயம் ---- பொன்னுசாமி (பாஜக)<br /><br />திருப்பூர்<br />*************<br />103 .பெருந்துறை ---------தோப்பு வெங்கடாசலம் (அதிமுக)<br /><br />104 . பவானி ----------மகேந்திரன் (பாமக )<br /><br />105 . அந்தியூர் -------ரமணீதரன் (அதிமுக)<br /><br />106 கோபிசெட்டிபாளையம் ----செங்கோட்டையன் (அதிமுக)<br /><br />107 . திருப்பூர் வடக்கு ----ஆனந்தன் (அதிமுக)<br /><br />108 .திருப்பூர் தெற்கு ----தங்கவேல் (மா கம்யூ)<br /><br /><br />நீலகிரி<br />***********<br />109 .பவானிசாகர் --சுந்தரம் (இ கம்யூ)<br /><br />110 .ஊட்டி ----புத்தி சந்திரன் (அதிமுக)<br /><br />111 .கூடலூர் ----செல்வராஜ் (தேமுதிக)<br /><br />112 . குன்னூர் ----- பெள்ளி(இ கம்யூ )<br /><br />113 மேட்டுப் பாளையம் -- அருண்குமார் (திமுக)<br /><br />114 .அவினாசி ---- கருப்பு சாமி (அதிமுக)<br /><br />கோயம்புத்தூர்<br />*********************<br /><br />115 .பல்லடம் -----------பரமசிவம் (அதிமுக)<br /><br />116 .சூலூர் ----ஈஸ்வரன் (கொங்கு முன்னேற்றக் கழகம்)<br /><br />117 .கவுண்டம்பாளையம் ---ஆறுக் குட்டி (அதிமுக)<br /><br />118 . கோவை வடக்கு ----வீரகோபால் (திமுக)<br /><br />119 கோவை தெற்கு ---பொங்கலூர் பழனிசாமி (திமுக)<br /><br />120 . சிங்கா நல்லூர் -----49 ஓ<br /><br />பொள்ளாச்சி<br />******************<br />121 தொண்டாமுத்தூர் ------------------ வேலுமணி (அதிமுக)<br /><br />122 கிணத்துக் கடவு -------------------- பாலாஜி இளங்கோ (மக்கள் சக்தி)<br /><br />123 .பொள்ளாச்சி ---------கருப்பசாமி (அதிமுக)<br /><br />124 .வால்பாறை -----ஆறுமுகம் (இ கம்யூ )<br /><br />125 .உடுமலைப் பேட்டை ---பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)<br /><br />126 .மடத்துக்குளம் --- சண்முகவேலு (அதிமுக)<br /><br /><br />திண்டுக்கல்<br />*******************<br />127 .பழனி ----------------வேணுகோபால் (அதிமுக)<br /><br />128 ஓட்டப்பிடாரம் --- பாலசுப்ரமணி (அதிமுக)<br /><br />129 . ஆத்தூர் -------- ஐ . பெரியசாமி (திமுக)<br /><br />130 .நிலகோட்டை----- 49 ஓ<br /><br />131 . நத்தம் -------- விஸ்வநாதன் (அதிமுக)<br /><br />132 . திண்டுக்கல் ------பாலபாரதி (மா கம்யூ )<br /><br />கரூர்<br />*******<br />133 .வேடசந்தூர் ---- பழனிசாமி (அதிமுக)<br /><br />134 . அரவாக்குறிச்சி -----கே சி பழனிசாமி (திமுக)<br /><br />135 .கரூர் --------------செந்தில் பாலாஜி (அதிமுக)<br /><span style="font-style:italic;">(கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி இந்திராவுக்கு . நான் தேவி வார இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது நீங்கள் இந்திரா என்ற புனைப் பெயரில் எழுதிய வீடு என்ற குறு நாவலை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தேன் . ஆனால் இப்போது மக்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தில் நீங்கள் இல்லை . காலக் கொடுமை !)</span><br /><br />136 கிருஷ்ணராயபுரம் ------எஸ் காமராஜ் (அதிமுக)<br /><br />137 .மணப்பாறை --------------சந்திரசேகர் (அதிமுக)<br /><br />138 .விராலிமலை -------- ரகுபதி (திமுக)<br /><br />திருச்சி<br />***********<br />139 .ஸ்ரீரங்கம் ----------ஜெ. ஜெயலலிதா (அதிமுக)<br /><br />140 .திருச்சி மேற்கு ---மரிய பிச்சை (அதிமுக)<br /><br />141 .திருச்சி கிழக்கு ------மனோகரன் (அதிமுக)<br /><br />142 .திருவெறும்பூர் ----- 49 ஓ<br /><br />143 .கந்தர்வகோட்டை -----சுப்பிரமணியன் (அதிமுக)<br /><br />144 புதுக்கோட்டை --- முத்துக்குமரன் (சி பி ஐ )<br /><br />பெரம்பலூர்<br />******************<br />145 .குளித்தலை ------- 49 ஓ<br /><br />146 .லால்குடி -----பார்கவன் பச்சமுத்து (இந்திய ஜனநாயக கடசி)<br /><br />147 மண்ணச்ச நல்லூர் -----செல்வராஜ் (திமுக)<br /><br />148 .முசிறி -----------சிவபதி (அதிமுக)<br /><br />149 .துறையூர் -----இந்திரா காந்தி (அதிமுக)<br /><br />150 . பெரம்பலூர் ----இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக)<br /><br />கடலூர்<br />************<br />151 . திட்டக்குடி ---------சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)<br /><br />152 விருத்தாச்சலம் --------------------49 ஓ<br /><br />153 .நெய்வேலி ----பண்ருட்டி வேல்முருகன் (பா ம க )<br /><br />154 பண்ருட்டி ------.சபா ராஜேந்திரன் (திமுக)<br /><br />155 .கடலூர் --------- எம் சி சம்பத் (அதிமுக)<br /><br />156 .குறிஞ்சிப்பாடி -------எம் ஆர் கே பனீர் செல்வம் (திமுக)<br /><br />சிதம்பரம்<br />***************<br />157 .குன்னம் ----- சிவ சங்கர் (திமுக)<br /><br />158 .அரியலூர் -----------துரை மணிவேல் (அதிமுக)<br /><br />159 .ஜெயங்கொண்டம் -----காடுவெட்டி குரு (பா ம க )<br /><br />160 .புவனகிரி -----------செல்வி ராமஜெயம்(அதிமுக)<br /><br />161 .சிதம்பரம் ----பாலகிருஷ்ணன் (மா கம்யூ)<br /><br />162 . காட்டுமன்னார்குடி --- ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்)<br /><span style="font-style:italic;">(ரவிகுமார்.....! உங்களிடம் மக்கள் இன்ன்ன்னும் நிறைய்ய்ய்யய்ய்ய்ய எதிர்பார்க்கிறார்கள்கலைஞருக்கு சப்பை கட்டு கட்ட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினால் மட்டும் போதாது . கவனம் )</span><br /><br />மயிலாடுதுறை<br />***********************<br />163 . சீர்காழி ---------------------------சக்தி (அதிமுக)<br /><br />164 .மயிலாடுதுறை -------------49 ஓ<br /><br />165 பூம்புகார் -----பவுனுராஜ் (அதிமுக)<br /><br />166 .திருவிடைமருதூர் --- பாண்டியராஜன் (அதிமுக)<br /><br />167 . கும்பகோணம் -------------- 49 ஓ<br /><br />168 பாபநாசம் ---------------------49 ஓ .<br /><br />நாகபட்டினம்<br />********************<br />169 . நாகபட்டினம் ---------- ஜெயபால் (அதிமுக)<br /><br />170 .கீழ் வேளூர்----- நாகை மாலி (மா கம்யூ )<br /><br />171 . வேதாரண்யம் -------காமராஜ் (அதிமுக)<br /><br />172 . திருத்துறைப் பூண்டி ------உலகநாதன் (இ கம்யூ)<br /><br />173 .திருவாரூர் ------ மு. கருணாநிதி (திமுக)<br /><br />174 .நன்னிலம் --- காமராஜ் (அதிமுக)<br /><br />தஞ்சை<br />***********<br />175 மன்னார்குடி ------------------------------ 49 ஓ<br /><br />176 .திருவையாறு ------------ரத்னசாமி (அதிமுக)<br /><br />177 தஞ்சாவூர் ------------ரங்கசாமி (அதிமுக)<br /><br />178 ஒரத்தநாடு -----------------------------49 ஓ<br /><br />179 பட்டுக் கோட்டை ---- யோகநாதன் (சுயேச்சை)<br /><br />180 பேராவூரணி ------ --------------- 49 ஓ<br /><br />சிவகங்கை<br />****************<br />181 . திருமயம் ----------------வைரமுத்து (அதிமுக)<br /><br />182 .ஆலங்குடி -----------ராஜபாண்டியன் (சுயேச்சை)<br /><br />183 .காரைக்குடி -----------------------------------49 ஓ<br /><br />184 .திருப்பத்தூர் -------------------49 ஓ<br /><br />185 .சிவகங்கை --------------------49 ஓ<br /><br />186 . மானாமதுரை --------------49 ஓ<br /><br />மதுரை<br />***********<br />187 . மேலூர் -------------ஆர் . சாமி (அதிமுக)<br /><br />188 . மதுரை கிழக்கு ----தமிழரசன் (அதிமுக)<br /><br />189 .மதுரை வடக்கு ----- 49 ஓ<br /><br />190 . மதுரை தெற்கு ---- அண்ணாதுரை (மா கம்யூ )<br /><br />191 .மதுரை நடுவண் ---- கவுஸ் பாஷா (திமுக)<br /><br />192 .மதுரை மேற்கு ----செல்லூர் ராஜு (அதிமுக)<br /><br /><br />தேனி<br />**********<br />193 சோழவந்தான் -----கருப்பையா (அதிமுக)<br /><br />194 உசிலம்பட்டி ------கதிரவன் (பார்வார்டு பிளாக் )<br /><br />195 .ஆண்டிப்பட்டி --------------------- 49 ஓ<br /><br />196 .பெரியகுளம் ----லாசர் (மா கம்யூ )<br /><br />197 . போடிநாயக்கனூர் ---- லட்சுமணன் (திமுக)<br /><br />198 .கம்பம் -------------ராமகிருஷ்ணன் (திமுக)<br /><br />விருதுநகர்<br />****************<br /><br />199 .திருப்பரங்குன்றம் ------- ஏ கே டி ராஜா (தேமுதிக)<br /><br />200 திருமங்கலம் ---------முத்துராமலிங்கம் (அதிமுக)<br /><br />201 . சாத்தூர் --------கடற்கரை ராஜு (திமுக)<br /><br />202 . சிவகாசி ----------ராஜேந்திர பாலாஜி (அதிமுக)<br /><br />203 . விருதுநகர் -------மாபா பாண்டியராஜன் (மதிமுக )<br /><br />204 . அருப்புக்கோட்டை -------வைகை செல்வன் (அதிமுக)<br /><br /><br />ராமநாதபுரம்<br />*********************<br />205 அறந்தாங்கி --------ராஜ நாயகம் (அதிமுக)<br /><br />206 திருச்சுழி -----------.தங்கம் தென்னரசு (திமுக)<br /><br />207 .பரமக்குடி ----சுந்தர்ராஜன் (அதிமுக)<br /><br />208 . திருவாடானை ------ சிவமகாலிங்கம் (பாஜக)<br /><br />209 .ராமநாதபுரம் ---- ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கடசி )<br /><br />210 . முதுகுளத்தூர் ------முருகன் (அதிமுக)<br /><br />தூத்துக்குடி<br />*****************<br />211 .விளாத்திகுளம் --------------49 ஓ<br /><br />211 தூத்துக்குடி ---------------------செல்லப் பாண்டியன் (அதிமுக)<br /><br />212 .திருச்செந்தூர் ---------------மனோகரன் (அதிமுக)<br /><br />213 ஸ்ரீவைகுண்டம் ---------------- 49 ஓ<br /><br />214 .ஓட்டப்பிடாரம் ---------------------49 ஓ<br /><br />215 கோவில்பட்டி --------------------49 ஓ<br /><br />தென்காசி<br />***************<br />217 ராஜபாளையம் -----------------கோபால் சாமி (அதிமுக)<br /><br />218 .ஸ்ரீவில்லிபுத்தூர் ------------ 49 ஓ<br /><br />219 .