Wednesday, June 9, 2010

# ஈழத் தமிழனைக் கேவலப் படுத்தும் மலையாளப் படம்







சுரேஷ் கோபி என்ற மலையாள நடிகர் கதாநாயகனாக நடிக்க முகமது ரபி என்பவரின் தயாரிப்பில் பிஜு வட்டப்பாரா என்பவர் இயக்கிய ராம ராவணன் என்ற மலையாளப் படத்தைப் பார்க்க, சென்னையில்ஓர் அழைப்பு வந்தது . 'என்னடா இது திடீரென எலி சட்டை போட்டுக் கொண்டு வருகிறது என்றஎண்ணத்தில் போனால் .....

ரத்தம் கொதித்தது !

மலையாள எழுத்தாளர் மாதவி குட்டி என்கிற கமலாதாஸ் என்கிற கமலா சுரையா என்பவர் பலப்பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ எழுதிய ஒரு நாவலைத் தழுவி எடுக்கப் பட்டிருந்த அந்தப் படம் இலங்கையில் ஈழத் தமிழர் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது . ஆனால் அடிப்படையையே தகர்க்கிற அராஜகம் !

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல , வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல , கண் பார்வை மங்கியவனின் கண்களைப் பிடுங்கி அரைகுறைப் பார்வையையும் அழிப்பது போல , ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஈழத் தமிழர்களின் வாழ்வையும் கேவலமாகச் சொல்லி, தமிழ் நாட்டுத் தமிழர்களையும் அசிங்கப் படுத்தி அவமானப் படுத்தி , போராளிகளைப் பயங்கரவாதிகளாக கோழைகளாக சுயநலவாதிகளாகச் சித்தரித்த அந்தப் படம் நம்மை நிலை குலைய வைத்தது .

இதை எல்லாம் விட முக்கியமாக சிங்களர்கள் நல்லவர்கள், அன்பானவர்கள், புத்தனின் வழி வந்தவர்கள் , தியாக சீலர்கள் , பற்றற்றவர்கள் , என்று மீண்டும் மீண்டும் கூறி தமிழர்களின் போராட்டம் காட்டுத் தனமானது என்று பச்சைப் பொய் சொல்கிறது .அது மட்டுமல்ல இலங்கையில் உள்ள தமிழன் எல்லாம் இங்கிருந்து பிழைக்கப் போனவன்தான் . இலங்கை அவ்னது சொந்த மண் இல்லை என்று மறைமுகமாக பசப்ப முயல்வதோடு இந்திய தேசத்தில் தமிழனுக்கு (தாயகத் தமிழனையும் சேர்த்து )உள்ள உரிமையை விட தமிழ் நாட்டிலே கூட சிங்களனுக்கு அதிக உரிமை உண்டு என்று பிதற்றுகிறார்கள் இந்த படத்தை எடுத்தவர்கள். .

தண்ணீர் விசயத்தில் தமிழனை ஏமாற்றுவது போதாதா? ரத்த விஷயத்திலும் ஏமாற்ற வேண்டுமா? அடப் பாவிகளா!

படத்தில் சொல்லப் படும் கதையைப் பார்த்தாலே எப்பேர்ப்பட்ட வஞ்சகம் இந்தப் படம் என்பது புரியும் . இவர்கள் இந்தப் படத்தை பிலிமில் எடுத்தார்களா இல்லை அயோக்கியத்தனத்தில் எடுத்து அக்கிரமத்தில் பிரதியிட்டார்களா என்ற ஆத்திரம் எழும் .

இவர்கள் சொல்லியிருக்கும் -- இல்லையில்லை விட்டிருக்கும் கதையைப் பாருங்கள்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழன் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குப் பிழைக்கப் போனானாம் . அவன் பெயர் அண்ணாதுரை . அங்கு ஒரு சிங்களவன் அந்தத் தமிழனுக்கு வாழ்க்கை அளித்து வசதி செய்து கொடுத்து , வியாபாரம் செய்ய வைத்து பணக்காரனாக வாழ விட்டானாம் . எப்படி இருக்கு?

(கொழும்பு வீதிகளில் தமிழனை அநியாயமாக அடித்துக் கொன்ற சூழலில் சில மனிதாபிமான சிங்களர்கள் தற்காலிக தமிழர்கக்ளுக்கு அபயம் கொடுத்திருக்கிறார்கள் மறுக்கவில்லை . ஆனால் வாழ்வளித்ததாக எல்லாம் கூறுவதைப் பார்த்தால் .... அய்யகோ!.

