Friday, October 9, 2009

# எட்டுக் கொலை சோனியாவும் பெட்டிக் கேஸ் ஒபாமாவும்




கடந்த ஒரு வாரமாக ஒரு பயங்கரத் திகிலில் நான் தவித்தேன்.

அடிக்கடி வியர்த்துக் கொட்டியது

இரவில் வரிசையாக கெட்ட கனவு.

காரணம் நான் படித்த ஒரு செய்தி.

பன்னாட்டு விழிப்புணர்வுக் கழகம் (இண்டர் நேஷனல் அவேர்னெஸ் ஆர்கனைசேஷன்) என்ற ஒரு அமைப்பு போட்டஒரு குண்டுதான் அதற்குக் காரணம்.

உலக சமாதானத்துக்கான நோபல் பரிசை சோனியா காந்திக்கு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பு ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

உங்களை எல்லாம் இப்படி ஒரு செய்தியைச் சொல்லிஅதிர வைப்பதற்கு வருத்தமாகத்தான் உள்ளது . ஆனால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லையே.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் தொடர்ந்து ஏழு வருஷங்களாக
அந்த அமைப்பு இந்த கேவலமான வேலையைச் செய்து வந்ததுதான்.(அன்பு, சமாதானம் இவற்றுக்கு எல்லாம் ஏழாம் பொருத்தமாக விளங்கும் சோனியாவை ஏழு வருடங்கலளாக சிபாரிசு செய்ய வேண்டுமானால் உள்ளுக்குள் எந்த அளவு அழுகிப் போயிருக்க வேண்டும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்)

எனக்கு குமட்டலாகவே இருந்தது .

நல்லவேளை .. சமாதானத்துக்கான நோபல் பரிசை ஒரு வழியாக ஒபாமாவுக்கு
கொடுத்ததாக அறிவிப்பு வந்திருக்கிறது.

அனேகமாக சோனியாவுக்கு கிடைக்கும் வாய்ப்புக் கூட இருந்திருக்கலாம்.
ஆனால் இந்த வருடம் கிடைக்காமல் போன‌தற்கு ஈழ அழிப்பு மட்டுமின்றி
இன்னொரு காரணமும் உண்டு.

இந்த வருடம் நோபல் பரிசுக்கு சோனியா சிபாரிசு செய்யப் பட்ட போது கூறப்பட்ட ஒரு காரணம்...........

" சோனியா உலகத்து உயிர்கள் எல்லாம் அமைதியாக வாழ்வதற்கு அன்னை தெரசாவைப் போல சேவை செய்து வருகிறார்"

என்பதுதான்.( கேள்விப் பட்ட போது எனக்கும் இப்படிதாங்க இருந்திச்சு)

அனேகமாக இறந்து பட்ட ஈழத் தமிழர்களின் ஆன்மாவோடு அன்புத் தெய்வமான அன்னை தெரசாவின் ஆன்மாவும் சேர்ந்து சோனியாவுக்கு சாபமிட்டிருக்க வேண்டும்.

ஒருமுறை அனாதைக் குழந்தைகளின் நலனுக்காகப் பணம் வேண்டி கல்கத்தா நகர வீதிடில் கையேந்திப் பிச்சை எடுத்துக் கொண்டு வந்தார் அன்னை தெரசா. ஒரு கடை வாசலில் நின்று அவர் கையேந்தியபோது அந்தக் கடைக்காரன் அன்னையின் கையில் எச்சில் துப்பி " இதோ கொடுத்து விட்டேன் " என்றார்.

சற்றும் முகம் சுளிக்காத அன்னை அந்த எச்சிலை தன் புடவையில் மெதுவாகத் துடைத்துக் கொண்டு " சரி .. இதை நான் வைத்துக் கொண்டேன்.பசியால் தவிக்கும் என் பிள்ளைகலுக்கு எதாவது கொடுப்பா" என்றார். கதறிவிட்ட அந்தக் கடைக்காரன் கல்லாப் பெட்டியில் இருந்து எண்ணிப் பார்க்காமல் அள்ளிக் கொடுத்தான்.

அந்த அன்னை எங்கே? ஒரு இனத்தின் அழிவுக்கே துணை போன இந்தத் தொன்னை எங்கே?

அந்த அன்புத் தெய்வத்தை சோனியாவோடு ஒப்பிட்ட பாவத்தை ,இவர்கள் எங்கே சென்று எந்த ஜென்மத்தில் எந்தக் கடல் நீரை மொத்தமாக ஊற்றிக் கழுவுவார்கள்?

சோனியாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தரப் படவில்லை என்ற செய்தி வந்த பின்புதான் எனக்கு நிம்மதி. " இவங்களுக்கு எங்க கிடைக்கப் போகுது ?எதுக்கு இவ்வளவு பதட்டம் ?" என்று சொல்பவர்களுக்கு வணக்கம்.அதை என் அறிவும் சொன்னது.

ஆனால் உலக நாடுகளையே வேடிக்கை பார்க்க வைத்து ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நோபல் பரிசு 'வாங்கு'வதா சிரமம் என்ற அச்சமும் எழுந்ததே!

ஒரு வேளை சோனியாவுக்குக் கிடைத்துவிட்டால் அப்புறம் அடுத்தடுத்து ராஜ பக்சே, சரத் பொன்சேகா, கருணா, மன்மோகன் சிங், எம். கே. நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோனி , ப.சிதம்பரம், கருணா நிதி , தங்க பாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் .. என்று சோனியா வகையறாக்கள் அடுத்தடுத்து சிபாரிசு செய்யப் படுமே என்ற கொடூர பயம் வேறு.

நல்ல வேளை.. நோபல் பரிசின் தலை தப்பியது !

இந்த அளவுக்காவது நோபல் பரிசு ' நோபிள்' பரிசாக இருப்பது சந்தோஷம்.

ஆனால் ஒரு எச்சரிக்கை.

ஏழு தடவை சலிக்காமல் ஜிஞ்சா அடித்தவர்கள் எட்டாவது தடவையும் சலிக்காமல் அடிப்பார்கள் .

எத்தனை தடவை அடித்தாலும் ஈழத் தமிழர்களை அழித்த பாவத்துக்காக சோனியாவுக்கு நோபல் பரிசு ' நோ' சொல்லிக் கொண்டே இருந்து விட வேண்டும். அதற்காக உலகத் தமிழர்கள் என்றும் குரல் கொடுக்க வேண்டும்.இது கட்டாயம்.

பின் குறிப்பு:‍ சமாதானத்துக்கான நோபல் பரிசை ஒபாமாவுக்கு கொடுத்தது மட்டும் நியாயமா என்று பின்னூட்டம் எழுதத் துடிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை .

ஒபாமாவும் தகுதியற்றவர் என்ற யாராவது கருத்து தெரிவித்தால் அது க்வனிக்கப் பட வேண்டிய கருத்து. ஆனால் ஒபாமாவுக்கெ தரப் படக் கூடாது என்றால் சோனியா அந்தத் திசையிலேயே நிற்கக் கூடாது .

ஏனெனில் அநியாயமாக எட்டுக் கொலை செய்தவனை ஆதரிக்க ,அவசரத்தில் பெட்டிக் கேசில் சிக்கியவனை திட்ட முடியாது அல்லவா?

No comments:

Post a Comment