Friday, March 4, 2011

# காங்கிரசின் திட்டம்




என்னதான் உலகம் மோசமாக இருந்தாலும் நேர்மையாக வாழும் ஒரு சராசரி மனிதன் தன் கைவசப் படும் சின்னச் சின்ன அதிகாரங்களை வைத்தே கம்பீரமாக வாழ்ந்து விட முடிகிறது .

என்னதான் அதிகாரங்கள் இருந்தாலும் சுயநலத்தில் புழுத்து கொஞ்சம் கூட நேர்மை என்பது இல்லாமல் போய்விட்டால் தன்னை விட அதிகாரம் மிக்கவர்களின் மிரட்டலுக்கு நிபந்தனையின்றி சிக்கும் அடிபணிய வேண்டி இருக்கிறது , சொக்க தங்கம் (நன்றி பழைய கலைஞர்) சோனியாவிடம் சிக்கியா கருணாநிதியைப் போல .


வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத இடைவெளி . காங்கிரஸ் அரசின் திட்டம் இதுதான் .

முடிந்தவரை திமுகவை மிரட்டி சீட்டுக்களைப் பெற வேண்டியது . தேர்தல் நடத்த வேண்டியது .

முதலில் எச்சக்கலை வாக்காளர்களை பணத்தால் அடிப்பது .

அதுவும் போதாது என்றால் பதிவு முடிந்த வாக்கு எந்திரங்கள் எண்ணப்படாமல் இருக்கும் ஒரு மாத இடைவெளியில் மற்ற கட்சி பூத் எஜண்டுகளையும் காசு வெட்டி கரைத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் குழப்படி செய்து தான் போட்டியிடும் தொகுதி அனைத்தையும் (ப . சிதம்பரத்துக்கு செய்தது போல ) வென்றதாக அறிவித்துக் கொள்வது

திமுகவை இன்னும் மைனாரிட்டியாக்கி ஒரு கூட்டணி அரசு ஏற்படுத்த வேண்டியது .

ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதையும் குழப்பி தனது தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டியது

அப்புறம் கடலுக்குள் என்ன..... தமிழ் நிலத்திலேயே தமிழர்களை சுட்டுத் தள்ளலாம் .

நீ கிரிக்கெட் பாரு தமிழா (மவனே .... இருக்குடி உனக்கு ஆப்பு )

3 comments:

chandru2110 said...

காங்கிரஸ் பக்காவா காய் நகர்த்துது. தாத்தாவோட கோவணத்தை மொதகொண்டு உருவிட்டு தெருவுல நிறுத்த போறாங்க.

vasanthan, Erode said...

karpanai valam konjam adhigam pola ungaluku

சு.செந்தில் குமரன் said...

கற்பனையாகபே போனால் உங்களை விட எனக்கு அதிக சந்தோசம் .
உண்மையாக ஆனால் ?

Post a Comment