Wednesday, April 13, 2011

#காங்கிரசைக் கருவறுப்போம்



பிரபாகரனின் குடும்பத்தாருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் அறிவரசன் .

இந்திய ராணுவத்தின் உதவியோடு சிங்களக் காடையர்கள் ஈழத்தில் தமிழர்ககளை கொன்று குவித்த கோரப் புகைப் படங்களைக் காட்டி, அறிவரசன் அவர்கள் காங்கிரசாருக்கு ஓட்டளிக்கக் கூடாது என்று கடையநல்லூரில் பரப்புரை செய்திருக்கிறார் .

அவரை -----அந்த பெரியவரை ---முதியவர் என்றும் பாராமல் சில காங்கிரஸ் கம்மனாட்டிகள் அடித்து காயப் படுத்தியுள்ளனர் .

நூறடி தூரத்தில் பிரச்சாரம் செய்தும் அதைக் கண்டு கொள்ளவில்லை காங்கிரஸ் வேட்பாளரான பீட்டர் அல்போனஸ்.(நன்றி ஜூனியர் விகடன் )

நமக்கு வந்த சில கடையநல்லூர் நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள் அடிக்க சொன்னதே இந்த பீட்டர் அல்(பை)போன்ஸ்தான் என்கின்றன .

தமிழக மீனவனை தினம் சுட்டுக் கொல்லும் சிங்களவனையோ துணை போகும் மத்திய அரசு கபோதிகளையும் கண்டிக்க துப்பு இல்லாமல் ....

உண்மையை சொன்னதற்காக தமிழ் நாட்டைச் சேர்ந்த வயதில் மூத்த தமிழாசிரியர் அடிபடக் காரணமாக இருந்த பீட்டர் அல்போன்சை இனி கேண்டீன் கான்ட்ராகடராகக் கூட சட்ட மன்ற வளாகத்தில் நுழைய விடக் கூடாது .

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ராஜபக்செவைக் கொண்டு வந்து தாம்பூலம் மடித்து கொடுத்தது தாசித்தனம் செய்தது மத்திய அரசு .

ஆனால் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்காக நாலு தமிழக மீனவர்களை கொன்று உள்ளான் இலங்கை இராணுவத்தான் .

இந்த அநியாயத்தை கண்டு கொள்ளாத காங்கிரஸ் காட்சியை சட்டமன்றத்தில் சதிராட விடடால் அப்புறம் நம் ஊரில் உப்பளங்கள் எதற்கு ?


காங்கிரசை கருவறுப்போம் .

2 comments:

அருள் said...

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

சு.செந்தில் குமரன் said...

அருள் உங்கள் கட்டுரை நான் படித்தேன் . . ஆனால் என்ன செய்ய ? அவர்களை விட இவர்கள் மாபெரும் தமிழின அழிப்பாளர்களாக மாறியதுதான் காலத்தின் கோலம் . இப்படி, கருத்துக்கு முக்கியத்துவம் தராமல் நபருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழன் பிரிந்து அடித்துக் கொள்ளவேண்டும் என்று நியதி போலும்

எனது உங்கள் தொகுதியில் நீங்கள் ஒட்டுப் போடவேண்டிய வேட்பாளர் முழு பட்டியல் பாருங்கள் . எத்த்னை தொகுதிகளில் திமுக , பாமக , விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்களை ஓட்டளிக்க வேண்டியவைகளாக அடையாளம் காட்டியுள்ளேன் என்பதை புரிந்து கொள்ளலாம் . உங்கள் சிந்தனை எனக்கும் உண்டு . ஆனால் இப்போது விடுதலைப்புலிகளின் எதிரிகள் முக்கியமா ? இல்லை ஓட்டு மொத்த ஈழத் தமிழினத்தின் அழிப்பாளர்கள் முக்கியமா என்ற கேள்விதான் முன் நிற்கிறது .

எனக்கு எந்த அரசியல் தலைவரும் முக்கியமில்லை . மக்கள்தான் முக்கியம் . எனவே உங்கள் பதிவின் கடைசி வாக்கியம் என்னை காயப் படுத்தாது . ஆனால் மே பதி மூன்றாம் தேதி அதே வாக்கியம் உங்களுக்கு எதிராக வந்தால் ஆறுதல் தரவும் நான் வருவேன் . மக்கள் தோற்காத வரை எனக்கு யாருடைய ஆறுதலும் தேவையில்லை நன்றி

Post a Comment