Monday, July 13, 2009

# ஆஸ்திரேலியாவின் இறையாண்மை





ஆஸ்திரேலியா, அடுத்து கனடா எனத் தொடர்ந்து இப்போது இங்கிலாந்திலும்இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதாவது இன ரீதியான தாக்குதல்கள் ரதொடங்கப் பட்டிருப்பதாகத் தகவல்கள்.

ஏன்?



சுதந்திரம் வாங்கி தனி நாடா மலர்ந்த உடனே உலக அரங்குல இந்தியாவுக்குகிடைச்ச பேரு பாம்பாட்டி தேசம் என்பதுதான். அத உடைக்க ஜவஹர்லால் நேரு எடுத்த அற்புதமான நடவடிக்கைதான் சோஷலிஸ ஜனநாயகம் , நடுவு நிலைமைக் கொள்கை, அணி சேராத் தன்மை இது எல்லாம்.

உண்மையிலேயே இந்தியாவுக்கு நேற்று வரைக்கும் உலக அரங்குல மரியாதையான காவலா இருந்ததே இந்தக்கொள்கைகள்தான். அதும் காந்தியோட தேசம் என்ற பெயருக்கு கு இது எல்லாம்அழகா பொருந்தியது.. இந்தியான்னா உள்ளூர் விசயம் முதல் உலக விசயம் வரை அது கருணையின் அடிப்படையிலேயே எதையும் கையாளும் என்ற பேருஇந்தியர்களுக்கு எப்பவும் எங்க‌யும் ஒரு கவுரவமாக இருந்தது .அதனால 'இந்தியன் நம்ம ஊருல வந்து நமம வேலஒய பறிக்கிறான்கற எரிச்சல் மற்ற நாட்டவர்க்கு இருந்தாக் கூட அது கோபமா மாறல.

எல்லாம் கொஞ்ச நாள் முன்பு வரை .

இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் கோர முகம் உலகுக்குத் தெரிஞ்ச உடனே எல்லாம் மாறிப்போச்சு. இலங்கையில அநியாயமா அழிக்கப் பட்ட‌தே , இந்தியாவின் மூத்த ஒரு இனத்தின் நீட்சிதான் என்கிற அளவுக்கு உலகத்துல எல்லாருக்கும் விவரம் தெரியாம இருக்கலாம். ஆனா ஒரு இனம் அழியக் காரணமே இந்தியாதான் என்பது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

ஸோ.. இது வரைக்கும் உலக அரங்கில் எது இந்தியனுக்கு ஒரு காவலாக இருந்ததோ அந்த கேடயம் நொறுங்கிப் போச்சு.அதான் அங்கங்க உதை விழுது .

இது ஒரு பக்கம் இருக்க ..

சிறு நீரகக் கல் பிரச்னையால் பெரும் அவதிக்கு ஆளாகி பின்னர் காய்ச்சல் உள்ளிட்ட பல உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்த என்னை கொதித்தெழ வைத்தது ஒரு செய்தி .

அதாகப் பட்டது .....

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட எல்லா சம்பவங்களிலும் சம்மந்தப்பட்ட எல்லா ஆஸ்திரேலியர்களையும் கைது செய்து மாறுகால் மாறு கை வாங்காமல் அந்த சம்பவஙளையெல்லாம் பெட்டி கேஸ் எனப்படும் சாதரண வழக்குகளில் பதிவு செய்திருக்கிறதாம் ஆஸ்திரேலிய அரசு .

தவிர ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவர் ஒரு பேட்டியில். " இந்தியர்கள் பெரும்பாலும் தவறான நேரங்களில் தவறான இடங்களிலேயே சுற்றி வருகின்றனர் . அதனாலதான் அடி வாங்குகின்றனர்." என்று கூறிவிட்டார். எப்படி அது மாதிரி சொல்லப் போச்சு என்று தொம்ம்ம்ம்ம்ம் தொம்ம்ம்ம்ம் என்று மாரடித்து அழுதன வட இந்தியச் சேனல்கள் .கொதித்தெழக் காரணம் இதுதான்

"ஆஸ்திரேலியா இப்படிச் சொல்லலாமா?" என்று ஆத்திர‌த்தோடு கேட்டார் நண்பர் ஒருவர்.

நான் மன திடத்தோடு இப்படிச் சொன்னேன்." ஆஸ்திரேலியாவுக்கென்று ஒரு இறையாண்மை உள்ளது.அவர்கள் தேசப் பாதுகாப்புக்கு என்று சில வரையறை இருக்கு.அதுக்கு எதிரா யாரும் செயல்படக்கூடாது. தவிர நாம் பேசும் எந்த வார்த்தையும் அவர்கள் கோபத்தை அதிகப் படுத்தக் கூடாது. நாம் ஆஸ்திரேலியர்களோடு அன்பாக வாழ வேண்டும் "

இவ்வளவு 'சரி'யாக நான் சிந்திப்பதற்கு உதவிய பின்வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

வட இந்திய அரசியல்வாதிகள் மற்றும் மீடியாக்கள்

தமிழகத்து ஆங்கில மீடியாக்கள்

தமிழக காங்கிரசார்.

சோ , சுப்பிரமணிய ஸ்வாமி, எஸ்.வி.சேகர் வகையறா

கருணாநிதி

4 comments:

butterfly Surya said...

நல்ல பதிவு.

தற்போது உடல் நலமா..??

சு.செந்தில் குமரன் said...

நன்றி. நலம் வண்ணத்துப்பூச்சியாரே!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு. இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்.

உடலையும் கவனித்துக் கொள்ளுங்கள்! மீண்டும் வருகிறேன்.

சு.செந்தில் குமரன் said...

நன்றி செந்தில்வேலன் . உங்களுக்கும் அடைக்கும் தாழ் இல்லாத உங்கள் அன்புக்கும்!

Post a Comment