சங்கரன்கோவில்------49 ஓ<br /><br />220 . வாசுதேவநல்லூர் ------துரையப்பா (அதிமுக)<br /><br />221 . கடையநல்லூர் --------49 ஓ<br /><br />222 தென்காசி ------------ 49 ஓ<br /><br /><br />திருநெல்வேலி<br />***********************<br /><br />223 .ஆலங்குளம் -----------பி ஜி ராஜேந்திரன் (அதிமுக)<br /><br />224 .திருநெல்வேலி --------ஏ எல் எஸ் லட்சுமணன் (திமுக)<br /><br />225 அம்பாசமுத்திரம் -------சுப்பையா (அதிமுக)<br /><br />226 .பாளையங்கோட்டை ------பழனி (மா கம்யூ)<br /><br />227 . நாங்குநேரி -------------------மகா கண்ணன் (பாஜக)<br /><br />228 .ராதாபுரம் ---------------49 ஓ<br /><br /><br />கன்னியாகுமரி<br />************************<br />229 .கன்யாகுமரி ----பசசைமால் (அதிமுக)<br /><br />230 . நாகர்கோவில் ---------பொன் ராதா கிருஷ்ணன் (பாஜக)<br /><br />231 .குளச்சல் -----------லாரன்ஸ் (அதிமுக)<br /><br />232 .பத்மநாபபுரம் -------புஷ்பலீலா (திமுக)<br /><br />233 . விளவங்கோடு --------லீமா ரோஸ் (மா கம்யூ )<br /><br />234 .கிள்ளியூர் -------------------ஜார்ஜ் (அதிமுக )<br /><br />---------------------------------------------------------------------------------------- நிறைவு<br /><br /><br />அவசியமான பின் குறிப்பு<br />***************************************<br />எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .<br /><br />ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?<br /><br />எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?<br /><br />அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.<br /><br />நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .<br />பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.<br /><br />மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .<br /><br />ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .<br /><br />-------------------------------------------- முற்றும்<br /><br /><br /> <br /><br /><br /><br /></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-44862440399623108482011-04-11T22:04:00.000-07:002011-04-11T22:08:15.843-07:00#உங்கள்தொகுதியில் உங்கள்ஓட்டு யாருக்கு?பகுதி4<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeUDJLpbdfyLHmVYTAkzq71d1i7ku5qAwSGlgtnv0yk443oFZBMOmj3uhr_Zbaq0h9_Eja0x6N6spW8wk18lJQxBuOVxj4YtinwKwKoYKHzA8W0HEH3oy596ajE_4sPVi9YD6qUhBOk47E/s1600/ballot+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 361px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeUDJLpbdfyLHmVYTAkzq71d1i7ku5qAwSGlgtnv0yk443oFZBMOmj3uhr_Zbaq0h9_Eja0x6N6spW8wk18lJQxBuOVxj4YtinwKwKoYKHzA8W0HEH3oy596ajE_4sPVi9YD6qUhBOk47E/s400/ballot+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594559414591651282" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7YiScqCIXL2_iM0z8Trizns-ZtdTAteyqTrfkioTU0zoFR_u1_Zh7DhB34ZZVMx5mTD5btzJcmSx4H6V95999C8mpZWUeoOLXjq5FuDchnz1Sqqzo2Kk9QJxzFhNZJFrkIXMhoPWMOc4b/s1600/ballot+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 370px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7YiScqCIXL2_iM0z8Trizns-ZtdTAteyqTrfkioTU0zoFR_u1_Zh7DhB34ZZVMx5mTD5btzJcmSx4H6V95999C8mpZWUeoOLXjq5FuDchnz1Sqqzo2Kk9QJxzFhNZJFrkIXMhoPWMOc4b/s400/ballot+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594559410389760466" /></a><br /><span style="font-weight:bold;"><br />அன்பர்களுக்கு வணக்கம் .<br /><br />உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .<br /><br />எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .<br /><br />சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .<br /><br />வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)<br /><br />மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )<br /><br />யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)<br /><br />ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!<br /><br />யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .<br /><br />வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )<br /><br />மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்<br /><br />நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !<br /><br />ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .<br /><br />இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .<br /><br />இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .<br /><br />பாராளுமன்றத் தொகுதி<br />******************************<br />******<br />ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்<br /><br />சிவகங்கை<br />****************<br />181 . திருமயம் ----------------வைரமுத்து (அதிமுக)<br /><br />182 .ஆலங்குடி -----------ராஜபாண்டியன் (சுயேச்சை)<br /><br />183 .காரைக்குடி -----------------------------------49 ஓ<br /><br />184 .திருப்பத்தூர் -------------------49 ஓ<br /><br />185 .சிவகங்கை --------------------49 ஓ<br /><br />186 . மானாமதுரை --------------49 ஓ<br /><br />மதுரை<br />***********<br />187 . மேலூர் -------------ஆர் . சாமி (அதிமுக)<br /><br />188 . மதுரை கிழக்கு ----தமிழரசன் (அதிமுக)<br /><br />189 .மதுரை வடக்கு ----- 49 ஓ<br /><br />190 . மதுரை தெற்கு ---- அண்ணாதுரை (மா கம்யூ )<br /><br />191 .மதுரை நடுவண் ---- கவுஸ் பாஷா (திமுக)<br /><br />192 .மதுரை மேற்கு ----செல்லூர் ராஜு (அதிமுக)<br /><br /><br />தேனி<br />**********<br />193 சோழவந்தான் -----கருப்பையா (அதிமுக)<br /><br />194 உசிலம்பட்டி ------கதிரவன் (பார்வார்டு பிளாக் )<br /><br />195 .ஆண்டிப்பட்டி --------------------- 49 ஓ<br /><br />196 .பெரியகுளம் ----லாசர் (மா கம்யூ )<br /><br />197 . போடிநாயக்கனூர் ---- லட்சுமணன் (திமுக)<br /><br />198 .கம்பம் -------------ராமகிருஷ்ணன் (திமுக)<br /><br />விருதுநகர்<br />****************<br /><br />199 .திருப்பரங்குன்றம் ------- ஏ கே டி ராஜா (தேமுதிக)<br /><br />200 திருமங்கலம் ---------முத்துராமலிங்கம் (அதிமுக)<br /><br />201 . சாத்தூர் --------கடற்கரை ராஜு (திமுக)<br /><br />202 . சிவகாசி ----------ராஜேந்திர பாலாஜி (அதிமுக)<br /><br />203 . விருதுநகர் -------மாபா பாண்டியராஜன் (மதிமுக )<br /><br />204 . அருப்புக்கோட்டை -------வைகை செல்வன் (அதிமுக)<br /><br /><br />ராமநாதபுரம்<br />*********************<br />205 அறந்தாங்கி --------ராஜ நாயகம் (அதிமுக)<br /><br />206 திருச்சுழி -----------.தங்கம் தென்னரசு (திமுக)<br /><br />207 .பரமக்குடி ----சுந்தர்ராஜன் (அதிமுக)<br /><br />208 . திருவாடானை ------ சிவமகாலிங்கம் (பாஜக)<br /><br />209 .ராமநாதபுரம் ---- ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கடசி )<br /><br />210 . முதுகுளத்தூர் ------முருகன் (அதிமுக)<br /><br />தூத்துக்குடி<br />*****************<br />211 .விளாத்திகுளம் --------------49 ஓ<br /><br />211 தூத்துக்குடி ---------------------செல்லப் பாண்டியன் (அதிமுக)<br /><br />212 .திருச்செந்தூர் ---------------மனோகரன் (அதிமுக)<br /><br />213 ஸ்ரீவைகுண்டம் ---------------- 49 ஓ<br /><br />214 .ஓட்டப்பிடாரம் ---------------------49 ஓ<br /><br />215 கோவில்பட்டி --------------------49 ஓ<br /><br />தென்காசி<br />***************<br />217 ராஜபாளையம் -----------------கோபால் சாமி (அதிமுக)<br /><br />218 .ஸ்ரீவில்லிபுத்தூர் ------------ 49 ஓ<br /><br />219 .சங்கரன்கோவில்------49 ஓ<br /><br />220 . வாசுதேவநல்லூர் ------துரையப்பா (அதிமுக)<br /><br />221 . கடையநல்லூர் --------49 ஓ<br /><br />222 தென்காசி ------------ 49 ஓ<br /><br /><br />திருநெல்வேலி<br />***********************<br /><br />223 .ஆலங்குளம் -----------பி ஜி ராஜேந்திரன் (அதிமுக)<br /><br />224 .திருநெல்வேலி --------ஏ எல் எஸ் லட்சுமணன் (திமுக)<br /><br />225 அம்பாசமுத்திரம் -------சுப்பையா (அதிமுக)<br /><br />226 .பாளையங்கோட்டை ------பழனி (மா கம்யூ)<br /><br />227 . நாங்குநேரி -------------------மகா கண்ணன் (பாஜக)<br /><br />228 .ராதாபுரம் ---------------49 ஓ<br /><br /><br />கன்னியாகுமரி<br />************************<br />229 .கன்யாகுமரி ----பசசைமால் (அதிமுக)<br /><br />230 . நாகர்கோவில் ---------பொன் ராதா கிருஷ்ணன் (பாஜக)<br /><br />231 .குளச்சல் -----------லாரன்ஸ் (அதிமுக)<br /><br />232 .பத்மநாபபுரம் -------புஷ்பலீலா (திமுக)<br /><br />233 . விளவங்கோடு --------லீமா ரோஸ் (மா கம்யூ )<br /><br />234 .கிள்ளியூர் -------------------ஜார்ஜ் (அதிமுக )<br /><br />---------------------------------------------------------------------------------------- நிறைவு<br /><br />அவசியமான பின் குறிப்பு<br />***************************************<br />எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .<br /><br />ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?<br /><br />எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?<br /><br />அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.<br /><br />நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .<br /><br />பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று. <br /><br />மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .<br /><br />ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .<br /><br />-------------------------------------------------------------------------------------------------------------------------------முற்றும்</span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-55616925711452815212011-04-11T05:57:00.001-07:002011-04-11T05:59:20.667-07:00# உங்கள்தொகுதியில் உங்கள்ஓட்டு யாருக்கு? பகுதி 3<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUpYleFS40mPt_Tm5XTtKX45Sa81n3kqqL7_TjgR9Y1zgmbnUs73cAXi8iR2nlkUDrNclpL067A3fQxDneWyuatiqSM-Jhp2Tap-5yf62l-nJrRTZE27VIFO4gM5mKz0g2z4Uvzr2aFr3Y/s1600/ballot+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 370px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUpYleFS40mPt_Tm5XTtKX45Sa81n3kqqL7_TjgR9Y1zgmbnUs73cAXi8iR2nlkUDrNclpL067A3fQxDneWyuatiqSM-Jhp2Tap-5yf62l-nJrRTZE27VIFO4gM5mKz0g2z4Uvzr2aFr3Y/s400/ballot+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594309527651167570" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxyn8osmBzGX2E7EmqLw3ohPXTp5enj9i1ci8jtrAwJP8ZyaLwc-K5AlHG6KM67f3mkJLUaE7-b5sbqVd5pJKp3nVVJ1KMhsZbgpYmPR-vhr7cQsmoPsFppws7rRQciwXabGnAPIIH3GNV/s1600/ballot+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 361px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxyn8osmBzGX2E7EmqLw3ohPXTp5enj9i1ci8jtrAwJP8ZyaLwc-K5AlHG6KM67f3mkJLUaE7-b5sbqVd5pJKp3nVVJ1KMhsZbgpYmPR-vhr7cQsmoPsFppws7rRQciwXabGnAPIIH3GNV/s400/ballot+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594309524393030322" /></a><br /><br /><br /> <span style="font-weight:bold;">அன்பர்களுக்கு வணக்கம் .<br /><br />உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .<br /><br />எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .<br /><br />சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .<br /><br />வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)<br /><br />மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )<br /><br />யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)<br /><br />ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!<br /><br />யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .<br /><br />வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )<br /><br />மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்<br /><br />நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !<br /><br />ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .<br /><br />இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .<br /><br />இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .<br /><br />பாராளுமன்றத் தொகுதி<br />******************************<br />******<br />ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்<br /><br />பொள்ளாச்சி<br />******************<br />121 தொண்டாமுத்தூர் ------------------ வேலுமணி (அதிமுக)<br /><br />122 கிணத்துக் கடவு -------------------- பாலாஜி இளங்கோ (மக்கள் சக்தி)<br /><br />123 .பொள்ளாச்சி ---------கருப்பசாமி (அதிமுக)<br /><br />124 .வால்பாறை -----ஆறுமுகம் (இ கம்யூ )<br /><br />125 .உடுமலைப் பேட்டை ---பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)<br /><br />126 .மடத்துக்குளம் --- சண்முகவேலு (அதிமுக)<br /><br /><br />திண்டுக்கல்<br />*******************<br />127 .பழனி ----------------வேணுகோபால் (அதிமுக)<br /><br />128 ஓட்டப்பிடாரம் --- பாலசுப்ரமணி (அதிமுக)<br /><br />129 . ஆத்தூர் -------- ஐ . பெரியசாமி (திமுக)<br /><br />130 .நிலகோட்டை----- 49 ஓ<br /><br />131 . நத்தம் -------- விஸ்வநாதன் (அதிமுக)<br /><br />132 . திண்டுக்கல் ------பாலபாரதி (மா கம்யூ )<br /><br />கரூர்<br />*******<br />133 .வேடசந்தூர் ---- பழனிசாமி (அதிமுக)<br /><br />134 . அரவாக்குறிச்சி -----கே சி பழனிசாமி (திமுக)<br /><br />135 .கரூர் --------------செந்தில் பாலாஜி (அதிமுக)<br /><span style="font-style:italic;">(கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி இந்திராவுக்கு . நான் தேவி வார இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது நீங்கள் இந்திரா என்ற புனைப் பெயரில் எழுதிய வீடு என்ற குறு நாவலை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தேன் . ஆனால் இப்போது மக்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தில் நீங்கள் இல்லை . காலக் கொடுமை !)</span><br /><br />136 கிருஷ்ணராயபுரம் ------எஸ் காமராஜ் (அதிமுக)<br /><br />137 .மணப்பாறை --------------சந்திரசேகர் (அதிமுக)<br /><br />138 .விராலிமலை -------- ரகுபதி (திமுக)<br /><br />திருச்சி<br />***********<br />139 .ஸ்ரீரங்கம் ----------ஜெ. ஜெயலலிதா (அதிமுக)<br /><br />140 .திருச்சி மேற்கு ---மரிய பிச்சை (அதிமுக)<br /><br />141 .திருச்சி கிழக்கு ------மனோகரன் (அதிமுக)<br /><br />142 .திருவெறும்பூர் ----- 49 ஓ<br /><br />143 .கந்தர்வகோட்டை -----சுப்பிரமணியன் (அதிமுக)<br /><br />144 புதுக்கோட்டை --- முத்துக்குமரன் (சி பி ஐ )<br /><br />பெரம்பலூர்<br />******************<br />145 .குளித்தலை ------- 49 ஓ<br /><br />146 .லால்குடி -----பார்கவன் பச்சமுத்து (இந்திய ஜனநாயக கடசி)<br /><br />147 மண்ணச்ச நல்லூர் -----செல்வராஜ் (திமுக)<br /><br />148 .முசிறி -----------சிவபதி (அதிமுக)<br /><br />149 .துறையூர் -----இந்திரா காந்தி (அதிமுக)<br /><br />150 . பெரம்பலூர் ----இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக)<br /><br />கடலூர்<br />************<br />151 . திட்டக்குடி ---------சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)<br /><br />152 விருத்தாச்சலம் --------------------49 ஓ<br /><br />153 .நெய்வேலி ----பண்ருட்டி வேல்முருகன் (பா ம க )<br /><br />154 பண்ருட்டி ------.சபா ராஜேந்திரன் (திமுக)<br /><br />155 .கடலூர் --------- எம் சி சம்பத் (அதிமுக)<br /><br />156 .குறிஞ்சிப்பாடி -------எம் ஆர் கே பனீர் செல்வம் (திமுக)<br /><br />சிதம்பரம்<br />***************<br />157 .குன்னம் ----- சிவ சங்கர் (திமுக)<br /><br />158 .அரியலூர் -----------துரை மணிவேல் (அதிமுக)<br /><br />159 .ஜெயங்கொண்டம் -----காடுவெட்டி குரு (பா ம க )<br /><br />160 .புவனகிரி -----------செல்வி ராமஜெயம்(அதிமுக)<br /><br />161 .சிதம்பரம் ----பாலகிருஷ்ணன் (மா கம்யூ)<br /><br />162 . காட்டுமன்னார்குடி --- ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்)<br /><span style="font-style:italic;">(ரவிகுமார்.....! உங்களிடம் மக்கள் இன்ன்ன்னும் நிறைய்ய்ய்யய்ய்ய்ய எதிர்பார்க்கிறார்கள்கலைஞருக்கு சப்பை கட்டு கட்ட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினால் மட்டும் போதாது . கவனம் )</span><br /><br />மயிலாடுதுறை<br />***********************<br />163 . சீர்காழி ---------------------------சக்தி (அதிமுக)<br /><br />164 .மயிலாடுதுறை -------------49 ஓ<br /><br />165 பூம்புகார் -----பவுனுராஜ் (அதிமுக)<br /><br />166 .திருவிடைமருதூர் --- பாண்டியராஜன் (அதிமுக)<br /><br />167 . கும்பகோணம் -------------- 49 ஓ<br /><br />168 பாபநாசம் ---------------------49 ஓ .<br /><br />நாகபட்டினம்<br />********************<br />169 . நாகபட்டினம் ---------- ஜெயபால் (அதிமுக)<br /><br />170 .கீழ் வேளூர்----- நாகை மாலி (மா கம்யூ )<br /><br />171 . வேதாரண்யம் -------காமராஜ் (அதிமுக)<br /><br />172 . திருத்துறைப் பூண்டி ------உலகநாதன் (இ கம்யூ)<br /><br />173 .திருவாரூர் ------ மு. கருணாநிதி (திமுக)<br /><br />174 .நன்னிலம் --- காமராஜ் (அதிமுக)<br /><br />தஞ்சை<br />***********<br />175 மன்னார்குடி ------------------------------ 49 ஓ<br /><br />176 .திருவையாறு ------------ரத்னசாமி (அதிமுக)<br /><br />177 தஞ்சாவூர் ------------ரங்கசாமி (அதிமுக)<br /><br />178 ஒரத்தநாடு -----------------------------49 ஓ<br /><br />179 பட்டுக் கோட்டை ---- யோகநாதன் (சுயேச்சை)<br /><br />180 பேராவூரணி ------ --------------- 49 ஓ<br /><br /><br />------ தொடரும்<br /><br />அவசியமான பின் குறிப்பு<br />***************************************<br />எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .<br /><br />ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?<br /><br />எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?<br /><br />அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.<br /><br />நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .<br />பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.<br /><br />மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .<br /><br />ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .<br /><br />------தொடர்வோம்<br /><br /><br /> <br /><br /><br /><br /></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-68636302504425561142011-04-11T04:29:00.000-07:002011-04-11T04:31:42.997-07:00#உங்கள் தொகுதியிள் உங்கள் ஓட்டு யாருக்கு ? --பகுதி 2<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs-UYAA2K33xZuop40QyO74Pe6M_3ajxUwRXbE40HjciPZq1Lrxvdbjl_gnF3LH_19QDLWJD8coWXtBkdLG2ziuDNMJiEqaEuFvRFW0MQezWunxbdG6pappt0i49nWJOABYBn1OyyOwP3s/s1600/ballot+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 370px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs-UYAA2K33xZuop40QyO74Pe6M_3ajxUwRXbE40HjciPZq1Lrxvdbjl_gnF3LH_19QDLWJD8coWXtBkdLG2ziuDNMJiEqaEuFvRFW0MQezWunxbdG6pappt0i49nWJOABYBn1OyyOwP3s/s400/ballot+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594287197456219794" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWcCowVe77s_WFB9z4P8WksfMn1GuQTLk0_l0qTwQ4npD3gP0nfmG1y9gw92p1AgZCRcjOO3cjhoJITvYSvZzVT2eXw7mKiNf4pCiBGKyIWR38CjOLfZCLxQ5ppcIquFAP2FKxtdh9sOzz/s1600/ballot+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 361px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWcCowVe77s_WFB9z4P8WksfMn1GuQTLk0_l0qTwQ4npD3gP0nfmG1y9gw92p1AgZCRcjOO3cjhoJITvYSvZzVT2eXw7mKiNf4pCiBGKyIWR38CjOLfZCLxQ5ppcIquFAP2FKxtdh9sOzz/s400/ballot+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594287193455572498" /></a><br /> <span style="font-weight:bold;">அன்பர்களுக்கு வணக்கம் .<br /><br />உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .<br /><br />எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .<br /><br />சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .<br /><br />வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)<br /><br />மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )<br /><br />யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)<br /><br />ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!<br /><br />யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .<br /><br />வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )<br /><br />மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்<br /><br />நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !<br /><br />ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .<br /><br />இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .<br /><br />இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .<br /><br />பாராளுமன்றத் தொகுதி<br />******************************<br />******<br />ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்<br />திருவண்ணாமலை<br />*********************************<br />61 ஜோலார் பேட்டை ------வீரமணி(அதிமுக)<br /><br />62 .திருப்பத்தூர் ---------------ரமேஷ் (அதிமுக)<br /><br />63 .செங்கம் --------------------------49 ஓ <br /><br />64 திருவண்ணாமலை ---------------ராமசந்திரன் (அதிமுக)<br /><br />65கீழபெண்ணாத்தூர்அரங்கநாதன்(அதிமுக ) <br /><br />66 கலசபாக்கம் ----அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)<br /><br />ஆரணி<br />***********<br />67 போளூர் -----ஜெயசுதா (அதிமுக)<br /><br />68 .ஆரணி -----சிவானந்தம் (தி முக )<br /><br />69 . செய்யாறு ---முக்கூர் சுப்பிரமணி (அதிமுக)<br /><br />70 .வந்தவாசி ----குணசீலன் (அதிமுக)<br /><br />71 . செஞ்சி ----கணேஷ்குமார் (பா ம க )<br /><br />72 மைலம் ---கே பி நாகராஜ் (அதிமுக).<br /><br /><br />விழுப்புரம்<br />****************<br />73 . திண்டிவனம் ---ஹரிதாஸ் (அதிமுக )<br /><br />74 . வானூர் -- ஜானகி ராமன் (அதிமுக)<br /><br />75 . விழுப்புரம் --- சி வி சண்முகம் (அதிமுக)<br /><br />76 .விக்கிரவாண்டி -- ராம மூர்த்தி (மா கம்யூ)<br /><br />77 . திருக் கோவிலூர்-- ---- தங்கம் (திமுக)<br /><br />78 . உளுந்தூர்பேட்டை -- குமரகுரு (அதிமுக)<br /><br />கள்ளக் குறிச்சி<br />**********************<br />79 .ரிஷிவந்தியம் ------------49 ஓ<br /><br />80 . சங்கராபுரம் ---ப .மோகன் (அதிமுக)<br /><br />81 .கள்ளக்குறிச்சி -அழகுவேல் பாபு (அதிமுக)<br /><br />82 .கெங்கவல்லி--சிவகாமி (மக்கள் சக்தி )<br /><br />83 .ஆத்தூர் --- மாதேஸ்வரன் (அதிமுக)<br /><br />84 ஏற்காடு ----பெருமாள் (அதிமுக)<br /><br />சேலம்<br />**********<br /><br />85 . ஓமலூர் -- பல்பாக்கி கிருஷ்ணன் (அதிமுக)<br /><br />86 எடப்பாடி--- எடப்பாடி பழனிசாமி (அதிமுக)<br /><br />87 சேலம் மேற்கு --- ராஜேந்திரன் (திமுக)<br /><br />88 .சேலம் வடக்கு -- மோகன்ராஜ் (தேமுதிக)<br /><br />89 . சேலம் தெற்கு ----செல்வராஜ் (அதிமுக)<br /><br />90 . வீரபாண்டி ----எஸ் கே செல்வம் (அதிமுக)<br /><br />நாமக்கல்<br />***************<br />91 .சங்ககிரி ----விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)<br /><br />92 .ராசிபுரம் ---விபி துரைசாமி (திமுக)<br /><br />93 . சேந்தமங்கலம் ---பொன்னுசாமி (திமுக)<br /><br />94 .நாமக்கல் -- பாஸ்கர் (அதிமுக)<br /><br />95 பரமத்தி வேலூர் --- தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை)<br /><br />96 .திருச்செங்கோடு ----49 ஓ<br /><br />ஈரோடு<br />***********<br />97 .குமாரபாளையம் ----தங்கமணி (அதிமுக)<br /><br />98 .ஈரோடு கிழக்கு ----முத்துசாமி (திமுக)<br /><br />99 .ஈரோடு மேற்கு -- கே வி ராமலிங்கம் (அதிமுக)<br /><br />100 . மொடக் குறிச்சி ---- கிட்டுசாமி (அதிமுக)<br /><br />101 . தாராபுரம் --- ஜெயந்தி (திமுக)<br /><br />102 . காங்கேயம் ---- பொன்னுசாமி (பாஜக)<br /><br />திருப்பூர்<br />*************<br />103 .பெருந்துறை ---------தோப்பு வெங்கடாசலம் (அதிமுக)<br /><br />104 . பவானி ----------மகேந்திரன் (பாமக )<br /><br />105 . அந்தியூர் -------ரமணீதரன் (அதிமுக)<br /><br />106 கோபிசெட்டிபாளையம் ----செங்கோட்டையன் (அதிமுக)<br /><br />107 . திருப்பூர் வடக்கு ----ஆனந்தன் (அதிமுக)<br /><br />108 .திருப்பூர் தெற்கு ----தங்கவேல் (மா கம்யூ)<br /><br /><br />நீலகிரி<br />***********<br />109 .பவானிசாகர் --சுந்தரம் (இ கம்யூ)<br /><br />110 .ஊட்டி ----புத்தி சந்திரன் (அதிமுக)<br /><br />111 .கூடலூர் ----செல்வராஜ் (தேமுதிக)<br /><br />112 . குன்னூர் ----- பெள்ளி(இ கம்யூ )<br /><br />113 மேட்டுப் பாளையம் -- அருண்குமார் (திமுக)<br /><br />114 .அவினாசி ---- கருப்பு சாமி (அதிமுக)<br /><br />கோயம்புத்தூர்<br />*********************<br /><br />115 .பல்லடம் -----------பரமசிவம் (அதிமுக)<br /><br />116 .சூலூர் ----ஈஸ்வரன் (கொங்கு முன்னேற்றக் கழகம்)<br /><br />117 .கவுண்டம்பாளையம் ---ஆறுக் குட்டி (அதிமுக)<br /><br />118 . கோவை வடக்கு ----வீரகோபால் (திமுக)<br /><br />119 கோவை தெற்கு ---பொங்கலூர் பழனிசாமி (திமுக)<br /><br />120 . சிங்கா நல்லூர் -----49 ஓ<br /><br />------ தொடரும்<br /><br />அவசியமான பின் குறிப்பு<br />***************************************<br />எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .<br /><br />ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?<br /><br />எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?<br /><br />அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.<br /><br />நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .<br />பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.<br /><br />மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .<br /><br />ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .<br /><br />------தொடர்வோம்<br /><br /><br /> <br /><br /><br /><br /><span style="font-weight:bold;"></span></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-66998733785233776522011-04-11T02:15:00.000-07:002011-04-11T02:23:56.284-07:00#உங்கள் தொகுதியிள் உங்கள் ஓட்டு யாருக்கு ? பகுதி 1<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPBfU37gIi2srV-4MWe6DA0yUDyF_QVp6cMG1ZhWV0roXlp-ZD7jAKfruXIb9bOb9k-2Gi3qepQSR7KGjO2SgiUn9oOro4Za73SFdszFWz2pOWm5ICxTKu-2Jbd-6zPz3UE2Ezw3T5znpP/s1600/ballot+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 361px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPBfU37gIi2srV-4MWe6DA0yUDyF_QVp6cMG1ZhWV0roXlp-ZD7jAKfruXIb9bOb9k-2Gi3qepQSR7KGjO2SgiUn9oOro4Za73SFdszFWz2pOWm5ICxTKu-2Jbd-6zPz3UE2Ezw3T5znpP/s400/ballot+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594252555037552802" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm9xBz5dmekV2tNY-DoANLi4mZDkAJA4GjMkynwHvjVk3-DdT98yZbe91imsgdVFuiVSAl-Ie6bJv2xkQjCi4KseD_ciEBbh4vadhkBorOM9bSo__0Z6nBwFwqITa0pf45urB10kWxYBCs/s1600/ballot.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 370px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm9xBz5dmekV2tNY-DoANLi4mZDkAJA4GjMkynwHvjVk3-DdT98yZbe91imsgdVFuiVSAl-Ie6bJv2xkQjCi4KseD_ciEBbh4vadhkBorOM9bSo__0Z6nBwFwqITa0pf45urB10kWxYBCs/s400/ballot.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594252552916203858" /></a><br /><br /><br /><span style="font-weight:bold;"> அன்பர்களுக்கு வணக்கம் . <br /><br />உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .<br /><br />எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .<br /><br />சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .<br /><br />வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)<br /><br />மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவும் , யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)<br /><br />ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!