Tuesday, April 5, 2011

# பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு !


அன்பு மிகு பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு !
உங்கள் அழைப்புக்கிணங்க நான் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா பார்த்தேன் . நான் முன்பே குறிப்பிட்டது போல எனக்கு உங்களை தனிப்பட்ட விதத்திலும் பிடிக்கும் (இப்படி சொல்வதால் நான் உங்கள் கட்சிக்காரனோ சாதிக்காரனோ அல்ல )

நல்ல வேளை . நேற்று உங்கள் பகுதி முடிந்து தமிழருவி மணியன் உட்காரும்போதுதான் 'ஆற்காட்டார் ' வந்தார் . எனவே அது வரை பார்க்க முடிந்தது . நல்ல பயனுள்ள நிகழ்ச்சி . கொஞ்சம் 'அரசியல்தனம் ' இருந்தாலும் உங்கள் பேச்சு அருமை .

அரசியல் பேச வேண்டியது அவசியம்தான் . ஆனால் இன்று பேசப்படும் அரசியல் எப்படி உள்ளது என்பதுதான் கேள்விக்குறி . எனது சிறு வயதில் ஏதாவது சொந்தக்காரர் வீட்டு விசேஷம் எனறால் இழவு கருமாதி எனறால் கூட நான் ஆர்வமாகப் போவேன் . காரணம் சடங்குகள் முடிந்ததும் பிரம்மாதமாக அரசியல் பேசப் படும் . ஆனால் இன்று ?

எனது சொந்த அனுபவம் ஒன்று . என்னைப் போலவே பத்திரிகைத் துறையிலும் (ஆனால் அவர் சினிமாப் பத்திரிக்கை ) திரைத் துறையிலும் பணியாற்றிய நண்பர் ஒருவர் . மிக நெருக்கமாக இருந்தவர் .அவரது அறையில் நான் கொட்டமடித்த நாட்கள் பல .

.இருவரில் யாருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தாலும் அடுத்தவருக்கு இரண்டாம் இடம் தரவேண்டும் என்பது எங்கள் முடிபு . நான் இனம் மொழி நிலம் சார்ந்த அரசியல் பேசுபவன் . அவர் கண்மூடித்தனமான திமுக அனுதாபி . அடிக்கடி நாங்கள் முட்டிக் கொண்டாலும் சற்றென்று அடங்கிப் போகும் .

ஆனால் இலங்கைப் பிரச்னைக்காக ஒன்றரை மணிநேர உண்ணாவிரத நாடகத்தை கலைஞர் நடத்திய அன்று அவரை எதிர்பாராமல் சந்தித்தேன் . அவர்தான் அரசியல் பேச ஆரம்பித்தார் . கலைஞரின் நாடகத்தை நான் தோலுரித்துப் பேச , அவர் ஒரு நிலையில் அவர் என்னை தனிப்பட்ட விதத்தில் கிண்டல் செய்து பேசினார் .
ஒரு நிலையில் கேவலமாக சிரித்தபடி " போற போக்கைப் பாத்தா நீங்க கலைஞருக்கு எதிராக குஷ்புவுக்கு கூட ஓட்டுப் போட ஏங்குவீர்கள் போல " என்றார் . நான் சொன்னேன் இப்படி ஒரு இனத் துரோகத்தை உயிர் துரோகத்தை தமிழ்க் கலாச்சார துரோகம் செய்த குஷ்பூ கூட செய்ய மாட்டார் . எனவே அப்படி ஒரு நிலை வந்தால் இந்த விசயத்தில் கலைஞருக்கு எதிராக அவருக்கு ஓட்டுப் போடுவது கூட நியாயம் ஆகலாம்" என்றேன்.

"அதுக்கு நீங்க தூக்குப் போட்டு தொங்கலாம் " என்றார் . நான் மனம் நொந்தேன் . பேசிப் பயன் இல்லை என்று வந்து விட்டேன் . அதன் பின்பு பார்க்கும்போது எல்லாம் "வாங்க .. குஷ்பூவின் அடிமையே " என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிப்பார் . கேவலமாய் கிண்டல் செய்வார் . என்னால் அந்தக் கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் நட்பு நிமித்தம் பொறுத்துக் கொண்டேன் . அப்போதுதான் அது நடந்தது !