பிறகு அந்த சிங்களவன் மகள் -- ஒரு சிறுமி -- அடிக்கடி தமிழகம் வருவதும் உண்டாம் . தமிழகத்தில் உள்ள அண்ணாதுரையின் கிராமத்து வீட்டில் அண்ணாதுரையின் பிள்ளைகளோடு தாயாய்ப் பிள்ளையாய் பழகுவது உண்டாம்


சிங்களவனால் ஓகோவென்று வாழ்ந்த தமிழன் தமிழகம் வந்து சிங்களவன் கொடுத்த காசால் இங்கு நன்றாக வாழ்கிறானாம் . (இந்த காட்சி யோசிக்கும்போதுதான் ஒருவேளை சம்மந்தப் பட்ட நபர்களுக்கு இப்படி ஒரு படம் எடுக்க சிங்களவன் பொட்டி கொடுத்திருப்பானோ? )

இரண்டு குடும்பங்களுக்கு இடையே கடிதப் போக்குவரத்து எல்லாம் இருக்கிறதாம் . ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்கிறார்களாம் (எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ? )

இந்த நிலையில் அந்த அன்பான சிங்களவனை இலங்கையில் ஆயுதம் ஏந்திப் போராடும் தமிழ்ப் போராளிகள் அநியாயமாக கொன்று விடுகின்றனராம் கொன்றவர்களில் ஒருவன் தான் திருச்செல்வம் . கதாநாயகன் .

திருச்செல்வம் ஒரு நிலையில் திருட்டுத்தனமாக தமிழகம் தப்பி வந்து விடுகிறானாம் . அவனது சில போராளி நண்பர்களும் இங்கே இருக்கின்றனராம் . அவர்களுக்கு அண்ணாதுரையின் பிள்ளைகள் உதவுகின்றனர் . ஒரு காலத்தில் அண்ணாதுரை குடும்பத்தோடு வாழ்ந்த‍‍‍‍‍‍‍, இப்போது சிதலமாக இருக்கிற வீட்டில் திருச்செல்வத்தைத் தங்க வைக்கின்றனர் .

அங்கே இலங்கையில், செத்துப் போன சிங்களவனின் மகள் மனோமி யாருமல்லாத அனாதையாகி விடுகிறாளாம் . அவளைக் காப்பாற்ற யாருமே இல்லையாம்

அந்தப் பெண் பிழைக்க வழியின்றி தமிழ்நாட்டில் உள்ள அண்ணா துரையிடம் அடைக்கலம் தேடி வந்து காப்பாற்ற சொல்லி இறைஞ்சுகிறாளாம். அவரும் ரொம்ப நல்லவராம் . அன்போடு ஏற்கிறாராம்.

ஆனால் அவரது மகன்கள் மகள்கள் எல்லோரும் ஒரு சிங்களப் பெண்ணை ஏற்க முடியாது என்று கல் மனசோடு கூறுகின்றனர்களாம் . அவர்கள் கெட்டவர்களாம் .


இந்நிலையில் அண்ணாதுரையின் பழைய வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் திருச்செல்வத்தை மனோமி பார்தது விடுகிறாள் . தன் தந்தையை கொன்றவன் என்பதைத் தெரிந்தும் அவனை மன்னித்து காதல் கொள்கிறாளாம் அவ்வளவு நல்லவளாம் அவள்

சரி திருச்செல்வம் யார் தெரியுமா ? கவிஞர் கண்ணதாசன் போல கவிஞராக ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டு பின்பு தவறான வழியில் போய் பயங்கரவாதியானவனாம் . தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று பயங்கரவாதத்தில் ஈடுபட்டவனாம்

(இப்படி சொல்வதன் மூலம் இலங்கையில் விடுதலைக்காகப் போராடுகிற எல்லோரும் தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள்தான் அந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் அல்ல என்று கதை விட்டிருக்கும் இவர்களை என்ன செய்தால் தகும்? )

அதுவும் பெற்ற தாயைக் கண்டு கொள்ளாமல் பரிதவிக்க விட்டு விட்டு இலங்கை சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு இப்போது மீண்டும் தமிழகம் வந்து மறைந்து வாழ்பவனாம் திருச்செல்வம் அப்படிப்பட்ட திருச்செல்வத்தால் தனது தந்தையே கொல்லப் பட்ட போதும் அவனை மன்னித்து காதலிக்கிறாளாம் அந்த சிங்களத்தி . அது மட்டுமல்ல சிங்கள நாட்டில் புத்தன் பற்றி எழுதப்ப பட்ட பல நூல்களைக் கொடுத்து அவனைப் படிக்கச் சொல்லி "அன்பு பாசம் மனிதாபிமானம் மனித நேயம் எல்லாம் என்ன என்று எங்களைப் பார்த்துப் புரிந்து கொள்" என்கிறாள்