<br /><br />யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .<br /><br />வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )<br /><br />மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்<br /><br />நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !<br /><br />ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .<br /><br />இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .<br /><br />இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .<br /><br />பாராளுமன்றத் தொகுதி<br />************************************<br />ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்<br /> <br /> <br /><br />.திருவள்ளூர் பா ம தொகுதி<br />******************************************<br /><br />1 . பொன்னேரி ------------------------------------------------ பொன் ராஜா(அதிமுக )<br /> <br /><br /><br />2 . திருவள்ளூர்---------------------------------------------- பிவி ரமணா (அதிமுக)<br /> <br /><br /><br />3 பூந்தமல்லி ------------------------------------------ ----------- மணிமாறன் (அதிமுக)<br /> <br /><br /><br />4 ஆவடி ----------------------------------------------- -------- அப்துல் ரஹீம் (அதிமுக)<br /> <br /><br />5 .மாதவரம்---- --------------------------------------------------------மூர்த்தி (அதிமுக)<br /> <br /><br />6 .கும்மிடிப்பூண்டி ------------------------------------------------- ---- 49 ஒ<br /> <br /><br /><br />வடசென்னை<br />********************<br /><br />7 திருவொற்றியூர் ------------------------------------------------------- குப்பன்(அதிமுக)<br /><br /> <br /><br /><br />8 டாக்டர்ராதாகிருஷ்ணன் நகர் -----------------------வெற்றிவேல் (அதிமுக)<br /><br /><br />9 .பெரம்பூர் ------- ---------------------------------------------------சவுந்திரராஜன் (சிபிஎம்)<br /><br /><br /><br />10 கொளத்தூர்<br /><br /> ----------------------------------- முக ஸ்டாலின் (திமுக (அல்லது) . சைதை துரைசாமி (அதிமுக)<br /><br /> (இருவருமே தகுதியானவர்கள்தான் )<br /><br /><br /><br />11 திருவிக நகர் --------------------------------------- நீலகண்டன் (அதிமுக)<br /><br /> <br /><br /><br /><br />12 .ராயபுரம்------------------------------------------------------ -ஜெயக்குமார் (அதிமுக)<br /><br /> <br /><br /><br /><br /> தென்சென்னை<br /><br />******************<br /><br /><br />13 .விருகம்பாக்கம்-------------------------------------------------------------- 49 ஓ<br /><br /> <br /><br /><br /><br />14சைதாப்பேட்டை- ------------------------ செந்தமிழன்(அதிமுக) <br /><br /><br /><br />15 தி . நகர் -------------------------------------------------------------கலைராஜன் (அதிமுக)<br /><br /><br /><br />16 .மைலாப்பூர் -----------------------------------------------------அசோக் (மக்கள் சக்தி ) <br /><br /><br /><br />17 .வேளச்சேரி------------------------------------ தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக )<br /><br /> <br /><br /><br /><br />18 .சோழிங்க நல்லூர்-----------------------------------------------------கந்தன் (அதிமுக)<br /><br /><br /><br />மத்திய சென்னை<br /><br />******************<br /><br /><br />19 .வில்லிவாக்கம் --------------------------------------------------அன்பழகன் (திமுக)<br /><br /> <br /><br /><br />20 எழும்பூர்----------------------------------------------------------பரிதிஇளம்வழுதி(திமுக)-<br /><br /><br /><br />21துறைமுகம்-----------------------------------------------------பழகருப்பையா(அதிமுக) <br /><br /><br /><br />22 சேப்பாக்கம் -----------------தமிமுன்அன்சாரி (மனிதநேய மக்கள் கடசி )<br /><br /><br /><br /><br />23 ஆயிரம் விளக்கு------------------------------------------------------------------------- 49 ஓ<br /><br /><br /> <br /><br />24அண்ணாநகர்------------------------------------------ கோகுல இந்திரா (அதிமுக) <br /><br /><br />ஸ்ரீ பெரும்புதூர்<br /><br />*****************<br /><br />25 .மதுரவாயல்--------------------------------------------------------------செல்வம் (பாமக)<br /><br /><br />26 .அம்பத்தூர்-------------------------------------------------------------ரங்கநாதன் (திமுக)<br /><br /> <br /><br /><br /><br />27ஆலந்தூர்----------------------------------------பண்ருட்டி ராமசந்திரன் (தேமுதிக)<br /><br /><br /><br />28 . ஸ்ரீபெரும்புதூர் ----------------------------------------- பெருமாள் (அதிமுக )<br /><br /> <br /><br /><br /><br />29 பல்லாவரம-------------------------------------------------------------- தனசிங் (அதிமுக)<br /><br /><br /><br />30 தாம்பரம்----------------------------------------------------- எஸ் ஆர் ராஜா (திமுக) <br /><br /><br />காஞ்சீபுரம்<br /><br />*****************<br /><br /><br />31 .செங்கல்பட்டு -----------------------------------------------------------ரங்கசாமி (பாமக )<br /><br /><br /><br />32 திருப்போரூர்---------------------------------------------------கே.மனோகர்(அதிமுக)<br /><br /><br /><br /><br />33 செய்யூர் ----------------------------------------------------------வி எஸ் ராஜி (அதிமுக)<br /><br /><br /><br />34 .மதுராந்தகம் ------------------------------------------------கணிதா சம்பத் (அதிமுக)<br /><br /><br /><br /><br /><br />35உத்திர மேரூர்--------------------------------------------------------கணேசன் (அதிமுக) <br /><br /> <br /><br /><br />36 .காஞ்சீபுரம்-----------------------------------------------------சோமசுந்தரம்(அதிமுக)<br /><br /> <br /><br /><br />அரக்கோணம்<br /><br />*********************<br /><br />37 .திருத்தணி ------------------------------------அருண் சுப்பிரமணியம்(தேமுதிக) <br /> <br /><br /><br />38 . அரக்கோணம் -------------------------------------------------ரவி (அதிமுக)<br /> <br /><br /><br />39 .சோளிங்கர்--அருள்அன்பரசு (காங்)------பி ஆர் மனோகர் (தேமுதிக)<br /> பி ஆர் மனோகர் (தேமுதிக)<br /><br />40 காட்பாடி ----------------- அப்பு ராதா கிருஷ்ணன் (அதிமுக)<br /> <br /><br /><br /><br />41 ராணிபேட்டை ---------------------------------------------ஜான் (அதிமுக)<br /> <br /><br /><br /><br />42 .ஆற்காடு ------------------------------------------------------------சீனிவாசன் (அதிமுக )<br /> <br /><br />வேலூர்<br />************<br /><br />43 . வேலூர்--------------------------------------------------------------விஜய் (அதிமுக)<br /> <br /><br />44 அணைக்கட்டு ----கலையரசு (பா ம க )--------- கலையரசு (பாமக )<br /> வேலு(தேமுதிக )<br /><br /><br />45 .கே வி குப்பம் -----------செ கு தமிழரசன் (இந்தியா குடியரசு கடசி)<br /><br /><br />46 .குடியாத்தம்-----------------லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்டு கடசி)<br /><br /><br />47 .ஆம்பூர்------அஸ்லம் பாட்ஷா (மனித நேய மக்கள் கடசி)<br /><br /><br />48 . வாணியம்பாடி ----------------------------------சம்பத் குமார் (அதிமுக)<br /> <br /><br />கிருஷ்ணகிரி<br />*******************<br />49 ஊத்தங்கரை--------------------------------------மனோரஞ்சிதம் (அதிமுக)<br /> <br /><br />50 பர்கூர் -------------------------------------- கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)<br /> <br /><br />51 கிருஷ்ணகிரி ----------------------------------------கேபி.முனுசாமி(அதிமுக)<br /> <br /><br /><br /><br />52 வேப்பனஹள்ளி-----------------------------------------------------49 ஓ<br /><br /><br />53 .ஓசூர்--------------------------------------------------------------------------சத்யா (சுயேச்சை)<br /> <br /><br /><br />54 ..தளி ---------------------------------)-------------------டி.ராமசந்திரன் (இ கம்யூ )<br /> <br /><br />தருமபுரி<br />************<br />55 பாலக்கோடு ---------------------------------------------------------அன்பழகன் (அதிமுக)<br /> <br /><br /><br />56 .பென்னாகரம்---------------------------------------------------- நஞ்சப்பன் (இ கம்யூ )<br /> <br /><br /><br />57 . தருமபுரி -------------------------------------------------------------சாந்தமூர்த்தி (பாமக)<br /> <br /><br /><br />58 .பாப்பிரெட்டி பட்டி ---------------------------- முல்லைவேந்தன் (திமுக)<br /> <br /><br /><br />59 .அரூர் --------------------------------டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )<br /> <br /><br />60 . மேட்டூர் ---------------------------------------------------------பார்த்திபன்(தேமுதிக)<br /> <br /><br />------ தொடரும்<br /><br />அவசியமான பின் குறிப்பு<br />***************************************<br />எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .<br /><br />ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?<br /><br />எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?<br /><br />அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.<br /><br />நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .<br />பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.