திடீரென்று ஒரு நாள் குஷ்பூவுக்கு மகுடம் சூட்டி 'திராவிடக் குலக்கொடி' ஆக்கினார் கலைஞர் . பெரியாரின் கொள்கைகளை என்பதற்கு பதில் "பெரியாரின் கொள்ளைகளை " என்று குஷ்பூ உளறியபோதும் கடிதோச்சி மெல்ல எறிந்தார் . (பின்னே குஷ்பூ என்ன கடலூர் எம் பி ஆதிசங்கரா ? தீ மிதித்ததற்காக காட்டுமிராண்டி என்று திட்டு வாங்க ?)

இப்போது நான் அந்த எனது நண்பரை தேடிப போனேன் இத்தனை நாள் அவர் என்னைப் பார்த்த கேவலமான பார்வைகளை ஒன்று திரட்டி பார்க்க எண்ணி , ஆளைப் பார்த்ததும் நட்பு முன்னிற்க மெல்ல சிரித்தேன் . அவ்வளவுதான் . முறைத்துக் கொண்டு போய் விட்டார் .

எனது அலைபேசிக்கு அவரிடம் இருந்து கேவலமான குறுஞ்செய்திகள் வந்தன . என்னை ஜெயலிதாவின் அடிமை என்றார் புதிதாக (ஜெயலலிதா திமுகவுக்கு போக மாட்டார் என்ற நம்பிக்கை !) சில தரக் குறைவான தாக்குதல்கள் . கெட்ட வார்த்தைகள் . என்னால் பொறுக்க முடியவில்லை . அவரை விட நிறைய சுளையான கெட்ட வார்த்தைகள் எனக்கும் தெரியும் என்பதை குறுஞ்செய்திகள் மூலம் நானும் நிரூபித்தேன் .

நான் திமுகவின் தமிழின துரோகத்தை மறக்கவில்லை . அவர் கடைசிவரை இனம் மொழி சார்ந்த அரசியலுக்கு வரவில்லை . எனது www.susenthilkumaran.blogspot.com வலைப் பக்கத்திற்கு ஒரு முறை கூட அவர் வரவில்லை . நட்பு முறிந்தது . இன்றும் பார்த்தாலும் முறைத்துக் கொள்கிறோம் .

இங்கே சரியான அரசியல் பேச முடியவில்லை . அதை கெடுக்க பலர் இருக்கிறார்கள் . கலைஞரின் தவறை குறிப்பிட்டால் உடனே அதை ஜெயலலிதாவுக்கு ஆதரவான பேச்சு என்றும் ஜெயலலிதாவின் தவறை சொன்னால் ,உடனே " அப்ப நீங்க கலைஞர் ஆதரவாளரா ?' என்றும் திசைதிருப்பும் வேசித்தனம் கூசாமல் நடக்கிறது

காரணம் இங்கே அடிமைகள் அதிகம் . ஆண்மையாளர்கள் ரொம்ப கம்மி . அடிமையாய் இருத்தலே ஆண்மை என்று எண்ணும் அற்பர்கள் கூட்டம் அதிகம்

கலைஞர் செய்த துரோகத்தை சொன்னால் ஜெயலலிதா மட்டும் கிழித்திருப்பாரா என்கிறார்கள் . ஜெயலிதா கிழிக்கவில்லை என்பதால்தானே இவரை முதல்வர் ஆக்கினோம் இவர் செய்யவில்லையே அப்படி இருக்க இவருக்கு எதற்கு மீண்டும் ஓட்டுப் போடவேண்டும். ரெண்டு பேரில் யாருக்குப் போட்டாலும் ஒன்றுதானே என்ற கேள்வியை யாரும் காதில் வாங்குவது இல்லை . அதிமுக உட்பட எல்லா கட்சிகளும் இப்படிதான் .

ஆனால் இப்படி ஒரு கேவலமான அரசியலை ஆரம்பித்து வைத்ததே கலைஞர்தான் . இப்போது கூட பாருங்கள் . அவரது குறைகளை சொன்னால் ஜெயலலிதா மட்டும் செய்வாரா என்பார் . அதை சொல்ல கலைஞருக்கு அருகதை இல்லை என்பார் ஜெயலலிதா . இன்னும் இதே கூத்துதான் .