மனோமியே திருச்செல்வத்துக்கு வாழ்வு கொடுக்க முனைந்தும் அண்ணாதுரை மறுக்கிறாராம் . "அவன் பயங்கரவாதி அவனுக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன்" என்கிறாராம்

அதே நேரம் அண்ணாதுரையின் பிள்ளைகள் மனோமியை ஏற்காததால் அவள் மனம் குமைந்து அண்ணாதுரை வீட்டில் இருந்து வெளியேறுகிறாளாம் . அதில் மனம் நொந்த அண்ணாதுரை தன் பிள்ளைகளுக்கு சொத்தில் எந்தப் பங்கும் தராமல் பணத்தை வைத்து முதியோர் இல்லம் வைத்து விடுகிறாராம் .


இதற்கிடையில் போராளியாக இருந்து விட்டு இப்படி காதல் என்று போகலாமா எனக் கேட்கும் மற்ற போராளிகள் கெட்டவர்களாம். உடனே அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்களாம் . உடனே திருச்செல்வம் "நீங்க ரொம்ப காட்டுத்தனமா இருக்கீங்க , உங்க சித்தாந்தம் காட்டுத்தனமா இருக்கு" என்று அவர்களோடு சண்டையிடுகிறான் .

போலீஸ் திருச்செல்வத்தை நெருங்க திருச்செல்வம் தப்பி ஓடுகிறான் . அவன் தாயை மீண்டும் சந்திக்கிறான் , அங்கு பார்த்தால் ... தமிழ்ப் போராளியான திருச்செல்வத்தின் தாய்க்கு பணிவிடை செய்து கொண்டு அங்கு உத்தமி போல வாழ்வது சிங்களப்பெண் மனோமியாம் (எப்பூஊஊஉடி?)

திருச்செல்வத்தின் தாயே தன் மகனிடம்" நீ மனோமியோடு போய் எங்காவது வாழ்" என்று அனுப்ப, திருச்செல்வம் மனோமியோடு போலீசுக்கு பயந்து திருட்டுத்தனமாக ஓட இதுவரை அடைகலம் கொடுத்த போராளிப் பெண்ணே அநியாயமாக திருச்செல்வத்தை சுட்டு வீழ்த்துகிறாளாம்.

சிங்களப் பெண் மனோமி அவனுக்காக கண்ணீர் விடுகிறாளாம்


இந்தப் பைத்தியக்காரப் படம்தான் ராம ராவணன் .

என்ன ஒரு அற்பத்தனம் பாருங்கள் . !

படத்தில் போர்க்களமாகக் காட்டப் படும் ஒரே காட்சி எது தெரியுமா? தமிழ்ப் போராளிகள் சிங்களனை கொல்வது அதுவும் 'அநியாயமாக'க் கொல்வதுதான் .மற்றபடி சிங்களவனுக்கு எறும்புக்குக்
கூட துன்பம் இழைக்கத் தெரியாதாம் . போங்கடாங் ......! போராளிகள் எந்த அப்பாவி சிங்களனையாவது கொன்றதாக வரலாறு உண்டா? அப்படி அவர்கள் நினைத்திருந்தால் இலங்கையில் எத்தனையோ லட்சம் சிங்க‌ளனைக் கொன்றிருக்க முடியுமே !

இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஆடு திருடி அகப்பட்டவன் அடிக்கடி "நான் திருடல... திருடல...." என்று செயற்கையாக முனகுவதுபோல கதாநாயகி அடிக்கடி "நான் அன்பை போதித்த புத்தனின் மகள் " என்று உளறிக் கொண்டே இருக்கிறாள் .
இன்று சிங்கள புத்த்ர்களிடம் அன்பு இருக்கிறது என்று வாதிடுபவன் எவ்வளவு பெரிய மடையனாக மக்கட்டையாக மரமண்டையாக இருக்கமுடியும் .? இந்த படம் எடுத்தவர்களும் அந்த வரிசையில் !.