<br /><br />மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .<br /><br />ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .<br /><br />------தொடர்வோம்<br /><br /><br /> <br /><br /><br /><br /></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-15126598617515371712011-04-05T23:08:00.000-07:002011-04-05T23:12:21.135-07:00# பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு !<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEP7IuqvdIt5zBhbdXhWiifx7LpQjmbQVpZkZIXWnQfvnFL2_UVfeGMCvZUU3_NcIkyMB9lQ8h9pyC8jCco87Nc2g2Wc7dY6A799a7Y8ZGETMLFCZYSNPFvOtd0n7wvHXjTnPQzTgdWXw9/s1600/vel.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 189px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEP7IuqvdIt5zBhbdXhWiifx7LpQjmbQVpZkZIXWnQfvnFL2_UVfeGMCvZUU3_NcIkyMB9lQ8h9pyC8jCco87Nc2g2Wc7dY6A799a7Y8ZGETMLFCZYSNPFvOtd0n7wvHXjTnPQzTgdWXw9/s400/vel.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5592349396657549586" /></a><br /><span style="font-weight:bold;">அன்பு மிகு பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு !<br />உங்கள் அழைப்புக்கிணங்க நான் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா பார்த்தேன் . நான் முன்பே குறிப்பிட்டது போல எனக்கு உங்களை தனிப்பட்ட விதத்திலும் பிடிக்கும் (இப்படி சொல்வதால் நான் உங்கள் கட்சிக்காரனோ சாதிக்காரனோ அல்ல )<br /><br />நல்ல வேளை . நேற்று உங்கள் பகுதி முடிந்து தமிழருவி மணியன் உட்காரும்போதுதான் 'ஆற்காட்டார் ' வந்தார் . எனவே அது வரை பார்க்க முடிந்தது . நல்ல பயனுள்ள நிகழ்ச்சி . கொஞ்சம் 'அரசியல்தனம் ' இருந்தாலும் உங்கள் பேச்சு அருமை .<br /><br /> அரசியல் பேச வேண்டியது அவசியம்தான் . ஆனால் இன்று பேசப்படும் அரசியல் எப்படி உள்ளது என்பதுதான் கேள்விக்குறி . எனது சிறு வயதில் ஏதாவது சொந்தக்காரர் வீட்டு விசேஷம் எனறால் இழவு கருமாதி எனறால் கூட நான் ஆர்வமாகப் போவேன் . காரணம் சடங்குகள் முடிந்ததும் பிரம்மாதமாக அரசியல் பேசப் படும் . ஆனால் இன்று ?<br /><br />எனது சொந்த அனுபவம் ஒன்று . என்னைப் போலவே பத்திரிகைத் துறையிலும் (ஆனால் அவர் சினிமாப் பத்திரிக்கை ) திரைத் துறையிலும் பணியாற்றிய நண்பர் ஒருவர் . மிக நெருக்கமாக இருந்தவர் .அவரது அறையில் நான் கொட்டமடித்த நாட்கள் பல .<br /><br />.இருவரில் யாருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தாலும் அடுத்தவருக்கு இரண்டாம் இடம் தரவேண்டும் என்பது எங்கள் முடிபு . நான் இனம் மொழி நிலம் சார்ந்த அரசியல் பேசுபவன் . அவர் கண்மூடித்தனமான திமுக அனுதாபி . அடிக்கடி நாங்கள் முட்டிக் கொண்டாலும் சற்றென்று அடங்கிப் போகும் .<br /><br />ஆனால் இலங்கைப் பிரச்னைக்காக ஒன்றரை மணிநேர உண்ணாவிரத நாடகத்தை கலைஞர் நடத்திய அன்று அவரை எதிர்பாராமல் சந்தித்தேன் . அவர்தான் அரசியல் பேச ஆரம்பித்தார் . கலைஞரின் நாடகத்தை நான் தோலுரித்துப் பேச , அவர் ஒரு நிலையில் அவர் என்னை தனிப்பட்ட விதத்தில் கிண்டல் செய்து பேசினார் .<br />ஒரு நிலையில் கேவலமாக சிரித்தபடி " போற போக்கைப் பாத்தா நீங்க கலைஞருக்கு எதிராக குஷ்புவுக்கு கூட ஓட்டுப் போட ஏங்குவீர்கள் போல " என்றார் . நான் சொன்னேன் இப்படி ஒரு இனத் துரோகத்தை உயிர் துரோகத்தை தமிழ்க் கலாச்சார துரோகம் செய்த குஷ்பூ கூட செய்ய மாட்டார் . எனவே அப்படி ஒரு நிலை வந்தால் இந்த விசயத்தில் கலைஞருக்கு எதிராக அவருக்கு ஓட்டுப் போடுவது கூட நியாயம் ஆகலாம்" என்றேன்.<br /><br />"அதுக்கு நீங்க தூக்குப் போட்டு தொங்கலாம் " என்றார் . நான் மனம் நொந்தேன் . பேசிப் பயன் இல்லை என்று வந்து விட்டேன் . அதன் பின்பு பார்க்கும்போது எல்லாம் "வாங்க .. குஷ்பூவின் அடிமையே " என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிப்பார் . கேவலமாய் கிண்டல் செய்வார் . என்னால் அந்தக் கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் நட்பு நிமித்தம் பொறுத்துக் கொண்டேன் . அப்போதுதான் அது நடந்தது !<br /><br />திடீரென்று ஒரு நாள் குஷ்பூவுக்கு மகுடம் சூட்டி 'திராவிடக் குலக்கொடி' ஆக்கினார் கலைஞர் . பெரியாரின் கொள்கைகளை என்பதற்கு பதில் "பெரியாரின் கொள்ளைகளை " என்று குஷ்பூ உளறியபோதும் கடிதோச்சி மெல்ல எறிந்தார் . (பின்னே குஷ்பூ என்ன கடலூர் எம் பி ஆதிசங்கரா ? தீ மிதித்ததற்காக காட்டுமிராண்டி என்று திட்டு வாங்க ?)<br /><br />இப்போது நான் அந்த எனது நண்பரை தேடிப போனேன் இத்தனை நாள் அவர் என்னைப் பார்த்த கேவலமான பார்வைகளை ஒன்று திரட்டி பார்க்க எண்ணி , ஆளைப் பார்த்ததும் நட்பு முன்னிற்க மெல்ல சிரித்தேன் . அவ்வளவுதான் . முறைத்துக் கொண்டு போய் விட்டார் .<br /><br />எனது அலைபேசிக்கு அவரிடம் இருந்து கேவலமான குறுஞ்செய்திகள் வந்தன . என்னை ஜெயலிதாவின் அடிமை என்றார் புதிதாக (ஜெயலலிதா திமுகவுக்கு போக மாட்டார் என்ற நம்பிக்கை !) சில தரக் குறைவான தாக்குதல்கள் . கெட்ட வார்த்தைகள் . என்னால் பொறுக்க முடியவில்லை . அவரை விட நிறைய சுளையான கெட்ட வார்த்தைகள் எனக்கும் தெரியும் என்பதை குறுஞ்செய்திகள் மூலம் நானும் நிரூபித்தேன் .<br /><br /> நான் திமுகவின் தமிழின துரோகத்தை மறக்கவில்லை . அவர் கடைசிவரை இனம் மொழி சார்ந்த அரசியலுக்கு வரவில்லை . எனது www.susenthilkumaran.blogspot.com வலைப் பக்கத்திற்கு ஒரு முறை கூட அவர் வரவில்லை . நட்பு முறிந்தது . இன்றும் பார்த்தாலும் முறைத்துக் கொள்கிறோம் .<br /><br />இங்கே சரியான அரசியல் பேச முடியவில்லை . அதை கெடுக்க பலர் இருக்கிறார்கள் . கலைஞரின் தவறை குறிப்பிட்டால் உடனே அதை ஜெயலலிதாவுக்கு ஆதரவான பேச்சு என்றும் ஜெயலலிதாவின் தவறை சொன்னால் ,உடனே " அப்ப நீங்க கலைஞர் ஆதரவாளரா ?' என்றும் திசைதிருப்பும் வேசித்தனம் கூசாமல் நடக்கிறது<br /><br />காரணம் இங்கே அடிமைகள் அதிகம் . ஆண்மையாளர்கள் ரொம்ப கம்மி . அடிமையாய் இருத்தலே ஆண்மை என்று எண்ணும் அற்பர்கள் கூட்டம் அதிகம்<br /><br />கலைஞர் செய்த துரோகத்தை சொன்னால் ஜெயலலிதா மட்டும் கிழித்திருப்பாரா என்கிறார்கள் . ஜெயலிதா கிழிக்கவில்லை என்பதால்தானே இவரை முதல்வர் ஆக்கினோம் இவர் செய்யவில்லையே அப்படி இருக்க இவருக்கு எதற்கு மீண்டும் ஓட்டுப் போடவேண்டும். ரெண்டு பேரில் யாருக்குப் போட்டாலும் ஒன்றுதானே என்ற கேள்வியை யாரும் காதில் வாங்குவது இல்லை . அதிமுக உட்பட எல்லா கட்சிகளும் இப்படிதான் .<br /><br />ஆனால் இப்படி ஒரு கேவலமான அரசியலை ஆரம்பித்து வைத்ததே கலைஞர்தான் . இப்போது கூட பாருங்கள் . அவரது குறைகளை சொன்னால் ஜெயலலிதா மட்டும் செய்வாரா என்பார் . அதை சொல்ல கலைஞருக்கு அருகதை இல்லை என்பார் ஜெயலலிதா . இன்னும் இதே கூத்துதான் .<br /><br />தொண்டர்கள் என்ற பெயரில்--- இந்த குழாயடிச் சண்டையை அப்படியே பின்பற்றுகிற ---.பரதேசிகளிடம் ஆக்கபூர்வமான அரசியல் பேச முடியவில்லை . இப்படியாக அண்ணா அறிவுப்பூர்வமாக வைத்திருந்த அரசியலை கலைஞர் அடிமைகளின் கூச்சல் ஆக்கி விட்டார் . எனவே அரசியல் பேசுவது தவறு என்ற தவறான கருத்து உடையவர்களின் எண்ணத்துக்கு ஒரு அநியாயமான நியாயம் கிடைத்து விடுகிறது .<br /> <br />சரிதானே வேல்முருகன் . ஆனால் ஒன்று . என் சிற்றறிவுக்கு எட்டியவரை , நீங்கள் வெற்றி பெற வேண்டியவர் . வெல்ல வாழ்த்துகிறேன் . </span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-50346942380911870982011-04-05T01:16:00.000-07:002011-04-05T01:21:24.782-07:00#உலகக்கோப்பை வெற்றி ....! கேள்வியும் பதிலும் நானே<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoSse7wYakRKBBGjQjGZdli_mz-R6Qv6QU-CCQl5nPjkVpRjs6RxGpb6UfFpvNPtItTWef4shpkcSuTcFECyydvijc_cyoCJGAWs5_kBRvm6M0iPISbTVrGC18PAwBhHIyGQIUJECQN8lV/s1600/76711101-indias-players.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 315px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoSse7wYakRKBBGjQjGZdli_mz-R6Qv6QU-CCQl5nPjkVpRjs6RxGpb6UfFpvNPtItTWef4shpkcSuTcFECyydvijc_cyoCJGAWs5_kBRvm6M0iPISbTVrGC18PAwBhHIyGQIUJECQN8lV/s400/76711101-indias-players.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5592011656407755714" /></a><br /><span style="font-weight:bold;">இந்திய அணியின் வெற்றி எப்படிப்பட்டது ?</span><br /><br />இன்னும் கம்பீரமாக வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் ஸ்ரீசநத் புண்ணியத்தால் (பாவத்தால்?) கொஞ்சம் போராட வேண்டி இருந்தது , முதலில் ஆடிய இலங்கை அணி 25 ஓவர்களை ஆடி முடித்திருந்த போது அணியின் ஸ்கோர் 126 . அதில் ஸ்ரீசாந்த் கொடுத்தது மட்டும் 64 ரன்கள் . எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூடா வீழ்த்தாமல் . இலங்கை பிரச்னைக்கு பிறகு இந்தியாவை விட இலங்கையிடம் ரகசிய காதலில் இருக்கும் -- நமது மத்திய அரசில் 'சக்தி'யோடு இருக்கும் ---மலையாளிகள் சிங்களவனுடன் சேர்ந்து இந்திய அணியை வீழ்த்த திட்டமிட்டு ஸ்ரீசாந்தை களம் இறக்கினார்களோ என்ற அச்சம் எழுந்தது . கம்பீர் கம்பீரமாகவும் தோனி, தோணியாகவும் ஆனதால் வென்றோம்<br /><br /><span style="font-weight:bold;">ஒருவேளை இலங்கை அணி வென்று இருந்தால் ?</span><br /><br />ஒரு கொடுமையும் ஒரு நல்லதும் நடந்திருக்கும் .<br /><br />கொடுமை . முதல் முதலில் ஷேவாக் கை வீழ்த்தியவுடன் லசித் வெளிப்படுத்திய காட்டுத்தனமான எக்ஸ்பிரஷன் ஆயிரம் மடங்காக வாங்கடே மைதானத்தை அசிங்கப்படுத்தியிருக்க்கும் . அந்த கொடுமை நல்ல வேலை நடக்கவில்லை .