தொண்டர்கள் என்ற பெயரில்--- இந்த குழாயடிச் சண்டையை அப்படியே பின்பற்றுகிற ---.பரதேசிகளிடம் ஆக்கபூர்வமான அரசியல் பேச முடியவில்லை . இப்படியாக அண்ணா அறிவுப்பூர்வமாக வைத்திருந்த அரசியலை கலைஞர் அடிமைகளின் கூச்சல் ஆக்கி விட்டார் . எனவே அரசியல் பேசுவது தவறு என்ற தவறான கருத்து உடையவர்களின் எண்ணத்துக்கு ஒரு அநியாயமான நியாயம் கிடைத்து விடுகிறது .

சரிதானே வேல்முருகன் . ஆனால் ஒன்று . என் சிற்றறிவுக்கு எட்டியவரை , நீங்கள் வெற்றி பெற வேண்டியவர் . வெல்ல வாழ்த்துகிறேன் .

#உலகக்கோப்பை வெற்றி ....! கேள்வியும் பதிலும் நானே


இந்திய அணியின் வெற்றி எப்படிப்பட்டது ?

இன்னும் கம்பீரமாக வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் ஸ்ரீசநத் புண்ணியத்தால் (பாவத்தால்?) கொஞ்சம் போராட வேண்டி இருந்தது , முதலில் ஆடிய இலங்கை அணி 25 ஓவர்களை ஆடி முடித்திருந்த போது அணியின் ஸ்கோர் 126 . அதில் ஸ்ரீசாந்த் கொடுத்தது மட்டும் 64 ரன்கள் . எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூடா வீழ்த்தாமல் . இலங்கை பிரச்னைக்கு பிறகு இந்தியாவை விட இலங்கையிடம் ரகசிய காதலில் இருக்கும் -- நமது மத்திய அரசில் 'சக்தி'யோடு இருக்கும் ---மலையாளிகள் சிங்களவனுடன் சேர்ந்து இந்திய அணியை வீழ்த்த திட்டமிட்டு ஸ்ரீசாந்தை களம் இறக்கினார்களோ என்ற அச்சம் எழுந்தது . கம்பீர் கம்பீரமாகவும் தோனி, தோணியாகவும் ஆனதால் வென்றோம்

ஒருவேளை இலங்கை அணி வென்று இருந்தால் ?

ஒரு கொடுமையும் ஒரு நல்லதும் நடந்திருக்கும் .

கொடுமை . முதல் முதலில் ஷேவாக் கை வீழ்த்தியவுடன் லசித் வெளிப்படுத்திய காட்டுத்தனமான எக்ஸ்பிரஷன் ஆயிரம் மடங்காக வாங்கடே மைதானத்தை அசிங்கப்படுத்தியிருக்க்கும் . அந்த கொடுமை நல்ல வேலை நடக்கவில்லை .

1992 ஆசிய கோப்பையில் செமி பைனலில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது . பைனலில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியது . உடனே தன்னை வென்ற இந்தியாவை வென்ற இலங்கை அணியை விருந்துக்கு அழைத்தது பாகிஸ்தான் . விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அரசியலாகப் பார்த்த அற்ப இலங்கை தனது வெற்றி அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பியது . அங்கு இரு அணி வீரர்களும் அரசு பிரமுகர்களும் சேர்ந்து குடித்து கும்மாளம் அடித்து இந்தியா down down என்று கோஷமிட்டு கொண்டாடினார்கள் . இப்போதும் இலங்கை வென்று இருந்தால் இந்திய இலங்கை நட்பின் லட்சணம் மீண்டும் மக்களுக்குப் புரிந்திருக்கும் . அந்த நல்லது நடக்காததில் வருத்தமே .

ஜெயவர்தனேவின் செஞ்சுரி பற்றி?

இலங்கை அணியின் மிகப் பெரிய பலவீனம் வெற்றிக்காக ஆடாமல் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமே மனதில் வைத்து ஆடியது . ஜெயவர்தனே செஞ்சுரி போட்டபோது கேலரியில் இருந்து வாழ்த்திய அந்த உறவுக்காரப் பெண்மணி முகத்தில் இலங்கை தோற்றபோது பெரிய வருத்தம் தெரியவில்லை .

ஷேவாக் அவுட் ஆனது ...?

அது சரியான எல் பி டபிள்யூ என்று பச்சைக் குழந்தைக்கு கூட பார்த்த உடனே தெரிந்தது . ஆனால் ரிவியூ போய் ஒரு வாய்ப்பை வீணாக்கியது நியாயமா வீரு?

சச்சின் அவுட் ... ?