ஒரு காட்சியில் ஈழத் தமிழர்கள் எல்லாரும் வெறும் சாப்பாட்டு ராமர்கள் எனபது போல ஒரு அற்ப சிந்தையில் விளைந்த காட்சி .


தவிர அந்த சிஙகளப் பெண் தமிழக கிராமத்திலே இஷ்டம் போல சுத்தி வருவாளாம் . அவளை மற்ற தமிழ்ப் பெண்கள் எல்லோரும் "நீதான் எங்க அண்ணாதுரை அய்யா தத்தெடுத்து வளர்க்கிற சிங்களப் பெண்ணா . நல்லா இரும்மா" என்று வாழ்த்தும் ரீதியில் பேசுவார்களாம் . இது போல தமிழகத்தின் எந்த கிராமத்திலாவது இதுவரை ஒரு சம்பவம் நடந்ததாக படம் எடுத்த பக்கிரிகள் காட்ட முடியுமா?


படம் முழுக்க போராளிகளை டெரரிஸ்ட் .. டெரரிஸ்ட் என்று தேவை இல்லாத இடங்களில் எல்லாம் அந்த வார்த்தையைத் திணித்து வசனம் வருகிறது . (படத்தில் பல வசனங்கள் தமிழிலேயே வருகின்றன.) ஒருவேளை கேரளாவில் இருந்து காஷ்மீர் தீவிரவாதத்துக்கு ஆள் அனுப்புகிறவர்களை நினைத்துக் கொண்டு எழுதினார்களோ என்னவோ .


பெற்ற தாயை பரிதவிக்க விடுபவன் போராளி என்று ஒரு சரடு விட்டிருக்கிறார்களே ... அடச்சீ !

பெற்ற தாய், உடன்பிறந்த சகோதரி , , கட்டிய மனைவி இவர்கள் தமது கண் முன்னாலேயே சீரழிக்கப் படுவது கண்டு பொங்கி ஆயுதம் எடுத்தவன்தான் போராளி . டெல்லியில் காரியம் சாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ப‌வர்களுக்கு அது எப்படி தெரியும்?

இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்து போனவர்கள்தான் என்று ஒரு தொனி படத்தில் வருகிறது . உலக வரை படத்தை வரைந்த டாலமியே இலங்கையில் தமிழர்கள் இருந்ததாகத்தான் குறிப்பிட்டுள்ளார் . அதற்குப் பின்பு அங்கு உருவான இனம்தான் சிங்கள இனம் .

மாதவிகுட்டி நாவலை எழுதிய காலகட்டம் வேறு . அப்போது ஒரு வித்தியாசமான கதை முயற்சியில் அவர் இப்படி கற்பனையாக எதையோ உளறி எழுதி விட்டுப் போயிருக்கலாம் .

ஆனால் இப்போது ஓர் இனம் தன் சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப் பட்டு அநியாயமாக அழிக்கப் பட்ட ரத்தக் கறை இன்னும் காய்வதற்குள் இப்படி ஒரு தவறான வரலாற்றை சொல்ல---- அநியாய ஆலாபன செய்ய‍‍‍ இவர்களுக்கு மனது வருகிறது என்றால் ......புரிகிறது!

இந்தியாவில் ‍‍, தென்னிந்தியாவில், தவறான அரசியல் போக்காக தமிழனை வெறுப்பவர்கள் கூட , இலங்கையில் தமிழினத்துக்கு நடக்கும் கொடுமைகளை எண்ணி உள்ளம் கசிகிற வேளையில், அவர்கள் மனதிலும் பொய்யை விதைத்து புளுகை வளர்த்து மேலும் தமிழனுக்கு எதிரான முட்டாள்தனமான கருத்தியலை வளர்க்க.... இலங்கை அரசு செய்யும் சதிக்கு சோரம் போன சிலரின் செயலே இது .

தவிர தமிழ்நாட்டிலும் விவரம் புரியாதவர் மனதில் விஷம் தூவலாமே !

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் , வெளியுறவுத் துறைச் செயலர் , ஐ நா.வின் பான் கி மூனின் உதவியாளர் , இலங்கையின் ராணுவ ஆலோசகர் என்று நான்கு பதவிகளிலும் ஒரே நேரத்தில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழர்களைக் கருவறுத்த பின்பு படம் எடுத்து பசப்புவதா கஷ்டம்?

மனசாட்சியுள்ள மலையாளிகளுக்கு ஒரு கேள்வி .