<br /><br />1992 ஆசிய கோப்பையில் செமி பைனலில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது . பைனலில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியது . உடனே தன்னை வென்ற இந்தியாவை வென்ற இலங்கை அணியை விருந்துக்கு அழைத்தது பாகிஸ்தான் . விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அரசியலாகப் பார்த்த அற்ப இலங்கை தனது வெற்றி அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பியது . அங்கு இரு அணி வீரர்களும் அரசு பிரமுகர்களும் சேர்ந்து குடித்து கும்மாளம் அடித்து இந்தியா down down என்று கோஷமிட்டு கொண்டாடினார்கள் . இப்போதும் இலங்கை வென்று இருந்தால் இந்திய இலங்கை நட்பின் லட்சணம் மீண்டும் மக்களுக்குப் புரிந்திருக்கும் . அந்த நல்லது நடக்காததில் வருத்தமே .<br /><br /><span style="font-weight:bold;">ஜெயவர்தனேவின் செஞ்சுரி பற்றி?<br /></span><br />இலங்கை அணியின் மிகப் பெரிய பலவீனம் வெற்றிக்காக ஆடாமல் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமே மனதில் வைத்து ஆடியது . ஜெயவர்தனே செஞ்சுரி போட்டபோது கேலரியில் இருந்து வாழ்த்திய அந்த உறவுக்காரப் பெண்மணி முகத்தில் இலங்கை தோற்றபோது பெரிய வருத்தம் தெரியவில்லை .<br /><br /><span style="font-weight:bold;">ஷேவாக் அவுட் ஆனது ...?</span><br /><br />அது சரியான எல் பி டபிள்யூ என்று பச்சைக் குழந்தைக்கு கூட பார்த்த உடனே தெரிந்தது . ஆனால் ரிவியூ போய் ஒரு வாய்ப்பை வீணாக்கியது நியாயமா வீரு?<br /><br /><span style="font-weight:bold;">சச்சின் அவுட் ... ?</span><br /><br />இன்னும் கூட அவரால் சரியாக கணிக்க முடியாத பந்துகள் வருகின்றன . நிஜமாகவே கிரிக்கெட் என்பது ஒரு பெரிய கடல்தான் .<br /><br /><span style="font-weight:bold;">கம்பீரின் 97 பற்றி ?</span><br /><br />சச்சின் டெண்டுல்கர் நூறாவது செஞ்சுரியை நெருங்க முக்கிய காரணம் என்ன தெரியுமா? பெரும்பாலான தனது சத ஆட்டங்களில் 96 ரன்களை நெருங்கிய பிறகு அவர் கிரீசை விட்டு வெளியே வந்து பவுண்டரி அடிக்கவோ சிக்சர் அடிக்கவோ முயல்வதில்லை . சதம் அடித்த பிறகுதான் அந்த வேலை எல்லாம் . ஆனால் கம்பீர் ? 97 இல் இருக்கும்போது அப்படி கிரீசை விட்டு வெளியே வந்து முயற்சிக்க வேண்டிய அவசியம் என்ன ? சதம் அமைந்த பிறகு அதையெல்லாம் செய்து தொலைக்க வேண்டியதுதானே ? பக்குவமில்லாத ஆட்டம் .<br /><br /><br /><span style="font-weight:bold;"><br />தோனியின் 91 எப்படி?</span><br /><br />தனிப்பட்ட சாதனைபற்றி கிஞ்சிற்றும் கவலைப் படாமல் அணியின் வெற்றிக்காக மட்டுமே ஆடிய ஆட்டம் இது . அருமை . ஒரு கேப்டன் என்ற விதத்தில் அணியினரை தேர்ந்தெடுக்கும் விதத்தில் அவர் தோற்று இருந்தாலும் ஓர் ஆட்டக்காரனாக அவர் ஆட்ட நாயகன்தான்<br /><br /><span style="font-weight:bold;">ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் ஒழுங்காக ஆடாத சச்சினிக்கு தோனியை விட அதிக முக்கியத்துவம் கொடுத்தது சரியா ?</span><br /><br />அந்த அவஸ்தை சச்சின் முகத்திலேயே தெரிந்ததுதான் அழகு . அவர் பந்து பொறுக்கிப் போடும் பையனாக ஆரம்பித்த மைதானம் அது . இதுவரை அவரது காலத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது இல்லை . இப்போது வென்ற அணியில் அவரும் இருக்கிறார் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அப்படி செய்துள்ளனர் . தவிர அவர் மண்ணின் மைந்தன் . எல்லோருமே மானம் கெட்ட தமிழம் மாதிரியே இருக்க முடியுமா? அந்த ரசிகர்களை குஷிப் படுத்த அது ஒரு வழி . பரவாயில்லை .<br /><br /><span style="font-weight:bold;">மைதானத்தில் ரஜினிகாந்த்தைப் பார்த்தீர்களா ?</span><br /><br />நிஜமான மராட்டியன் அவர் . மும்பை வான்கடே மைதானத்தில் கூடும் ரசிகர்களும் அப்படியே . ஆக மராட்டிய இன உணர்வோடு அங்கு வீற்றிருந்தார் அவர் . நீ உப்பு போட்டு சோறு திங்காத ஈன தமிழ் இனத்தில் பிறந்தவன் என்பதற்காக அவரை குறை சொல்ல தேவை இல்லை . ஆனால் அங்கே போய் "மாதா வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு . என்னை வாழ வைத்தது மராட்டியப் பாலு " என்று பாடி யாரும் பிழைக்க முடியாது . காசுக்காக அப்படி எழுதும் கட்டை பஞ்சாயத்து கவிஞன் யாரும் அங்கு இல்லை .<br /><br /><span style="font-weight:bold;"><br />பொறுக்க முடியாத அநியாயம் ?</span><br /><br />தேர்வுக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் பரிசாம் . ஸ்ரீசாந்தை தேர்ந்தேடுத்தவனுக்கு ஒரு கோடி ரூபாய அபராதம் போடாதது மட்டும் மன்னிக்கவே முடியாத அநியாயம் .<br /><br /><span style="font-weight:bold;">இந்திய அணி வென்றதை இலங்கையில் யாழ் மாவட்ட தமிழர்கள் சந்தோஷமாக கொண்டாடி சிங்களவனிடம் அடி வாங்கி இருக்கிறார்களே ..</span><br /><br />தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேசிக் கொண்டு உயர்சாதி ஆணவம் காரணமாகவும் டெல்லி துப்பும் எச்சிலை குடிக்கும் அரசியல் காரணமாகவும் தமிழினமே அழிக்கப் படுவது பற்றி கவலைப் படாமல் இலங்கையின் இறையாண்மை பற்றிஇங்கே இருந்தபடியே கவலைப் பட்ட , பண்ணாடைகளிடம் பரதேசிகளிடம் கம்மனாட்டிகளிடம் கபோதிகளிடம் இதை சொல்லுங்கள் .இத்தனை துரோகம் செய்த பிறகும் ஈழத் தமிழன் யாரை நேசிக்கிறான் என்பதை 'சோ 'வென செருப்பால் அடித்துச் சொல்லுங்கள் .சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-16735876352029319592011-03-16T00:35:00.000-07:002011-03-16T00:42:46.205-07:00#எங்கேயடா கண்டித்தீர்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnzzV0t3OcHRjbaxw-7fM5InekpiLlMMtzdhaiFtvDbqDTxm_OCpOFgNCxvf2ozW6Zb-J-B0gHcOblQUyoBs4o6J3yPj63lqzKBd_lm4eybRQwgP7eUHNDl7SDbxV7VY5dftTWi8Rqt1eP/s1600/595891_33_preview.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 347px; height: 195px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnzzV0t3OcHRjbaxw-7fM5InekpiLlMMtzdhaiFtvDbqDTxm_OCpOFgNCxvf2ozW6Zb-J-B0gHcOblQUyoBs4o6J3yPj63lqzKBd_lm4eybRQwgP7eUHNDl7SDbxV7VY5dftTWi8Rqt1eP/s400/595891_33_preview.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5584579496824818978" /></a><br /><span style="font-weight:bold;">விளையாட்டு வீரர் ஜீவ் மில்கா சிங்கின் பயிற்சியாளர் அம்ரிதேந்தர் சிங் <span style="font-style:italic;"><span style="font-weight:bold;"></span></span></span>, <br /><br /><span style="font-style:italic;">இவரை இத்தாலியில் மிலன் நகரில் சீக்கிய தலைப்பகையான டர்பனை கழட்டச் சொல்லிவிட்டார்களாம் .</span> <br /><br /><span style="font-style:italic;">ஒரு இனமே அசிங்கப் படுத்தப் பட்டு விட்டதாக லபோ திபோ என்று மாரடித்துக் கொள்கின்றன வடக்கத்தி சேனல்கள் .</span> <br /><br /><span style="font-style:italic;"><span style="font-weight:bold;">ஒரு இனத்தின் மொத்தப் பெண்களையும் ஆடையை அவிழ்க்கச் சொல்வதில் ஆரம்பித்து அடுத்தடுத்து கேவலப் படுத்தியபோது எங்கேயடா கண்டித்தீர்கள் வேசி மகன்களே !</span></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-37019139321908806812011-03-04T03:56:00.000-08:002011-03-04T04:00:11.701-08:00# காங்கிரசின் திட்டம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_eOWvSSmd-068DDX_2fSUranEEcvGe8dL_1rCUzZrbP2I0KIeAbm_8TPPCPtUqZVwSSIUQpiximhpVaXV2AlpMwrh6ZBafn9bR6H4N6BQwmTQOugWyki7RyEZLNEiEhbfhPTtOCO8_BGN/s1600/x350.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 350px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_eOWvSSmd-068DDX_2fSUranEEcvGe8dL_1rCUzZrbP2I0KIeAbm_8TPPCPtUqZVwSSIUQpiximhpVaXV2AlpMwrh6ZBafn9bR6H4N6BQwmTQOugWyki7RyEZLNEiEhbfhPTtOCO8_BGN/s400/x350.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580193099999272594" /></a><br /><br /><br /><span style="font-weight:bold;"><span style="font-style:italic;">என்னதான் உலகம் மோசமாக இருந்தாலும் நேர்மையாக வாழும் ஒரு சராசரி மனிதன் தன் கைவசப் படும் சின்னச் சின்ன அதிகாரங்களை வைத்தே கம்பீரமாக வாழ்ந்து விட முடிகிறது .<br /><br />என்னதான் அதிகாரங்கள் இருந்தாலும் சுயநலத்தில் புழுத்து கொஞ்சம் கூட நேர்மை என்பது இல்லாமல் போய்விட்டால் தன்னை விட அதிகாரம் மிக்கவர்களின் மிரட்டலுக்கு நிபந்தனையின்றி சிக்கும் அடிபணிய வேண்டி இருக்கிறது , சொக்க தங்கம் (நன்றி பழைய கலைஞர்) சோனியாவிடம் சிக்கியா கருணாநிதியைப் போல .</span><br /><br />வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத இடைவெளி . காங்கிரஸ் அரசின் திட்டம் இதுதான் .<br /><br /> முடிந்தவரை திமுகவை மிரட்டி சீட்டுக்களைப் பெற வேண்டியது . தேர்தல் நடத்த வேண்டியது .<br /><br />முதலில் எச்சக்கலை வாக்காளர்களை பணத்தால் அடிப்பது .<br /><br />அதுவும் போதாது என்றால் பதிவு முடிந்த வாக்கு எந்திரங்கள் எண்ணப்படாமல் இருக்கும் ஒரு மாத இடைவெளியில் மற்ற கட்சி பூத் எஜண்டுகளையும் காசு வெட்டி கரைத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் குழப்படி செய்து தான் போட்டியிடும் தொகுதி அனைத்தையும் (ப . சிதம்பரத்துக்கு செய்தது போல ) வென்றதாக அறிவித்துக் கொள்வது<br /><br />திமுகவை இன்னும் மைனாரிட்டியாக்கி ஒரு கூட்டணி அரசு ஏற்படுத்த வேண்டியது . <br /><br />ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதையும் குழப்பி தனது தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டியது<br /><br /><span style="font-style:italic;">அப்புறம் கடலுக்குள் என்ன..... தமிழ் நிலத்திலேயே தமிழர்களை சுட்டுத் தள்ளலாம் .<br /><br /> நீ கிரிக்கெட் பாரு தமிழா (மவனே .... இருக்குடி உனக்கு ஆப்பு )</span></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-8117357147923741482011-02-27T23:37:00.000-08:002011-02-27T23:40:20.317-08:00#கிளிநொச்சியில் மது பானத் தொழிற்சாலைகிளிநொச்சியில் மது பானத் தொழிற்சாலை .! #அய்யா ராஜபட்சே ! நீதான்யா நிஜமாவே டாக்டர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு !<br /><br />விளம்பரப் படத்தில் முன்பு கலைஞருக்கு ஆனந்தி கடிதம் எழுதினாள். இப்போது அருட்செல்வன் எழுதுகிறான் காரியம் ஆகிறதா என்று பார்க்காமல் கடிதம் மட்டுமே எழுதி , கருணை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கயவாளித்தனம் அடுத்த தலைமுறைக்கும் வந்து விடுமோ ?சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-39829886712336212412011-02-27T22:39:00.000-08:002011-02-27T23:04:19.855-08:00#நாலாந்தர பேருக்கு நன்றி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZsZ68b327Ef7z7IQrRkoF_6dOQbTLkdPSDcfO1H-VnMHMQ0zs8kT_Jl65n7FST-wgoKDsL7o0ECGlDSV-o5bV6khc3-7lOe-DdLLHWg3st89Gk5QT5YcUCNp3x6mAqoFski6N5C4rmY45/s1600/amma+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZsZ68b327Ef7z7IQrRkoF_6dOQbTLkdPSDcfO1H-VnMHMQ0zs8kT_Jl65n7FST-wgoKDsL7o0ECGlDSV-o5bV6khc3-7lOe-DdLLHWg3st89Gk5QT5YcUCNp3x6mAqoFski6N5C4rmY45/s400/amma+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578632135455419410" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiwN3_9bEok44-a0dzC32RqfYZx8U4kuWa7faLv4M1JMlYJzttDQ_5Xp5q_hRBf0FUGM2po7cr9hHA-q08w7u6SlU_yZXPc13MWdb_ySy4XDgDDxLhDyQ5QhXt1zSIYrsqOSBgUhiDDDGb/s1600/amma+sithai+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 209px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiwN3_9bEok44-a0dzC32RqfYZx8U4kuWa7faLv4M1JMlYJzttDQ_5Xp5q_hRBf0FUGM2po7cr9hHA-q08w7u6SlU_yZXPc13MWdb_ySy4XDgDDxLhDyQ5QhXt1zSIYrsqOSBgUhiDDDGb/s400/amma+sithai+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578632139722633170" /></a><br /><br /><span style="font-weight:bold;">பார்வதி அம்மாள் எனும்<br />தாயின் உடலோடு<br />நாய்களின் நிணங்களைப்<br />போட்டு எரித்துள்ளனர்<br />சில இலங்கைக் காடையர்கள் .<br /><br />நன்றி .!<br /><br />நல்ல வேளை....<br />பன்றிகளின் பிணங்களோடு <br />சிங்களப் 'பன்றி'களின்<br />பிணங்களோடு<br />சேர்த்து எரிக்கவில்லையே !<br /> </span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-26539858591969553932011-02-23T21:03:00.000-08:002011-02-23T21:10:56.919-08:00# கலைஞர் கருணாநிதி வருத்தம் நியாயமா தலீவா?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnOCt4k2HjorJV7b6LbSsY9Rj181iXDB3rZHp6fmUzryYHjdHN0U-NMjEaCOVjsKy5Exl52q9VXQq1BAn5NNYDju9O6EAJhK2YYFr7qSDX4Er4QbAHm5GIJow-5TXeHKWV_r86A_23oLfi/s1600/DSC01166.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnOCt4k2HjorJV7b6LbSsY9Rj181iXDB3rZHp6fmUzryYHjdHN0U-NMjEaCOVjsKy5Exl52q9VXQq1BAn5NNYDju9O6EAJhK2YYFr7qSDX4Er4QbAHm5GIJow-5TXeHKWV_r86A_23oLfi/s400/DSC01166.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577119006817969202" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibsyCievlug7Yb7ubDN8U9IjZIQVyuMxcZNrTgKPj7bAj8EFO9UYhDeOoDZVb3dMIbnq4n9R54Ij1B_CpDrWs_vedKg8EsfBAsVNEfo5NSsFZcXzNROE6wKjl0YRPUaZtr-2u1rFvU2uj5/s1600/010506.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 278px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibsyCievlug7Yb7ubDN8U9IjZIQVyuMxcZNrTgKPj7bAj8EFO9UYhDeOoDZVb3dMIbnq4n9R54Ij1B_CpDrWs_vedKg8EsfBAsVNEfo5NSsFZcXzNROE6wKjl0YRPUaZtr-2u1rFvU2uj5/s400/010506.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577119004693186386" /></a><br /><br /><span style="font-weight:bold;">காங்கிரஸ் என்னை முப்பது ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லப் பார்க்கிறது --- முதல்வர் கலைஞர் கருணாநிதி வருத்தம் .# <br />அதே காங்கிரசோட சேர்ந்து நீங்க <br />ஈழத் தமிழினத்தை<br />மூவாயிரம் ஆண்டுகள் <br />பின்னோக்கி கொண்டு போனது மட்டும் <br />நியாயமா தலீவா? </span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-47000465482533314942011-02-19T22:13:00.000-08:002011-02-19T22:37:34.647-08:00#எங்கேயடா புதைப்ப்பீர்கள் ?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrkFCplaDBwEQClZ1Pd2a7TcvT578HJ-k4MVuNznrh2BFi6HaHjw_BbaBO9NLkdpc7QkbKpsyzMjSqj0iFMZ3GMQQqo7UJcubgBvIneESh_owteuZ3UUG8CoIoIjFrv4VXldnrx2BDP-W_/s1600/parvathiammal.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrkFCplaDBwEQClZ1Pd2a7TcvT578HJ-k4MVuNznrh2BFi6HaHjw_BbaBO9NLkdpc7QkbKpsyzMjSqj0iFMZ3GMQQqo7UJcubgBvIneESh_owteuZ3UUG8CoIoIjFrv4VXldnrx2BDP-W_/s400/parvathiammal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5575657081633953250" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisQMsOuYu4mGnhUH-kK2GofeeyBwro7A7aHpaKdwqJ5h1kol0gxpyXcR6NmuVQQIA-0pB93PewM6bH6Z_huqUIdjH6NPnnXrty1UmrT1mRojUWhz44ziZkGJKND-hGUVO86ekFvBdWkQUx/s1600/n_inner_parvathy-300x178.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 178px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisQMsOuYu4mGnhUH-kK2GofeeyBwro7A7aHpaKdwqJ5h1kol0gxpyXcR6NmuVQQIA-0pB93PewM6bH6Z_huqUIdjH6NPnnXrty1UmrT1mRojUWhz44ziZkGJKND-hGUVO86ekFvBdWkQUx/s400/n_inner_parvathy-300x178.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5575656818110651570" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYjthsAANa2xakCRUjEtvK1V7FeKc0igGOWFzzAchLcTsiLC15xJu1yF5r9pRObg9_bXlhDfRmVEdzcXzzEEUO9A9umB4G82IuqD6qDp_hgtRkWqzr-Got7l8iPcrDjUa_QeS_tXJ8DJc-/s1600/paarvathy-amma.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 244px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYjthsAANa2xakCRUjEtvK1V7FeKc0igGOWFzzAchLcTsiLC15xJu1yF5r9pRObg9_bXlhDfRmVEdzcXzzEEUO9A9umB4G82IuqD6qDp_hgtRkWqzr-Got7l8iPcrDjUa_QeS_tXJ8DJc-/s400/paarvathy-amma.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5575656811689173410" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsKKqicDP7qRGnBojF5FFw0dMrHMrJrbXm9UrX1I3Db272B7nE1I2_PyjrbJURCoAiM4mAVRF3oODnTnnX9YZvap05SDN9J9AhQ93d9I10IbwvCirH14BsUtU1ApvyroU-DWzEUsPT6Zxr/s1600/prabhakaranmother.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsKKqicDP7qRGnBojF5FFw0dMrHMrJrbXm9UrX1I3Db272B7nE1I2_PyjrbJURCoAiM4mAVRF3oODnTnnX9YZvap05SDN9J9AhQ93d9I10IbwvCirH14BsUtU1ApvyroU-DWzEUsPT6Zxr/s400/prabhakaranmother.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5575656811179844498" /></a><br /><br /><br /><br /><span style="font-weight:bold;">ஒரு<br />தியாகத்தின் திருக்கடல்<br />ஒரே 'மூச்சில்'<br />குடிக்கப் பட்டிருக்கிறது .<br /><br />எத்தனையோ<br />வீரத்தாய்கள்<br />இறந்த இதே பூமியில் ,<br />முதன் முதலாய்<br />மறைந்திருக்கிறது ...<br />வீரத்தின் தாய் .<br /><br />வெறுப்பை எதிர்கொண்டே <br />இருப்பை தொடர்ந்த<br />ஒரு இனத்தின் மண்ணில் ...<br /><br />அம்மா!<br /><br />நீ மட்டும்<br />நெருப்பை சுமந்த<br />கருப்பை .<br />இனமானம் வளர்த்த<br />திருப்பை.<br /><br />அடேய்...<br /><br />எங்கே.....<br />எப்படியடா<br />புதைப்பீர்கள் ,<br />இணையில்லா அந்தச்<br />சிறப்பை ?<br /><br />நாற்காலிகளுக்கெனப்<br />பிள்ளை பெறும்<br />நாடிருக்கும் இனத்தில் , <br />நீ மட்டுமே<br />சமருக்கென<br />சந்ததி வளர்த்தவள்!<br />படைக் களத்துக்கென<br />பாரம் சுமந்தவள் !<br /><br />என்னை மன்னித்து விடு<br />தாயே . !<br /><br />சொக்கத் தங்கத்துக்கு<br />சோப்பு போட்டே<br />கைகள் தேய்ந்து போன<br />கயவர்கள் நிறைந்த மண்ணில் ...<br /><br />வடக்கே இருந்து<br />ஜிப்பா போட்டுக்கொண்டு<br />எக்குத்தப்பான நடையோடு<br />எவன் வந்தாலும், <br />கை குலுக்குவதிலேயே<br />காவியப் பெருமை பெறும்<br />கசடுகள் நிறைந்த நிலத்தில் ....<br /><br />முன்னூறு ரூபாய்க்கு<br />வாக்குச் சீட்டை வைத்து<br />விபச்சாரம் செய்து விட்டு ,<br />மூவாயிரம் கொடுத்தால்<br />யாரை வைத்து<br />விபச்சாரம் செய்யலாம் என, <br />வீட்டுப் பெண்களை<br />விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கிற<br />விகாரர்கள் நிறைந்த<br />ஒரு சமூகத்தில் ...<br /><br />காலைக் கழுவிக் குடிப்பதையே<br />கதை கவிதை இலக்கியம்<br />என்று சொல்லி<br />ஓக்காலிக்க் வைக்கிற<br />ஒரு கும்பல், <br />விருது பெறும் எருதுகளாக<br />பல்லிளிக்கும்<br />ஒரு பாழும் சூழலில்<br /><br />இருந்துகொண்டு ....<br /><br />உனக்காக<br />ஒரு துளி கண்ணீர்<br />விடுவதைத் தவிர<br />எதுவும் செய்ய முடியவில்லை<br />என்னால். <br /><br /><br />குண்டு வைத்துக்<br />கொத்துக் கொத்தாய்<br />கொன்று போடும்<br />கொலைகாரத தீவிரவாதக்<br />கூட்டத்தில் <br />பிறந்தவர்களுக்கும்....<br />தீவிரமாய் சிகிச்சை அளித்து<br />திருப்பி அனுப்பும்<br />அஹிம்சை தேசம்<br /><br />ஒரு<br />கிழவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து ..<br /><br />இதோ !<br />கிழிந்து கிடக்கிறது .<br /><br />சிகிச்சை அளிக்க மறுத்த<br />அதே தேசம்<br />பிச்சை போடுவது போல<br />பிறகு அழைக்கையில் ....<br /><br />மறுத்த போது<br />அந்தப் பெண்மையின் வீரம்<br />திசைகளைக் கிழித்தது. <br /><br />பார்வதி அம்மாளைப்<br />புதைப்பவர்களே !<br /><br />கூடவே இன்னொரு<br />குழி வெட்டுங்கள் .<br /><br />புதைப்பதற்கு<br />இன்னொரு உடலைத் தேடாதீர்கள் .<br /><br />இருக்கவே இருக்கிறது ...<br />இந்தியாவின் காந்தீயம்!<br /><br /><br /><br /><br /><span style="font-weight:bold;"></span></span>சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.com6