Friday, May 20, 2011

# திகார் முன்னேற்ற கழகம் !




*அல்லற்பட்டாற்றாது அழுத கண்ணீர் ஒன்றே
செல்வத்தை தோய்க்கும் படை .
----வள்ளுவத் தாத்தன் .

செல்வத்தை மட்டுமல்ல .. அது சுயநலமான பாசத்தையும் தோய்க்கும்

* தி மு க .. புதிய விளக்கம் என்ன தெரியுமா....? திகார் முன்னேற்ற கழகம் !

* கவலைப் பட வேண்டாம் கலைஞரே ....
உங்கள் 'ஆதரவுடன் ' உருவான
முள்வேலிக் கம்பிகளை விட ,
திகார் ஜெயில் ஒன்றும்
மோசமானதில்லை !


* யாரங்கே !
கலைஞர் கையில்
ஒரு பேனாவும்
கொஞ்சம் பேப்பரும் கொடுங்கள் ..
மகளின் விடுதலைக்காக
பிரதமருக்கும்
சோனியாவுக்கும்
நிறைய
கடிதம் எழுத வேண்டியுள்ளது .

கொஞ்சம்
தந்தி விண்ணப்பங்கள்
கொடுங்கள் .
மகளின் விசுதலையை
வலியுறுத்தி ...
மத்திய அரசுக்கு
தந்தி அடிக்க வேண்டியுள்ளது .

* இப்போதுதான்
தூறல்
துவங்கியுள்ளது ..
இனிமேல் பெருமழை ....
அப்புறம்தான்
நீங்கள் சொன்னது போல
தூவானம் வரும்
வரிசை
சரிதானே ...

ஐந்தமிழ் அறிஞரே

2 comments:

King Viswa said...

//தி மு க .. புதிய விளக்கம் என்ன தெரியுமா....? திகார் முன்னேற்ற கழகம் //

சூப்பர் விளக்கம் சார்.

கிட்ட தட்ட இருவது பேரிடம் இதனை போனில் கூப்பிட்டு சொல்லி விட்டேன் .

கிங் விஸ்வா
தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்

சு.செந்தில் குமரன் said...

அப்படியா ? உங்கள் ரசனைக்கு மகிழ்ச்சி விஸ்வா

Post a Comment