
மாவிரன் பிரபாகரனின் தந்தையார்
திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு
என் அஞ்சலி
*************
வீரத்தின்
அப்பனுக்கு..
வரலாற்றில் வாழும்
திருவேங்கடம்
வேலுப்பிள்ளைக்கு...
எல்லாரின்
உயிர்த்துளியும்
இளஞ்சூட்டில்
இருக்குமாம்.
ஆனால்
உன்னுடைய
ஒரு துளி
எரிமலைக் குழம்பின்
திலகம்.
ஆம்!
அய்யா..
நீ
கருப்பைக்குள்
ஒரு
நெருப்பை
விதைத்தவன்.
'இப்படி ஒரு
பிள்ளை
வேண்டும்'
எல்லோரும்
ஆசைப் பட்டனர்
உன்
பிள்ளையைப் பார்த்து .
'இப்படி ஒரு
தந்தை வேண்டும்'
வீரர்களை
ஏங்க வைத்தவன் நீ!
போர்க்களத்தில்
பிள்ளை இருக்க
அமைதிக் குளத்தில்
நானா
என
ஈழம் கிளம்பி ,
பாசத்தையும்
வீரத்தையும்
பக்குவமாய்க்
கலந்தவன் நீ.
நீ
நடக்கும்போது
முதுமையில்
தள்ளடுவாயா?
நான் பார்த்ததில்லை.
ஆனால்
சாகும்வரை
உன்
பாசமும் வீரமும்
தள்ளாடவே இல்லை.
விழுதுகள்
பழுதானபோதும்
வீரியமாய் நின்ற
வேர் ஆலம் நீ
உன்னை
உருக்குலைத்த
உளுத்தர்கள்
உளுத்துப் போகும்
நாள்
விரைவில்.
பொன்னியின் செல்வனில்
வரும்
பெரிய பழுவேட்டரையன்
உன்
மகனுக்குப் பிடித்த
மாவீரன்.
ஆனால்
பிரபாகர மாவீரனைப்
பெற்ற நீ ....
நாங்கள் பார்த்த
நவீன
பழுவேட்டரையன்!
4 comments:
கண்ணீர் அஞ்சலிகள்
நன்றி புதுகைத் தென்றல்
அஞ்சலி.
நன்றி சூர்யா
Post a Comment