இன்னும் கூட அவரால் சரியாக கணிக்க முடியாத பந்துகள் வருகின்றன . நிஜமாகவே கிரிக்கெட் என்பது ஒரு பெரிய கடல்தான் .

கம்பீரின் 97 பற்றி ?

சச்சின் டெண்டுல்கர் நூறாவது செஞ்சுரியை நெருங்க முக்கிய காரணம் என்ன தெரியுமா? பெரும்பாலான தனது சத ஆட்டங்களில் 96 ரன்களை நெருங்கிய பிறகு அவர் கிரீசை விட்டு வெளியே வந்து பவுண்டரி அடிக்கவோ சிக்சர் அடிக்கவோ முயல்வதில்லை . சதம் அடித்த பிறகுதான் அந்த வேலை எல்லாம் . ஆனால் கம்பீர் ? 97 இல் இருக்கும்போது அப்படி கிரீசை விட்டு வெளியே வந்து முயற்சிக்க வேண்டிய அவசியம் என்ன ? சதம் அமைந்த பிறகு அதையெல்லாம் செய்து தொலைக்க வேண்டியதுதானே ? பக்குவமில்லாத ஆட்டம் .



தோனியின் 91 எப்படி?


தனிப்பட்ட சாதனைபற்றி கிஞ்சிற்றும் கவலைப் படாமல் அணியின் வெற்றிக்காக மட்டுமே ஆடிய ஆட்டம் இது . அருமை . ஒரு கேப்டன் என்ற விதத்தில் அணியினரை தேர்ந்தெடுக்கும் விதத்தில் அவர் தோற்று இருந்தாலும் ஓர் ஆட்டக்காரனாக அவர் ஆட்ட நாயகன்தான்

ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் ஒழுங்காக ஆடாத சச்சினிக்கு தோனியை விட அதிக முக்கியத்துவம் கொடுத்தது சரியா ?

அந்த அவஸ்தை சச்சின் முகத்திலேயே தெரிந்ததுதான் அழகு . அவர் பந்து பொறுக்கிப் போடும் பையனாக ஆரம்பித்த மைதானம் அது . இதுவரை அவரது காலத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது இல்லை . இப்போது வென்ற அணியில் அவரும் இருக்கிறார் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அப்படி செய்துள்ளனர் . தவிர அவர் மண்ணின் மைந்தன் . எல்லோருமே மானம் கெட்ட தமிழம் மாதிரியே இருக்க முடியுமா? அந்த ரசிகர்களை குஷிப் படுத்த அது ஒரு வழி . பரவாயில்லை .

மைதானத்தில் ரஜினிகாந்த்தைப் பார்த்தீர்களா ?

நிஜமான மராட்டியன் அவர் . மும்பை வான்கடே மைதானத்தில் கூடும் ரசிகர்களும் அப்படியே . ஆக மராட்டிய இன உணர்வோடு அங்கு வீற்றிருந்தார் அவர் . நீ உப்பு போட்டு சோறு திங்காத ஈன தமிழ் இனத்தில் பிறந்தவன் என்பதற்காக அவரை குறை சொல்ல தேவை இல்லை . ஆனால் அங்கே போய் "மாதா வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு . என்னை வாழ வைத்தது மராட்டியப் பாலு " என்று பாடி யாரும் பிழைக்க முடியாது . காசுக்காக அப்படி எழுதும் கட்டை பஞ்சாயத்து கவிஞன் யாரும் அங்கு இல்லை .


பொறுக்க முடியாத அநியாயம் ?


தேர்வுக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் பரிசாம் . ஸ்ரீசாந்தை தேர்ந்தேடுத்தவனுக்கு ஒரு கோடி ரூபாய அபராதம் போடாதது மட்டும் மன்னிக்கவே முடியாத அநியாயம் .

இந்திய அணி வென்றதை இலங்கையில் யாழ் மாவட்ட தமிழர்கள் சந்தோஷமாக கொண்டாடி சிங்களவனிடம் அடி வாங்கி இருக்கிறார்களே ..

தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேசிக் கொண்டு உயர்சாதி ஆணவம் காரணமாகவும் டெல்லி துப்பும் எச்சிலை குடிக்கும் அரசியல் காரணமாகவும் தமிழினமே அழிக்கப் படுவது பற்றி கவலைப் படாமல் இலங்கையின் இறையாண்மை பற்றிஇங்கே இருந்தபடியே கவலைப் பட்ட , பண்ணாடைகளிடம் பரதேசிகளிடம் கம்மனாட்டிகளிடம் கபோதிகளிடம் இதை சொல்லுங்கள் .இத்தனை துரோகம் செய்த பிறகும் ஈழத் தமிழன் யாரை நேசிக்கிறான் என்பதை 'சோ 'வென செருப்பால் அடித்துச் சொல்லுங்கள் .

Wednesday, March 16, 2011

#எங்கேயடா கண்டித்தீர்கள்


விளையாட்டு வீரர் ஜீவ் மில்கா சிங்கின் பயிற்சியாளர் அம்ரிதேந்தர் சிங் ,

இவரை இத்தாலியில் மிலன் நகரில் சீக்கிய தலைப்பகையான டர்பனை கழட்டச் சொல்லிவிட்டார்களாம் .

ஒரு இனமே அசிங்கப் படுத்தப் பட்டு விட்டதாக லபோ திபோ என்று மாரடித்துக் கொள்கின்றன வடக்கத்தி சேனல்கள் .

ஒரு இனத்தின் மொத்தப் பெண்களையும் ஆடையை அவிழ்க்கச் சொல்வதில் ஆரம்பித்து அடுத்தடுத்து கேவலப் படுத்தியபோது எங்கேயடா கண்டித்தீர்கள் வேசி மகன்களே !

Friday, March 4, 2011

# காங்கிரசின் திட்டம்




என்னதான் உலகம் மோசமாக இருந்தாலும் நேர்மையாக வாழும் ஒரு சராசரி மனிதன் தன் கைவசப் படும் சின்னச் சின்ன அதிகாரங்களை வைத்தே கம்பீரமாக வாழ்ந்து விட முடிகிறது .

என்னதான் அதிகாரங்கள் இருந்தாலும் சுயநலத்தில் புழுத்து கொஞ்சம் கூட நேர்மை என்பது இல்லாமல் போய்விட்டால் தன்னை விட அதிகாரம் மிக்கவர்களின் மிரட்டலுக்கு நிபந்தனையின்றி சிக்கும் அடிபணிய வேண்டி இருக்கிறது , சொக்க தங்கம் (நன்றி பழைய கலைஞர்) சோனியாவிடம் சிக்கியா கருணாநிதியைப் போல .


வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத இடைவெளி . காங்கிரஸ் அரசின் திட்டம் இதுதான் .

முடிந்தவரை திமுகவை மிரட்டி சீட்டுக்களைப் பெற வேண்டியது . தேர்தல் நடத்த வேண்டியது .

முதலில் எச்சக்கலை வாக்காளர்களை பணத்தால் அடிப்பது .

அதுவும் போதாது என்றால் பதிவு முடிந்த வாக்கு எந்திரங்கள் எண்ணப்படாமல் இருக்கும் ஒரு மாத இடைவெளியில் மற்ற கட்சி பூத் எஜண்டுகளையும் காசு வெட்டி கரைத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் குழப்படி செய்து தான் போட்டியிடும் தொகுதி அனைத்தையும் (ப . சிதம்பரத்துக்கு செய்தது போல ) வென்றதாக அறிவித்துக் கொள்வது

திமுகவை இன்னும் மைனாரிட்டியாக்கி ஒரு கூட்டணி அரசு ஏற்படுத்த வேண்டியது .

ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதையும் குழப்பி தனது தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டியது

அப்புறம் கடலுக்குள் என்ன..... தமிழ் நிலத்திலேயே தமிழர்களை சுட்டுத் தள்ளலாம் .

நீ கிரிக்கெட் பாரு தமிழா (மவனே .... இருக்குடி உனக்கு ஆப்பு )

Sunday, February 27, 2011

#கிளிநொச்சியில் மது பானத் தொழிற்சாலை

கிளிநொச்சியில் மது பானத் தொழிற்சாலை .! #அய்யா ராஜபட்சே ! நீதான்யா நிஜமாவே டாக்டர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு !

விளம்பரப் படத்தில் முன்பு கலைஞருக்கு ஆனந்தி கடிதம் எழுதினாள். இப்போது அருட்செல்வன் எழுதுகிறான் காரியம் ஆகிறதா என்று பார்க்காமல் கடிதம் மட்டுமே எழுதி , கருணை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கயவாளித்தனம் அடுத்த தலைமுறைக்கும் வந்து விடுமோ ?