இலங்கைப் பிரச்னை என்பது சிங்களனுக்கும் மலையாளிக்குமான பிரச்னையாக இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை நீங்கள் எடுப்பீர்களா? மனமுள்ளவர்கள் பதில் சொல்லட்டும் .


இது இப்படி இருக்க , படத்தின் அறிமுகக் காட்சியில் கலந்து கொண்ட நடிகர் சுரேஷ்கோபி "ஒரு தமிழன் எடுக்க வேண்டிய படத்தை மலையாளிகளாக நாங்கள் எடுத்திருக்கிறோம் " என்று உளறியது கொடுமையின் உச்ச கட்டம் .

சுரேஷ்கோபி !

தமிழன் உப்புப் போட்டு சோறு தின்பவன் சுரேஷ் கோபி . இன்னும் எத்தனை துரோகங்கள் துரோகிகள் இங்கு இருந்தாலும் மற்றவர்கள் அளவுக்கு தமிழன் சோரம் போகமாட்டான் .


இன்னும் கேரளாவில் கூட திரையிடப் படாத -- இப்படிப்பட்ட ஒரு ---கேவலமான --தமிழின விரோத --அற்பத்தனமான-- படத்தை ‍‍‍ திட்டமிட்டு --தமிழ்நாட்டில் கொண்டு வந்து இங்கு போட்டுக் காட்டுகிறார்கள் என்றால் என்ன ஆணவம் ? இது யார் கொடுத்த தைரியம்? யாரை ஆழம் பார்க்கும் செயல் ?


ஒன்று உறுதி !
இந்தப் படம் தமிழ்நாட்டில் ஒரு திரையரங்கில் திரையிடப் பட்டால் கூட அது கேவலம் .

அதோடு கேரளா உட்பட உலகின் எந்த மூலையில் இப்படம் திரையிடப் பட்டாலும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது தமிழனின் கடமை மட்டுமல்ல .

நாகரீகம் உள்ள -- தன் வீட்டுப் பெண்களை மானத்துடன் வளர்க்க விரும்புகிற ‍‍ ஒவ்வொரு நல்ல மனிதனின் கடமை கூட !

7 comments:

Kumar said...

We cannot expect other than this from Malayalis.

Shivshankar Menon, M.K.Narayanan are the perfect example of their cheap mindset...How many tamils knows about the injustice committed by them against tamils? (but history will tell)

But we should not blame them as they are unity and achieve what they want, but tamils are still sleeping without knowing wat is happening around.

ssudu, suranai illatha entha sammukammum ippadi thaan avamanapattu nikkanum...

Vincent said...

மலையாளி கொலையாளி என்றொரு வழக்குச்சொல் இங்கு (வளைகுடா நாடுகளில்) உண்டு. அவர்களுக்கு தமிழ்நாட்டு அரிசி, காய்கறி வேண்டும், டீ ஆத்த தமிழ்நாடு வேண்டும், தமிழனின் காசை நக்கித் தின்ன தமிழ் திரையுலகம் வேண்டும். ஆனால் தமிழன் மட்டும் வேண்டாம். அவன் அழிந்தொழிய வேண்டும். நான் சுரணை கெட்டு இருக்கிற வரை தெரு நாய்கள் கூட ஏறி மூத்திரம் போகத்தான் செய்யும்.

மதன்செந்தில் said...

தங்களின் இந்த கட்டுரை எங்களது www.narumugai.com ல் இனைக்கப்பட்டுள்ளது தங்களுக்கு ஆட்சோபனை இருப்பின் தெரிவிக்கவும்.

http://narumugai.com/?p=4109

சு.செந்தில் குமரன் said...

yes kumar

சு.செந்தில் குமரன் said...

வின்சென்ட் உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் .

சு.செந்தில் குமரன் said...

என் வலைப்பூ பெயரை இணைத்து போட்டால் எந்த ஆட்சேபணையும் இல்லை நறுமுகையே !

zertic said...

Hi Senthil,

I saw this movie....why malayalees always disturbing us...i am frustrated. Already they have bad thoughts about tamilians......after watching this movies malayalees will get more strength to oppose tamils. And i have small request recently i saw one malayalam films in youtube MISSION 90 Days....this also one kind of the films ......please post something about the films.......and also in the Rama ravanan film starting the shop owner told other guy i am epecting madurai bus ......thn suddenly the other guy will ask why u always expecting madurai bus....the shop owner says thn who will eat the day before yesterdays foods ur relatives?........i am very shamefull

Post a Comment